உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் செல்ல அனுமதி கேட்டு டிஜிபியிடம் தவெக மனு

கரூர் செல்ல அனுமதி கேட்டு டிஜிபியிடம் தவெக மனு

சென்னை: கரூர் செல்ல அனுமதி கேட்டு தவெக தலைவர் நடிகர் விஜய் தரப்பில் டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இது குறித்து அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது; போன சனிக்கிழமை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, 41 உயிர்கள் பலியாகின. அதற்காக மக்களை கரூர் வந்து நேரில் சந்திக்க வேண்டும் என்பதற்காக அனுமதி கேட்டு, நடிகர் விஜய் ஒரு கடிதத்தை நேற்று இ மெயில் மூலமாக அனுப்பி உள்ளார். இன்று அதை நேரிலும் கொடுப்பார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yhpzb05g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதற்கு முன்னதாக நடிகர் விஜய் அவர்களிடம் (கூட்ட நெரிசலில் பலியான பாதிக்கப்பட்டவர்களின் தரப்பை குறிப்பிடுகிறார்) வீடியோ காலில் பேச வேண்டும் என்று விருப்பப்பட்டார். அதனால் நேற்று முன்தினம், நேற்று கரூரில் இருக்கும் 33 பேரிடம் அவர் வீடியோ கால் மூலமாக பேசினார், ஆறுதலை சொன்னார்.என்னதான் ஆறுதல் சொன்னாலும் அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது. இருந்தாலும் நான் வந்து உங்க கூட இருப்பேன், விரைவில் நேரில் வந்து சந்திக்கிறேன் என்று சொன்னார். இப்போது கரூரைச் சுற்றியுள்ள மற்ற மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் வீடியோ காலில் பேசுவார்.எல்லாரும் என்ன சொன்னாங்கன்னா.. சார் (நடிகர் விஜய்) உங்க மேல தப்பு இல்லை, நீங்க வந்து தைரியமாக இருக்கணும், உங்க ஆறுதலுக்கு நன்றி, நீங்க சொன்ன வார்த்தைகள் எங்களுக்கு ஆறுதலாக இருக்கு. விடாதீங்க, தொடர்ந்து fight பண்ணுங்க, நாங்கள் எப்பவும் உங்க கூட இருப்போம் என்று எந்த எதிர்பார்ப்பும் இன்றி எல்லா மக்களும் அதையே தான் சொன்னாங்க.டிஜிபிக்கு இமெயில் மூலம் லெட்டர் கொடுத்தாச்சு. எந்த மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் பண்ணணும் என்று நாங்க ஒரு கோ ஆர்டினேஷன் (co ordination) மீட்டிங் கேட்டு இருக்கோம். இன்னொரு முறை இதுபோன்ற அசம்பாவிதம் நடக்கிறது யாருக்குமே நல்லது இல்லை. எனவே ஒரு முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அவர்களை (பாதிக்கப்பட்டவர்கள்) சந்திக்க வேண்டும் என்பது தான் நடிகர் விஜய்யின் விருப்பம்.விஜய்யின் மீது மிகுந்த அன்பு கொண்டதால் கூட்டத்திற்கு வந்திருந்தனர். யாரும் அவர் மீது தப்பு சொல்லவில்லை. அதுதான் உண்மை. மனசு விட்டுவிட வேண்டாம், தைரியமாக இருங்க என்று அனைவருமே சொன்னார்கள். ஒருவருக்குமே கட்சி மீதோ, நடிகர் விஜய் மீது தவறான எண்ணம் ஏதும் இல்லை. அதுதான் உண்மை. என்ன நடந்திருக்கும் என்று ஒரு எண்ணங்கள் இருக்கு, சில நம்பிக்கைகள் இருக்கு.விசாரணை முடிந்த பின்னர் என்ன நடந்திருக்கும் என்பது தெரிய வரும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த நேரத்தில் அரசின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்று நாங்கள் கருத்து சொன்னால் அது சரியாக இருக்காது. விசாரணை நடக்கட்டும், அதை பார்க்கலாம்.இவ்வாறு அருண்ராஜ் பேட்டியளித்தார்.இதனிடையே, கரூர் செல்லும் போது, நடிகர் விஜய்க்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி தவெக சார்பில் அக்கட்சியின் வக்கீல் அறிவழகன் என்பவர் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Rajah
அக் 08, 2025 18:16

அமைதியாக இருந்து காரியத்தை சாதிக்க நினைக்கின்றாரோ தெரியவில்லை ? கரூர் செல்ல அனுமதி கேட்டு டிஜிபியிடம் தவெக மனு கொடுத்ததே தனக்கு உள்ளூர் தாதாக்களால் ஆபத்து இருப்பதை நிரூபிப்பதற்காகவே. சம்பவ தினதன்று செல்லாதற்கு வலு சேர்க்கும் காரணமாகவும் இருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களே அவரைக் குற்றம் சும்துவதாக்காத தெரியவில்லை.


naranam
அக் 08, 2025 17:25

கடைசியில் கதை இப்படியாகி விட்டதே! மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதமர், முதல்வர் என அனைவரையும் ஏக வசனத்தில் மரியாதை இன்றி பேசாமல் நாகரிகமாக பேசியிருந்தால் யாராவது இப்போது துணை நின்றிருப்பார்கள். எல்லாரையும் பகைவர்கள் போல் கருதி திமுக கூட்டணியின் கீழ்மட்ட பேச்சாளர்கள் போல வாய்க்கு வந்தபடி ஏசியிருக்க வேண்டியதில்லை. இதை விஜய் இப்போதாவது உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்.


