உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விழுப்புரத்தில் அதிர்ச்சி: மணல் கடத்தியவனை பிடிக்க முயன்ற எஸ்ஐ மீது தாக்குதல்

விழுப்புரத்தில் அதிர்ச்சி: மணல் கடத்தியவனை பிடிக்க முயன்ற எஸ்ஐ மீது தாக்குதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கடத்தியவனை பிடிக்க முயன்ற போலீஸ் எஸ்ஐ மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோர கிராமங்களில் மணல் கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது உண்டு. இதையறிந்த போலீசார், தொடர்ந்து கடற்கரையோர கிராமங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இரவு நேரங்களில் ரோந்து பணிகளையம் அவர்கள் முடுக்கி விட்டிருந்தனர். கடந்த மாதம் பிடாகம் பகுதியைச் சேர்ந்த மணல் கடத்தலில் ஈடுபட்ட சுதாகர் என்பவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந் நிலையில், சுதாகர் தென் பெண்ணையாற்றின் கரையோர பகுதியில் உலவி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ குணசேகரன் பிடாகம் கிராமத்திற்கு சென்று மறைவான இடத்தில் பதுங்கி இருந்த சுதாகரை பிடிக்க எத்தனிக்கிறார்.அப்போது, சுதாகர், எஸ்ஐ குணசேகரனை மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதம் கொண்டு சரமாரியாகி தாக்கவிட்டு தப்பிச் செல்கிறான். கழுத்தில் விழுந்த ஆழமான காயம் காரணமாக எஸ்ஐ குணசேகரன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சுதாகர், எஸ்ஐ குணசேகரன் வைத்திருந்த வாக்கி டாக்கியையும் திருடிக் கொண்டு அங்கிருந்து மாயமாகிறான். மீட்கப்பட்ட குணசேகரன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சுதாகரை பிடிக்க மாவட்ட எஸ்பி சரவணன், 2 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். தனிப்படையினர் தப்பியோடிய சுதாகரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Murali Vedha
அக் 21, 2025 15:59

மணல், மண் திருடன் உள்ளே அனுப்பாத வரை இது போன்று மிரட்டல்கள் இருக்க தான் செய்யும் வெறும் செய்தி மட்டும் படித்து விட்டு போக வேண்டியது தான்.


Padmasridharan
அக் 21, 2025 11:02

இந்த அவலத்தை முதலில் இவர்கள் மாற்றவேண்டும்


ராமகிருஷ்ணன்
அக் 19, 2025 20:28

மணல் கொள்ளையை அடிக்க சொல்வது திமுக அரசின். அமைச்சர். போலீஸ்க்கு மாமூல் வாங்கும் உரிமை தான் உள்ளது, தடுக்க முனைந்தால் அடி தான் கிடைக்கும். இதுதான் விடியல் அரசின் சட்டங்கள்.


V Venkatachalam
அக் 19, 2025 19:00

இந்த எஸ் ஐ ஏன் துப்பாக்கியை எடுத்துகிட்டு போகலை? அதான் சுட்டு பிடிக்க உத்தரவு இருக்கே. தான் நேர்மையானவனா இருந்தா போதாது. மணல் அள்ளுறவன சாதாரணமா நினைக்க கூடாது. அவன் முழு கேடியா தானே இருப்பான்?


Kasimani Baskaran
அக் 19, 2025 18:48

11:00 க்கு ஜெயித்தவுடன் 1105 க்கு மண்ணள்ளுவோம் என்று யாரோ சொன்னதாக ஞாபகம்...


mdg mdg
அக் 19, 2025 17:52

போலீசருக்கு இந்த நிலைமை என்றால் கிராமங்களில் புதிது புதிதாக ரவுடிகள் முளைத்து வருகிறார்கள். குறிப்பா ஜாதி கட்சி நடத்தும் தொண்டர்கள்.ஏதேனும் ஒரு சம்பவம் நடந்து போலீசார் கைது செய்ய வந்தால் ஜாதி கட்சி தலைவர் சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு போன் செய்து தடுத்து விடுகிறார்கள். ஆகையினால் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே தான் இருக்கிறது. இதனால் ஜாதி கட்சியை தடை செய்ய வேண்டும்.


மொட்டை தாசன்...
அக் 19, 2025 16:55

போலீசுக்கே இந்தநிலைமையெனில் சாதாரண குடிமக்களின் நிலைமை சொல்லிதெரியவேண்டியதில்லை .


Balaa
அக் 19, 2025 15:55

பல வருடங்களாக அரசியல் மற்றும் ஜாதி கட்சிகள் சமுதாயத்தில் விதைத்த விஷத்தின் கலாச்சார சீரழிவு தான் இது. எப்படி ஊழல் ஊரிப்போனதோ அதே போல் தான் இதுவும்.


s vinayak
அக் 19, 2025 13:02

தீபாவளி நேரம். துரத்தி பிடிக்க முயன்றது எதற்காகவோ?


duruvasar
அக் 19, 2025 12:28

யாருக்கு அதிர்ச்சி ?தினமும் நடக்கும் அன்றாட நிகழ்ச்சி. யூடடுபரை , வலைதளள த்தில் பதிப்பிடுபவர்களை அதிகாலையில் வீட்டில் சென்று பிடிப்பதுதில் தான் நம் போலீசார் நன்றாக வேலைசெய்கிறார்கள்.


புதிய வீடியோ