உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமூக நீதி குறித்து திமுக அரசு வாய் திறக்கவே கூடாது: நயினார் நாகேந்திரன்

சமூக நீதி குறித்து திமுக அரசு வாய் திறக்கவே கூடாது: நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சமூக நீதி குறித்து திமுக அரசு வாய் திறக்கவே கூடாது என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு;https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q48nwa3i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திமுக ஆட்சியில் சமூகநீதி எல்லாம் தேர்தல் நேர சாயம் தானா?தமிழகத்தில் பாதாள சாக்கடைக் கழிவுகளை நீக்கும் தூய்மைப் பணியாளர்கள் விஷவாயு தாக்கி இறப்பது தொடர்கதையான நிலையில், தற்போது மேலும் இருவர் திருவெறும்பூரில் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.சமூக நீதி குறித்து சந்து பொந்துகளில் எல்லாம் வகுப்பெடுக்கும் அறிவாலய அரசுக்குத் தூய்மைப் பணியாளர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க பணமில்லையா? அல்லது மனமில்லையா?ஒருபுறம் தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தி நல்வாழ்வுக்கு வித்திடும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நமஸ்தே திட்டத்தை செயல்படுத்திவருகிறது, மறுபுறம் முதல்வர் ஸ்டாலின் அரசோ, போதிய உபகரணங்கள் வழங்காது தூய்மைப் பணியாளர்களைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. இது தான் தேசிய மாடலுக்கும் திராவிட மாடலுக்கும் வித்தியாசம்.தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பறித்துவிட்டு, சில லட்சம் ரூபாயை மட்டும் இழப்பீடாகக் கொடுத்து, செய்த தவறை சரி செய்யாது அடுத்த தேர்தலுக்கான விளம்பரத்திற்கு ஆயத்தமாகிவிடும் திமுக அரசு, இனி ஒருநாளும் சமூகநீதி குறித்து வாய்திறக்கவே கூடாது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Mahendran Puru
செப் 23, 2025 18:40

இந்த சமூக நீதி இருக்கட்டும் ஒரு புறம். மாநில நீதி என்னாச்சு? நிதி தர மறுக்கும் பாஜக மத்திய அரசை நீங்கள் ஏன் எதுவும் கேட்பதில்லை? பாவம் அமித் ஷா. இந்த தமிழ் நாடு மட்டும் அவருக்கு புரிபடவே இல்லை. உங்களில் யாருக்காவது புரிதல் இருந்தால்தானே அவருக்கு சொல்ல முடியும்


Nagarajan S
செப் 23, 2025 20:02

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் மத்திய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டு சம கிரக சிக்ஷா நிதியை பெற்றுக்கொண்டுள்ளன. ஆனால் தமிழக அரசு மட்டும் இருமொழி கொள்கையில் உறுதியாக இருப்பதால் இந்த நிதியை இதுவரை பெறமுடியாமல் இருக்கிறது. மற்ற எல்லாவகை நிதிகளும் அனைத்து மாநிலங்களை போல தமிழக அரசும் பெற்றுக்கொண்டிருக்கிறது.


Mario
செப் 23, 2025 18:01

நயினார் நாகேந்திரனை கடுப்பேற்றும் 'அண்ணாமலை கோஷம்' - தமிழக பாஜகவில் நடப்பது என்ன?


Vasan
செப் 24, 2025 01:59

அண்ணாமலை ஓரங்கட்டப்பட்டார். அது 99% பிஜேபி ஆதரவு தமிழ் மக்களுக்கு பிடிக்க வில்லை. எனவே அவர்கள் கொந்தளிக்கின்றனர். இது பிஜேபி மேலிடத்தின் ஹிமாலய தவறு. அண்ணாமலை அவர்கள் 4 வருடங்களாக பிஜேபி வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார், முதுகில் குத்தப்பட்டார். பிஜேபி தலைமை உடனடியாக ஒரு கருத்துக்கணிப்பு செய்ய வேண்டும், மாநிலம் முழுவதும். அண்ணாமலையா, நாகேந்திரனா, யார் பிஜேபி தலைவராக இருக்க வேண்டும் என்பதே அந்த கருத்துக்கணிப்பில் தெரிய வரும் .


Sivakumar
செப் 23, 2025 15:42

சங்கராச்சாரியாரை பார்க்கப்போனால் அவர் நாற்காலியில், சுப்ரமணியசாமி போன்றோர்கள் சமமாக நாற்காலியில் இருக்கலாம். தமிழிசை பொன்னார் அண்ணாமலை போன்றோர்கள் தரையில் தான் அமர்ந்து பேசவேண்டும்.


ஆரூர் ரங்
செப் 23, 2025 16:12

கருணாநிதி எங்களை கூட்டணிப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துவிட்டு நிற்க வைத்தே பேசினார். நீங்களெல்லாம் பொதுத் தொகுதி கேட்கலாமா என்று கூறி அவமதித்ததாக வி.சி கட்சித் தலைவர் கூறினாரே. அதுதான் ஆணவம்.


Sivakumar
செப் 23, 2025 18:52

நான் திமுக காரன், திமுகதான் சமூகநீதியை சிறந்ததுனு எங்கேயும் சொல்லலையே. சரியாய் சொல்லப்போனால் நான் ஒரு RSS பிஜேபி காரன். சரியாக சொன்னால் வாஜ்பாய் பிஜேபி காரன். அதன் உங்களுக்கெல்லாம் பிடிக்காதே.


Rajarajan
செப் 23, 2025 15:09

உண்மை. அப்படி இல்லை என மறுக்கும் எந்த தி.மு.க. வினராவது, தங்கள் குடும்பம் தொடர்ந்து பெறும் இடவொதுக்கீடு மற்றும் அரசியல் பதவியை, மற்றவருக்கு விட்டுக்கொடுத்து உண்டா ?? அல்லது, தங்கள் குடும்பத்தில், தாழ்த்தப்பட்ட பிரிவினரில் பெண் கொடுத்து பெண் எடுப்பதுண்டா ?? அப்புறம் என்னத்துக்கு, சமூக நீதி வெங்காயம் ??


pakalavan
செப் 23, 2025 15:06

சாவர்க்கார் திறக்கலாமா ?


முக்கிய வீடியோ