உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மசூதி திறப்பு விழாவில் மும்மதத்தினர் பங்கேற்பு

மசூதி திறப்பு விழாவில் மும்மதத்தினர் பங்கேற்பு

சாலைகிராமம் : சிவகங்கை மாவட்டம், சாலை கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமையான மசூதி உள்ளது.புனரமைப்பு பணிகள் செய்யப்பட்ட இந்த மசூதி திறப்பு விழாவில் மும்மதத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று பங்கேற்றனர். விழாவிற்காக ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து அனைத்து தெருக்களிலும் வரவேற்பு பேனர்கள் வைத்து, மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர். திறப்பு விழாவிற்கு வந்திருந்த இஸ்லாமியர்களுக்கு, ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் ஜூஸ், மோர் வழங்கி வரவேற்றனர்.அனைத்து மதத்தினருக்கும் பிரியாணி பரிமாறப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை