உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாமகிரிப்பேட்டையில் விபரீதம்; 3 மகள்களை கொன்று தந்தை தற்கொலை

நாமகிரிப்பேட்டையில் விபரீதம்; 3 மகள்களை கொன்று தந்தை தற்கொலை

நாமக்கல்:நாமகிரிப்பேட்டை அருகே தனது மூன்று பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு ரிக் மேனேஜர் தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் திம்மநாயக்கன்பட்டி அடுத்துள்ள வேம்பாகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் கோவிந்தராஜ் 35. இவர் ரிக் வண்டியில் மேனேஜராக பணியாற்றி வந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hap8ibfc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கர்நாடகா சென்ற கோவிந்தராஜ் ஒரு வாரத்திற்கு முன்புதான் வீட்டிற்கு வந்துள்ளார். இவரது மனைவி பாரதி 26, குழந்தைகள் பிரதிக்ஷா ஸ்ரீ 10, ரித்திகா ஸ்ரீ 7, தேவ ஸ்ரீ , 6, மகன் அனீஸ்வரன், 2 மூன்று மகள்களும் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். கோவிந்தராஜ்க்கு வீடு கட்டிய வகையில் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் பாரதியும் மகளிர் சங்கங்களில் கடன் பெற்றுள்ளார். வீட்டிற்கு வந்த கோவிந்தராஜ் கடன் பிரச்னையை நினைத்து வருத்தத்தில் இருந்து உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட பிறகு பாரதியும் அனீஸ்வரனும் படுக்கை அறையில் படுத்து கொண்டனர். அவர்கள் தூங்கிய பிறகு கோவிந்தராஜ் படுக்கையறை கதவை வெளியே தாள் போட்டுவிட்டு ஹாலில் படித்திருந்த தனது மூன்று குழந்தைகளையும் கொடுவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பிறகு தான் மறைத்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். அதிகாலை கதவை கதவை திறக்க முயன்ற பாரதி வெளியே டால் போட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்தார். அறைக்குள் இருந்த குத்து விளக்கை எடுத்து கதவை உடைத்து வெளியே வந்து பார்த்தார். அங்கு குழந்தைகள் மூன்றும் கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர் மேலும் அருகில் கோவிந்தராஜ் இறந்து கிடந்தார் அதன் பிறகு பாரதி தனது உறவினர்களிடம் நடந்ததை கூறி கதறி அழுதார். தகவல் அறிந்த மங்களபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்க கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் எஸ்பி விமலா, ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். 3 மகள்களை கொன்று ரிக் மேனேஜர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

V.Rajamohan
ஆக 05, 2025 20:56

படுபாவி, அந்த பிஞ்சுகளை கொல்ல எப்படி மனம் வந்ததோ..


shakti
ஆக 05, 2025 15:52

தாள் , டால் ,,, என்ன தமிழ்டா இது ??? தாழ் என்று சரியாக எழுதுடா ...


Ramesh Sargam
ஆக 05, 2025 12:43

வக்கில்லாதவன் ஏன் நான்கு குழந்தைகளை பெற்றெடுக்கவேண்டும்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஆக 05, 2025 12:20

கொடுமை கொடுமை கொடுமை ...1000 கோடி கடன் வங்கிகளில் வாங்கியவர்களெல்லாம் நிம்மதியாக அயல் நாடுகளில் சுதந்திரமாக சுற்றுகிறர்கள் ... உங்களுக்கேன் இந்த எண்ணம் ..எண்ணற்றோர் கருத்தரிப்பு மையங்களில் குழந்தைக்காக காத்திருக்கிறர்கள் ...கோவில் கோவிலாக செல்கிறர்கள் .. அவர்களுக்கு கிடைக்காத பாக்கியம் உங்களுக்கு கிடைத்தும் இப்படி செய்து விடீர்களே .. பெரியவர்கள் வாங்கிய கடனுக்கு குழந்தைகள் என்னசெய்யும் ...


தியாகு
ஆக 05, 2025 10:10

பெண் குழந்தைகளை கொலை செய்தது கொடூரம்.


முக்கிய வீடியோ