உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சி வேலுசாமி ஆதரவாளர்கள் உதயநிதி ஆதரவாளர்களும் மோதல்

திருச்சி வேலுசாமி ஆதரவாளர்கள் உதயநிதி ஆதரவாளர்களும் மோதல்

ஆட்சியில் பங்கு, கரூர் சம்பவம் விவகாரம் தொ-டர்பாக, காங்கிரஸ் மூத்த நிர்வாகி திருச்சி வேலுசாமியின் ஆதரவாளர்களும், துணை முதல்வர் உதயநிதியின் ஆதரவாளர்களும், சமூக வலைதளைங்களில் மோதிக் கொண்டது, தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணியில், சலசலப்பை உருவாக்கி உள்ளது. சமீபத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான, திருச்சி வேலுசாமி அளித்த பேட்டியில், 'வரும் 2026ல் காங்கிரஸ் கட்சிக்கு, ஆட்சியில் பங்கு தருவோர் மட்டும்தான், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும். கரூர் சம்பவத்தில் ஆட்சியாளர்களின் வக்கிர புத்தியால், கையாளாகாத அதிகாரிகளால், 41 உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. துபாய்க்கு சென்ற உதயநிதி, திரும்ப கரூர் வந்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் துபாய் சென்றதற்கு என்ன காரணம்' எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த, உதயநிதி ஆதரவாளர்கள், அவர் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'வேலுசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். சுப்பிரமணியசாமியோடு சேர்ந்து ராஜிவ் கொலையில் கூட்டு சதி செய்த துரோகியே, சத்தியமூர்த்தி பவனில் யாரும் உன்னை மதிக்கமாட்டார்கள். அயராது உழைக்கும் உதயநிதியை விமர்சனம் செய்யும் அளவுக்கு, உனக்கு என்ன யோக்கியதை இருக்கு. இண்டியா கூட்டணியை சிதைக்கும் இவர் மீது ராகுல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாவை அடக்கி பேசு, இல்லையேல் அடக்கப்படுவாய்' என்ற வாசகத்துடன், நாமக்கல் மேற்கு மாவட்டம், பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய தி.மு.க., இளைஞரணி சார்பில், கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டது. இதேபோல், கோவையிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கு வேலுசாமி ஆதரவாளர்கள், சமூக வலைதளங்களில், பதிலடி கொடுத்துள்ளனர். வேலுசாமியை ராஜிவ் கொலை சதியுடன் இணைத்து, போஸ்டர் ஒட்டுவது, அரசியல் அறியாமை மட்டுமல்ல காங்கிரஸ் வரலாற்றை அவமதிப்பதும் கூட. தி.மு.க.,வினர், காங்கிரசின் நம்பிக்கையை சிதைக்க முடியாது. வரும் 2026ல் தி.மு.க.,வின் கனவை தகர்க்கப்போகும் சக்தி காங்கிரஸ் தான். 'கை நம்மை விட்டு போகாது' என, உதயநிதி சொல்கிறார். தி.மு.க., எப்போதும் காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் தனித்து சாதிக்க முடியாது என வரலாறு கூறுகிறது. அந்த உண்மையை உதயநிதி நன்றாக அறிந்திருக்கிறார். ராகுலும், ஸ்டாலினும் நண்பர்கள் தான். ஆனால், காங்கிரஸ் அடிமை அல்ல. தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் ஆதரவு தேவையெனில், அதிகாரப்பங்கீடுநியாயமாக வழங்க வேண்டும். காங்கிரஸ் தொண்டர்கள் ஒன்றிணைவோம். காங்கிரசின் குரலை தி.மு.க.,வின் இரட்டை நடிப்பு மூட முடியாது. வரும் 2026ம் ஆண்டு காங்கிரசின் எழுச்சி ஆண்டு என, பதில் கொடுத்துள்ளனர். இப்படி இரு தரப்பினர் மத்தியில் ஏற்பட்டுள்ள மோதல், தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை உருவாக்கி உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Vasan
அக் 15, 2025 18:16

In all fairness, DMK should give few Minister posts to Congress members. Congress had been giving Central Minister post to various DMK members. Though I couldnt tell all the names, some of them are Murasoli Maran, Dayanthi Maran, Kanimozhi, Azhagiri, Raja, Balu, etc. We have 6 months time to May 2026 elections. At least now DMK should fulfill Congress members expectations, which will be good for them to give their full support. Otherwise angry Congress devotees may their vote to opposite parties and will try to make DMK+Congress alliance to lose in elections.


