உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யாரையும் சந்திக்க விரும்பாத விஜய்

யாரையும் சந்திக்க விரும்பாத விஜய்

சென்னை: த.வெ.க தலைவர் விஜய் வீட்டில், அவரை சந்திக்க வந்த கட்சி நிர்வாகிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், கரூரில் மேற்கொண்ட பிரசாரத்தில், கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, சென்னையில் விஜய் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில், இ.சி.ஆரில் இருந்து, விஜய் வீட்டுக்கு செல்லும், கேசுவரினா டிரைவ் தெருவில் போலீசார் தடுப்பு அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, த.வெ.க., நிர்வாகிகள் சிலர், விஜயை சந்திக்க, சென்னையில் அவரது வீட்டின் முன் கூடினர். அப்போது, விஜயுடன் இருக்கும் முக்கிய நிர்வாகிகள், ''விஜய் இப்போது யாரையும் சந்திக்க விரும்பவில்லை. இங்கு கூட்டம் சேர்க்காதீர்கள். இது வேறுவிதமான பிரச்னையை ஏற்படுத்தும்'' என அறிவுறுத்தினர். இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 67 )

M Ramachandran
செப் 29, 2025 18:10

இது போன்ற தருணத்தில் வெளியுலகை சந்திக்க மனோ தைரியம் வேண்டும். கோழை கள் சிந்திக்க திறனற்றவர்கள் ஆகி விடுவார்கள்


Er.Mohamed Ibrahim
செப் 29, 2025 13:43

Every angle should be thoroughly and impartially investigated...power cut and plenty if ambulances were immediately rushed into crowd and ruling party functionaries were already present in GH ...throwing chappals at Vijay and many using sharp weapons inside the crowd and scratched women and children...miscreants mingled deliberately into the crowd to hovac /confusion and chaotic situation and eventually stampede and they have successfully carried out their plans


vns
செப் 29, 2025 13:32

விஜய் கைது செய்யப்படவேண்டும். பதவிக்காக மக்களை பலியிடும் இதுபோன்ற அரசியல்வாதிகள், கான்க்ரோஸ் போன்ற கட்சிகள் நாட்டிற்கு ஆபத்து


Rathna
செப் 29, 2025 13:28

போலி திராவிடம் மக்கள் மூளையை மழுங்க அடித்து விட்டது. 1.அதிக அளவு சினிமா மோகம் 2 டிவி இல் சீரியல் மோகம் 3 நடிக நடிகையர் பின்னால் ஓடும் கூட்டம் 4. சினிமா கச்சேரியில் கூட்டம் 5 சட்டத்தை மதிக்காத, அதிக அளவு விசிலடிச்சான் குஞ்சுகள் 6. குடி போதை, கஞ்சா, போதை வஸ்துகள் 7 சினிமாக்காரானும் அரசியல்வாதிகளும் நாட்டை திருத்தி விடுவான் என்ற போலி நம்பிக்கை 8 இன்றே வாழ்ந்து தீர்த்து வேண்டும் என்ற பேராசை 9 பிறந்த குழந்தையின் கையில் மொபைல் 10 கடன் வாங்கி பிறருக்காக வாழும் வாழ்க்கை 11 எங்கு போனாலும் தேவையில்லாத கூட்டம் 12 கனவுலகில் மூழ்கி நிஜத்தை தொலைத்த மக்கள்.. இவை அனைத்தும் நாட்டை சீரழிகிறது. இதற்கு உயிரை பலி ஆக்குகிறவர்கள், AC ரூமில்


kumar c
செப் 29, 2025 13:07

உன் லாஜிக் படி நடந்து இருந்தால் விஜய் தான் அடுத்த CM. என்ன தவறு செய்தேன்னு போட்டோ போட்டே ஜெய்திருக்கலாம். இவனுக்கு ஐடியா கொடுக்கிறவன் சென்னையில் அதுதான் பறந்துட்டன். தானா யோசிக்க முடியாதவனுக்கு அறியணையாம் .


