உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் துயர சம்பவ வழக்கில் முன்ஜாமின் வேண்டும்: தவெக ஆனந்த், நிர்மல்குமார் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்

கரூர் துயர சம்பவ வழக்கில் முன்ஜாமின் வேண்டும்: தவெக ஆனந்த், நிர்மல்குமார் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: கரூரில் 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் கோரி தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.செப்.27ம் தேதி கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய்யின் பிரசார பயணம் விபரீதத்தில் முடிந்தது. விஜய்யை காண ஆர்வத்துடன் காத்திருந்தவர்களில் 41 பேர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியாகினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=drehh67k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு ஒருநபர் ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவல்துறை தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் முதல் குற்றவாளியாக மதியழகன் சேர்க்கப்பட்டு உள்ளார்.கடந்த 2 நாட்களாக அவர்களை தீவிரமாக தேடிய போலீசார், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மதியழகனை நேற்று கைது செய்தனர். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கரூர் தவெக நிர்வாகி மாசி பவுன்ராஜ் என்பவரை இன்று (செப்.30) காலை கைது செய்தனர்.இந் நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோரை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் அவர்கள் இருவரும் முன் ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் இன்று மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர்.மனுவில் ஆனந்த் கூறி உள்ளதாவது; கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் எங்கள் மீது எந்த தவறும் இல்லை. காவல்துறையினர் தங்கள் கடமையை செய்ய தவறிவிட்டனர். அரசு எந்திரங்கள் தங்கள் தோல்வியை மறைக்க எங்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. விஜய் பிரசாரம் செய்ய சரியான இடம் ஒதுக்கித் தரவில்லை. இந்த வழக்கில் காவல்துறை கைது செய்யக்கூடும் என்பதால் தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளார். இவர்களின் முன்ஜாமின் மனுக்கள் வரும் வெள்ளிக்கிழமை (அக்.3) விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

KANNAPIRAN G
செப் 30, 2025 20:20

முன்ஜாமீன் முதலில் செஸ்ஸன்ஸ் கோர்ட்டில்தான் தாக்கல் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்கிறது. அதனால் என்ன எங்க வழி தனிவழி என்கிறார்கள் அரசியல்வாதிகள்.


KANNAPIRAN G
செப் 30, 2025 20:04

முன் ஜாமீன் விண்ணப்பம் முதலில் செஸ்ஸன்ஸ் கோர்ட்டில்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்கிறது. அதனால் என்ன எங்க வழி தனிவழி என்கிறார்கள் அரசியல்வாதிகள்.


VENKATASUBRAMANIAN
செப் 30, 2025 18:23

இதை விசாரிப்பதை விட விடுமுறை முக்கியம். எப்படி வழக்குகள் தேங்காமல் இருக்கும். அரசும் விஜய் நிர்வாகிகளும் குற்றவாளிகளே


Raja
செப் 30, 2025 15:52

41 பேர் இறப்புக்கு காரணமான இவனுகளை சும்மா விடக்கூடாது. ஆதவ் என்பவனையும் புடித்து உள்ளே போட வேண்டும். விஜய் கட்சியில் இருக்கும் ரசிகர்கள் கொஞ்சம் கூட நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டி போல் நடந்து கொள்பவர்கள்.


Murugesan
செப் 30, 2025 18:09

திமுக அரசாங்க ஊழியர்கள் என்னத்த கூந்தலுக்கு அந்த இடத்தை கொடுத்தாங்க , பத்து ரூபா கொள்ளைக்காரன்


1968shylaja kumari
செப் 30, 2025 19:47

மற்ற கட்சியினருக்கெல்லாம் நாகரீகமானவர்களா . சரி சென்னையில் நடந்த ஏர் ஷோ வில் 5 பேர் மரணமடைய யார் காரணம். ?


Sekar
செப் 30, 2025 14:25

உண்மையில் நீதி உயிர்ப்புடன் இருக்குமானால் இந்த சம்பவம் செய்த கொலைகாரர்கள் யாரையும் வெளியே விடக் கூடாது.


Balasubramanian
செப் 30, 2025 14:14

எத்தனை சினிமா பார்த்து இருக்கிறோம்? அடுத்த ஐந்து நாட்கள் விடுமுறை! முன் ஜாமீன் மனு பிறகு விசாரிக்க படும்


Rajarajan
செப் 30, 2025 13:39

சுத்தம். இதை நாங்க முன்கூட்டியே கணிச்சி சொல்லிட்டோம்.


Ramesh Sargam
செப் 30, 2025 12:41

சம்பவத்தில் பலியானவர்கள் மீது உண்மையான கரிசனம் இருக்குமென்றால், நீதிமன்றம் முன்ஜாமீன் கேட்டவர்களுக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது. மாறாக அவர்களை கைதுசெய்து விசாரணை நடத்தி அவர்களை தண்டிக்கவேண்டும்.


சமீபத்திய செய்தி