தலைவன்
அக் 15, 2025 13:47

கொஞ்ச நாளா வதந்தி பரப்புறானுவ ?? எப்படியாவது கழகத்தில் இருந்து கையை அகற்றிரலாமான்னு ?? ஆனால் அது வெறும் அல்லக்கை தான்?? திடீர்னு காமராசர் பாசம் ?? ஆனால் திருச்சி சிவா உரைத்தது உண்மையே அதுதான் என்ற உடன் பிசுபிசுத்து விட்டது ?? அப்புறம் திடீர்னு ?? காங்கிரஸ் நிர்வாகிங்க கழகத்துல ஐக்கியமாயிட்டானுங்கன்னு குதிச்சாங்க ?? இப்போ இந்த முன்னாள் செய்தி தொடர்பாளர் எஸ்.வி.ரமணி... வேலு சாமி .என்கிற ஆள் மூலம் மறுபடியும் . ஆனால் ஒன்று மட்டும் மக்களுக்கு நன்கு தெரியும் ?? அது ஓஹோ இன்றைய புதிய வேலுசாமி அல்லக்கையா ??? எவ்வளவு பெமென்ட் வாங்கினீர்கள்..ஐயா ?? ஜண்டா அஜெண்டா பலிக்காது ??? ஹி ஹி ... தினம் தினம் இதுபோல புதுசு புதுசா தினுசா பார்க்கலாம். திருச்சி வேலுசாமி காங்கிரஸ் காரரா என்ன??


Sundar R
அக் 15, 2025 13:00

திருச்சி வேலுச்சாமி அவர்கள் தரையைப் பார்த்துக் கொண்டு தான் நடந்து போகணும். காங்கிரஸ் முதுகின் மீது சவாரி செய்பவர்கள் வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை.


ramesh
அக் 15, 2025 10:10

திருச்சி வேலுசாமி நன்றாக கத்தி பேசுவார். தொண்டை தண்ணீர் வற்றியவுடன் அமைதி ஆகிவிடுவார். திருச்சி DMK கோட்டை .அங்கே போட்டி இட இடம் கிடைக்காது . அந்த விரக்தியில் கத்தி கொண்டு இருக்கிறார் .


Mr Krish Tamilnadu
அக் 15, 2025 09:29

குடும்ப அரசியலை எதிர்ப்போம். நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம். மற்ற கட்சியின் கூட்டணி கட்சிகளை அடிமைகள் என்போம். ரத்தம் எதற்கு என கேலி சித்திரம் வரைவோம். ஆனால் நாங்கள் எங்கள் கூட்டத்தை மறைமுக கொத்தடிமைகளாக தான் நினைப்போம். நடத்துவோம். போக்கு இடம் அற்றவர்களும், அரசியல் பொழுதுபோக்கர்களும் எதிர்ப்பு என்பதை மறந்து விட வேண்டும். சம உரிமை, கருத்து உரிமை எங்களுக்கு மட்டுமே. நாங்கள் எங்களை மட்டுமே நம்புகிறோம். கூட்டணி என்பது எண்ணிக்கை கணக்குக்காக தான் என ஏதோ ஒரு கட்சியின் மனச்சாட்சி சொல்வது கேட்கிறது.


Ramesh Sargam
அக் 15, 2025 08:41

நன்றாக அடித்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்களை எதிர்த்து போட்டியிடும் கட்சிகளுக்கு தேர்தலில் வெற்றிபெற அதிக வாய்ப்புக்கள் கிடைக்கும். திமுக ஒரு பௌர் டுவெண்ட்டி கட்சி என்று தெரிந்தபிறகும் காங்கிரஸ் அவர்களுடன் கூட்டு வைத்திருப்பது சரியல்ல. அப்படி என்றால் காங்கிரஸ் நேர்மையான கட்சியா என்கிற கேள்வி எழும். காங்கிரஸ் எயிட் பார்ட்டி கட்சி.