திகழ்ஓவியன்
செப் 29, 2025 12:44

12 மணிக்கு வாரேன் என்பவன் ஏண் 7 மணிக்கு வருகிறான், இன்னும் கூட்டம் சேரட்டும் என்று mass காட்ட தானே, சரி அதற்கு தகுந்தபடி வந்து wait பண்றவங்க ளுக்கு சாப்பாடு பாக்கெட், தண்ணீர் பாட்டில் கொடுத்து இருக்கலாமே, ஏன் செய்யவில்லை, நாமக்கல் இல் வருகிறேன் என்று சொன்ன நேரம் 9 மணி, ஆனா சென்னை இல் இருந்து கிளம்பியது 8 45 அப்ப வேண்டும் என்றே கூட்டம் கூட்ட வேண்டும் நெரிசல் ஏற்பட வேண்டும் மாஸ் காட்ட வேண்டும் என்று தானே செய்கிறார் , அப்ப விளைவு இப்படி தான் இருக்கும்


Suresh
செப் 29, 2025 15:14

கரூரில் உள்ள மக்கள் வந்தால் போதாது என்று கட்சியினர் மூலம் பக்கத்து மாவட்டங்களில் இருந்து மக்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். எனக்கு வரும் கூட்டம் எப்படி என்று பல கூட்டங்களில் கொக்கரித்தவன் அதைவிட அதிகமாக கூட்டம் கூடவேண்டுமென்று ஆணவம் பிடித்து ஆடினான். கூட்டம் அதிகமானால் அவர்களுக்கு என்ன உதவி தேவைப்படும் என்ற எந்த முன்னேற்பாடும் இல்லாமல் அதிக நேரம் கடத்தி மக்களை வதைத்தது மட்டுமல்லாமல் ஆபத்து என்று அறிந்தும் ஓட்டம் பிடித்து ஓடிவனுங்க கும்பல் எதற்கும் லாயக்கில்லை என்பதை மக்கள் நன்கு உணரவேண்டும். இந்த கூத்தாடியை நம்பி சுற்றும் இளைஞர்களும் நன்றாக சிந்திக்கவேண்டும்.


vidhu
செப் 29, 2025 12:40

ஸ்கிரிப்ட் எழுதிக்குடுத்து மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கும் தலைவரிடம் வேறு என்ன மாதிரி attitude எதிர் பார்க்க முடியும். ஓட்டு பிரிக்க களம் இறக்கப்பட்ட சோசப் விசய் கிட்ட எப்படி நல்ல விதமான approach எதிர் பார்ப்பது. part time அரசியல் வேலை செய்கிறார்


Rajeswary Raji
செப் 29, 2025 13:58

உன் வேலைய paru


Suppan
செப் 29, 2025 16:35

துண்டு சீட்டு இன்னொன்று A4. இருவருக்கும் படிப்பதில் தகராறு.


ramesh
செப் 29, 2025 12:26

முதலில் அரசியல் கட்சி தலைவர்கள் பஸ் மூலம் சென்று பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்


karupanasamy
செப் 29, 2025 12:02

இவ்விரண்டுகளை செடியை அழிக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.


Ramesh Sargam
செப் 29, 2025 11:37

கரூர் விபத்து ஆட்சியில் உள்ளவர்களுக்கு மட்டும் பாடம் அல்ல. ஆட்சியில் உள்ளவர்களுக்கும், ஆட்சிக்கு வர நினைப்பவர்களுக்கும், ஒட்டுமொத்த காவல்துறைக்கும் ஒரு பாடம். மேலும் சொல்லப்போனால் நீதிமன்றங்களுக்கும் ஒரு பாடம். எப்படி? இனி இதுபோன்ற விபத்துக்கள் நேராதவண்ணம் கட்சி கூட்டங்களை நடத்தவேண்டும் என்று அனைத்து கட்சியினருக்கும் ஒரு ஆணை பிறப்பிக்கவேண்டியது நீதிமன்றங்களின் கடமை. மீறும் கட்சிக் தேர்தலில் போட்டியிடமுடியாதபடி கடுமையான ஒரு ஆணை பிறப்பிக்கவேண்டியது நீதிமன்றங்களின் பொறுப்பு.


Dhait Branch
செப் 29, 2025 18:09

நான் உங்கள் கருத்தை வரவேற்கிறேன்


Ramesh Sargam
செப் 30, 2025 01:57

என் கருத்தை வரவேற்ற Dhait Branch அவர்களுக்கு நன்றி.


சமீபத்திய செய்தி