உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க., நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்; அக்.3ல் விசாரணை

கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க., நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்; அக்.3ல் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து, சி.பி.ஐ., அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, விஜய் தரப்பினர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை அக்டோபர் 3ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது. கரூரில் நேற்று முன்தினம், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இந்த சம்பவம், நாடு முழுதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் திட்டமிட்ட சதி என த.வெ.க., தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xy619pk6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தவெக கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அறிவழகன் தலைமையிலான வழக்கறிஞர்கள் அணியினர், இன்று (செப் 29) இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை தேவை என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.ஆனால் அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ''தசரா பண்டிகை விடுமுறை காலம் என்பதால் ஏற்கனவே அறிவித்தபடி மனுக்களை நாளை (செப். 30) தாக்கல் செய்ய வேண்டும். அக். 3ல் எடுத்துக் கொள்ளப்படும்'' என நீதிமன்ற பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினமே விசாரணை தொடங்க வாய்ப்புள்ளது.

தவெக வழக்கறிஞர் பேட்டி

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்த பிறகு, தவெக வழக்கறிஞர் அறிவழகன் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: கரூரில் சம்பவ இடத்தில் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட தடயங்களை அழிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. அங்கு தடியடி நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மிகப்பெரிய சதி வலை பின்னப்பட்டுள்ளது.கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அவசர கதியில் உடற்கூராய்வு செய்தது ஏன்? கரூர் கூட்டத்தில் போலீசாரின் நிபந்தனைகள் மீறப்படவில்லை. எல்லா இடத்திலும் குடிநீர் கொடுக்கப்பட்டது. திமுகவை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் ஏதோ பெரிய சம்பவம் நடக்கப்போகிறது என முன்கூட்டியே சொல்லி இருக்கிறார்கள். இதனால் இதில் சதி இருக்கிறது என மனுத்தாக்கல் செய்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

M Ramachandran
செப் 29, 2025 18:14

எப்படியாவது ஹியரிங் வாஙகி காலம் தாழ்த்தினால் மக்களைய மறக்க அடித்து விடலாம் என்ற எண்ணம் போலிருக்கு. இதெல்லாம் பழைய டெக்கனிக்.புது டேக்கினிக் தீ மு க்கா வாய் அணுகினால் கொடுக்க படும்.


M Ramachandran
செப் 29, 2025 17:30

ஆனாலும் தரப்பினர் மீது குற்றம் சுமப்பதற்கு முன்ன ஆராய்த்தால் நலம். அவர்கள் அனுபவம் அவர்களின் அரசியல் பலம் இதை எண்ணி பார்க்க வேண்டும் அவர்கள் கோர்ட்டில் வாதடா அரசு பணம் செலவழிக்கும் உஙக கேஸுலே உஙக கட்சி பணம் செலவழியும். கேள்வி உங்க மீதே திரும்ப காரணம் உள்ளது. எதற்கும் சிந்திப்பது நன்று.


M Ramachandran
செப் 29, 2025 17:07

எங்கப்பன் குதிருகுள்ளே இல்லை என்பது போல வலிய போய் தலையை கொடுப்பானேன் பிறகு குத்துதே கொடையுதே என்று அலற வேண்டி இருக்கும். அது தான் தீர்மானம் பண்ணிடுங் களே புஸ புஸ் ஆனந்தை பலி கொடுக்க அத்துடன் நிறுத்திக்க வேலாண்டியது தானே நீதி மன்றத்தில் கிழி கிழினு கிளிபாங்களே அது அவசியம் தானா?


V Venkatachalam
செப் 29, 2025 15:55

அவியலா பண்ணுவாங்க ன்னு ஓபனா சொன்ன சாராய யாவாரி தான் இப்போ ஆட்சியில் இருக்காரு. இவரு அவியல் பண்ணாம பர்பெக்ட்டா அரசியல் தான் பண்ணுவாரு. த வெ க வை மாட்டி வைத்து தலையெடுக்க விடாமல் செய்ய வேண்டிய அத்தனை தப்ப தாளங்களையும் திருட்டு திமுக செய்யும். தனக்கு எதிராக எவன் பேசினாலும் அவனாக ஓடிப்போகும் படி செய்வதில் திமுகவை மிஞ்ச யாருமேயில்லை என்பதே உண்மை. 40 அப்பாவிகள் இறந்து போனது திமுகவுக்கு கிடைத்த லட்டு. ஏற்கனவே திருடியது தெரியாமல் லட்டு திருடி சாப்பிடுவதில் பலே கில்லாடிங்க.


Loganathan Balakrishnan
செப் 29, 2025 15:48

எல்லாம் tvk மேல் தப்புனு இருந்தாலும் கள்ளக்குறிச்சியில் 100 பேர் இறந்த போது இந்த இரண்டு அமைச்சர்கள் அழுதார்களா எப்பா என்ன ஒரு நடிப்பு அந்த வீடியோ பார்க்கும்போது சினிமாவில் நடப்பது நிஜத்தில் நடந்து இருக்கு


angbu ganesh
செப் 29, 2025 15:30

எது எப்படியோ இறந்தவர்கள் இறந்தவர்கள்தான் இனியாவது தலைவர்கள் திருந்தணும் கரூர் யார் கட்டுப்பாட்டில் இருக்குன்னு எல்லாருக்குமே தெரியும் எனக்கு கூட tvk கட்சி மேல எல்லாம் நம்பிக்கை இல்லை ஆனா இது கைப்புண்ணுக்கு கண்ணாடி போலத்தான்


ஆசாமி
செப் 29, 2025 15:19

., மாதிரி ஓடிட்டு இப்ப கோர்ட்டை நாடுவது சரியா இருக்குமா


Suresh
செப் 29, 2025 15:01

பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள்தான் திருந்தனும்.


கனோஜ் ஆங்ரே
செப் 29, 2025 15:00

இதுலந்தே நீ எவ்வளவு புளுகுற...ங்றது தெரியுது பாரு...?


Gnana Subramani
செப் 29, 2025 14:58

விஜய் வீட்டுக்குள் ஒளிந்து கொண்டு இருப்பதற்கும் திமுக சதி தான் காரணமா