உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கடத்தப்பட்ட சோமாஸ்கந்தர் சிலை திருப்பி தர அமெரிக்கா சம்மதம்

 கடத்தப்பட்ட சோமாஸ்கந்தர் சிலை திருப்பி தர அமெரிக்கா சம்மதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட, சோமாஸ்கந்தர் வெண்கல சிலை உட்பட மூன்று சிலைகளை ஒப்படைக்க, அமெரிக்கா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவாரூர் மாவட்டம் ஆலத்துாரில் உள்ள விஸ்வநாதர் கோவிலில், சிவன், பார்வதி ஆகியோருடன், முருகன் அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்தர் சிலையை, மர்ம நபர்கள் சில ஆண்டுகளுக்கு முன் திருடிச் சென்றனர். இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். ஆனால், துப்பு துலக்க முடியவில்லை. கடந்த 2022ல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி.,யாக இருந்த ஜெயந்த் முரளி தலைமையில், தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில், முருகன் சிலை அகற்றப்பட்ட நிலையில், சிவன், பார்வதி தேவி வெண்கல சிலை இருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, அந்த சிலை தொடர்பான ஆவணங்களை, அமெரிக்க அரசிடம் ஒப்படைத்து, அவை தமிழகத்தின் கோவிலில் இருந்து திருடிச் செல்லப்பட்டதை, தமிழக போலீசார் நிருபித்தனர். அதைத்தொடர்ந்து, சிலை மட்டுமின்றி சோமாஸ்கந்தர், சுந்தர மூர்த்தி நாயனார், பரவை நாச்சியார் மற்றும் சிவ நடராஜர் சிலைகளை ஒப்படக்க அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

prakash
ஜன 31, 2026 11:17

பல வருடமா சிலய வச்சு படிச்சும் ஒன்னும் புரியல, அதான் திருப்பி தர முடிவு பண்ணிட்டோம், இனி இந்தியாவில யாராவது தெரிந்தால் சொல்லவும்!


ramesh
ஜன 31, 2026 10:42

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு என்ன ஆவணம் தேவை படுகிறது? . பழங்கால இந்து சாமி சிலைகள் இந்தியாவில் மட்டுமே உண்டு . அவர்களிடம் இருப்பது திருடப்பட்ட சாமி சிலை என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும் . அந்த நாட்டில் இருப்பது கிறிஸ்தவம் மட்டுமே . நியாய படி பார்த்தால் திருட்டு பொருளை தெரிந்தும் திருடர்களிடம் இருந்து வாங்கியதாக அந்த ம்யூஸியம் பொறுப்பாளர்களிடம் தான் விசாரணை செய்யவேண்டும் . யாரிடம் இருந்து இந்த சாமி சிலைகள் வாங்க பட்டதோ அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் . அப்போது தான் உண்மையான திருடன் சிக்குவான்


Kasimani Baskaran
ஜன 31, 2026 07:08

அரை நூற்றாண்டாக திராவிடப்பதர்கள் ஆளும் மாநிலத்தில் சிலைகள் கோவில்கள் மாயமாவது வாடிக்கை. இந்துக்களுக்கு பக்தி வேண்டும்.


ramesh
ஜன 31, 2026 11:37

சாமி சிலையை திருடுபவர்களுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் இதை மோடி சட்டமாக கொண்டுவரவேண்டும் . இல்லை என்றால் சாமி சிலைகள் திருடப்படுவதை தடுக்க முடியாது .


புதிய வீடியோ