Rajarajan
அக் 08, 2025 17:16

இதெல்லாம் ஒரு ட்ரிக். வெளியே வந்தால் எங்கே கைது செய்துவிடுவார்களோ என்ற பயம். எனவே, காவல்துறையிடம் அனுமதி வாங்கினால், கைது செய்யமாட்டார்கள் என்ற குருட்டு நம்பிக்கை. நீதித்துறை சொல்வதைத்தான் காவல்துறை கேட்கும்.


Easwar Kamal
அக் 08, 2025 16:52

அரசியல் காது குட்டி. அரசியல் வெறி இருந்தால் கரூர் விட்டு வெளியில் வந்து இருக்க கூடாது. அங்கயே இருந்து அவர்களுக்கு உதவி செயது விட்டு வந்து இருந்தால் மக்கள் மனதில் இடம் பெற்று இருக்கலாம். காலம் கந்து விட்டது இனி இழந்ததை மீட்டு எடுக்க முடியாது. நன்றக தெரிகிறது விஜயை இயக்கிய அந்த ரெண்டு பேர் இப்போது இல்லை. இதன் மூலம் விஜய் தானாக இயங்க முடியாது என்று தெள்ள தெளிவாக தெரிகிறது. இப்போது இருக்கின்ற நிலையில் எடப்பாடிவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால் ஓளிய தனியாக நின்றால் டெபாசிட் கூட கிடாய்க்காது விஜய்க்கு சேர்த்து தன .


BHARATH
அக் 08, 2025 16:48

இது என்ன புது பிட்டு பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைத்து குடும்பமுமே விஜய்க்கு ஆதரவா இருக்கு.. நீங்க என்னன்னா கர்மா சுர்மான்னு கதை விடுறீங்க


Sun
அக் 08, 2025 14:46

நல்ல வேளை. நான் கரூர் செல்ல வேண்டும் . எனது பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டது. புதிய பாஸ்போர்ட் கொடுங்கள் என சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் செல்லாமல் விட்டாரே? அது வரை சந்தோசம்.


Ajrjunan
அக் 08, 2025 13:55

விஜய்க்கு எந்த தடையும் போடலியே. ஒ. மேலும் ஏதாவது அசம்பிவிதம் நடந்தால் முதல்வரை பொறுப்பு சாட்டலாம்ன்னு இந்த விஜயை பின்னால் இருந்து இயக்கும் அரசியல் டைரக்டர் ஐடியா கொடுத்திருப்பார் போல.


karthik
அக் 08, 2025 13:51

இதெல்லாம் வெத்து பந்தா... கட்சிக்காரன் யாரும் வரக்கூடாது என்று சொல்லிவிட்டு நீங்கள் கரூர் செல்லும் நேரம் யாரிடமும் சொல்லாமல் போய் பார்க்கலாம்


திகழ்ஓவியன்
அக் 08, 2025 13:06

தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு எதிராக நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை வைத்த பின்பும் கூட முதல்வர் ஸ்டாலின் இதுவரை அக்கட்சிக்கு எதிராக பெரிய ஆக்சன் எடுக்க உத்தரவிடவில்லை. இது தவெக விஜய் தரப்பை குழப்பத்திற்கு ஆழ்த்தி உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவே ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால்.. விஜயை திருச்சியில் வைத்தே கைது செய்து இருப்பார். ஆனால் ஸ்டாலின் இங்கே சுதாரித்துக்கொண்டார். விஜயை கைது செய்தால் அது கரூர் பிரச்சனையாக இல்லாமல் அரசியல் பிரச்சனை ஆகிவிடும். அது விஜய்க்குத்தான் மைலேஜ் தரும். விஜய் ரசிகர்கள், சில மக்கள் கூட இதை விஜய்க்கு சாதகமாக பார்த்துவிடுவார்கள். விஜய்க்கு அரசியல் ரீதியாக சாதகமாக மாறிவிடும். இதனால் உச்ச நீதிமன்றம் போன்ற மேல் கோர்ட் உத்தரவிட்டால் பார்க்கலாம். அதுவரை நாமே இறங்கி கைது செய்ய வேண்டாம் என்று ஸ்டாலின் பொறுமையாக இருக்கிறாராம். விஜய்க்கு இது சாதகமாக போக கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். கைது செய்து இவனை பெரிய தியாகி ஆக்க கூடாது என்று வெறித்தனமா இருக்கார்


Ravi
அக் 08, 2025 14:43

உண்மைதான். அப்படியே ஒளிந்து கொண்டே திரியட்டும் என விட்டு விட்டார் ஸ்டாலின். அதுதான் அரசியல் சாதுர்யமும் கூட


duruvasar
அக் 08, 2025 14:49

அப்படியெல்லாம் ஒரு புண்ணாகும் இல்லை கைது செய்தால் பெயில் பெட்டிஷனிலேயே கோர்ட்டில் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏற்றப்பட்டுவிடும் என்ற பயம்


mathi
அக் 08, 2025 13:00

ஏன் இவரை கரூருக்கு போகக்கூடாது என்ற தடையும் அரசாங்கத்தால் போடப்பட்டிருக்கிறதா அப்படி ஒரு தடையே இல்ல போனa தான் போக வேண்டியது தானே இன்னும் பிரேம் பண்ணிட்டு இன்னும் இது அரசியல் ஆக்கிட்டு இன்னும் பிராடூ வேலை தான் பார்க்கிறான்


புதிய வீடியோ