உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொண்டர்கள் உழைத்து கொண்டே இருப்பர்: முதல்வர் குடும்பம் பிழைத்து கொண்டே இருக்கும் முன்னாள் கவர்னர் தமிழிசை காட்டம்

தொண்டர்கள் உழைத்து கொண்டே இருப்பர்: முதல்வர் குடும்பம் பிழைத்து கொண்டே இருக்கும் முன்னாள் கவர்னர் தமிழிசை காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ''முகூர்த்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வராக பதவி ஏற்பார்,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை நேற்று அளித்த பேட்டி: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0tfpry43&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒரே நாடு; ஒரு தேர்தல் மாபெரும் முயற்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், மக்களின் சிரமும், நேரமும் மிச்சமாகிறது. தேர்தல் கமிஷனின் செலவும், மக்கள் வரிப்பணமும் மிச்சமாகும். அரசியல் கட்சிகளின் செலவுகளும் குறையும்.

வேலை நிறுத்தம்

உள்ளூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில், தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்; அதைத் தீர்க்க முடியவில்லை. ஆனால், தமிழக முதல்வர், வெளிநாடுகளுக்கு சென்று முதலீடு திரட்டி வருகிறார். இப்படித்தான் எல்லாமே வேடிக்கையா நடந்துகிட்டு இருக்கு.அமைச்சர் மகேஷ் தொகுதியிலேயே பள்ளிகளுக்கு வழங்கப்படும் முட்டைகள், வெளி கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை கைது செய்தது போல், இதிலும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமாவளவன், கூட்டணியில் ஏதோ ஒரு பிரச்னைக்காக மாநாடு நடத்துகிறார். கூட்டணியை விரிவுபடுத்தவா, விரிசல் படுத்தவா என்று புரியவில்லை.

நல்ல நாள்

உதயநிதி துணை முதல்வராக்குவதற்கு, முகூர்த்த நாள் தேடிக் கொண்டிருக்கின்றனர். நல்ல நாள் முடிவு செய்யப்பட்டதும், துணை முதல்வராக அறிவிக்கப்படுவார். மக்களை அப்பட்டமாக ஏமாற்றும் பகுத்தறிவுவாதிகள். பவள விழா, தொண்டர்களுக்காக நடத்தப்பட்டதல்ல, முடிசூட்டு விழாவின் துவக்கம். இதுதான் வாரிசு அரசியல். தி.மு.க.,தொண்டர்கள், உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும், கருணாநிதியின் குடும்பம் பிழைத்துக்கொண்டே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

சி.முருகன்.
செப் 23, 2024 06:40

உங்கள் குடும்பம் எப்படி உழைத்துதான் முன்னேறினீர்களா?


Gnanasutha
செப் 20, 2024 18:17

இங்கு முதல்வர் குடும்பம் வாழ்வதற்காக கட்சி தொண்டர்கள் உழைக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அரசுக்கும் அரசியலுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் சம்மந்தம் இல்லாத ஒரு குடும்ப திருமணத்திற்காக வும் ஆடம்பரத்திற்க்காகவும் ஒரு கட்சியின் தொண்டர்கள் மட்டுமல்ல அரசு மட்டும் அல்ல ஒரு நாட்டின் மக்கள் அனைவரும் வரி கொடுத்து வாழ்க்கை கொடுக்கிறார்கள் அது சரியா. அம்மா இவ்வளவு ஆவேசமாக யாருக்காக பேசுராங்களோ அவங்க கிட்ட இருந்து இவங்களுக்கு திருமண அழைப்பிதழ் வந்ததா சென்றபோது என்ன மரியாதை கொடுத்தார்கள். போட்டிகளில் நிற்காத நிர்மலா சீதாராமன் அம்மையாருக்கும் அமித்ஷா அவர்களுக்கும் அமைச்சர் அதுவும் மிக வலிமை நிறைந்த பொருப்பு ஆனால் தாங்கள் இவ்வளவு உண்மையாக கூச்சலிட்டும் ஆரியர் களுக்கு கொடுக்க முடிந்த பதவியை ஏன் திராவிடர்களாகிய உங்களுக்கு கொடுக்க முடியவில்லை. சிந்தியுங்கள். நான் அரசியலையும் அரசியல்வாதியும் எதிர்பார்ப்பு தான் ஆனால் இது போன்று சிந்திக்காமல் பேசும் போது விமர்சிக்காமல் இருக்க முடியவில்லை.


Barakat Ali
செப் 20, 2024 17:00

துக்ளக்கார் ஊ பீ ஸ் இடம் ......... ஏம்பா .... அந்தம்மா சொல்லுச்சு ன்னு இனிமே இருநூறு ஓவா க்கு பதிலா இருநூத்தம்பதோ, முந்நூறோ கேட்டுக்கிட்டு நிக்க கூடாது ..... சரியா ? ஷார்ட் டேர்ம் கோல் என்னன்னா இளவரசர் பதவியேத்துக்கணும் .... லாங் டேர்ம் கோல் என்னன்னா அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஜெயிக்கணும் .... அதனால இன்க்ரிமெண்ட் பத்தி அப்புறம் பார்த்துக்கலாம் ... ஓகேவா ??


Ms Mahadevan Mahadevan
செப் 20, 2024 12:57

எல்லா கட்சியிலும் அப்படித்தான் 1967 பிறகு இ வாரிசு தான். உங்களுக்கு தான் வயதாகிவிட்டது ரி டயர் மெண்ட் கொடுக்க வேண்டியது தானே? மனசு வராதே


Barakat Ali
செப் 20, 2024 16:52

இதுக்குத்தான் சொல்றோம் உ பி ஸ் ஐ பரம்பரை கொத்தடிமைக்காரனுங்க என்று ..........


குமரன்
செப் 20, 2024 12:04

உழைக்கும் தொண்டர்கள் சோர்வு மற்றும் மயக்கம் தெளியகூடாது என்பதற்காகவே குவாட்டரும் பிரியாணியும் தருகிறார்கள்


venugopal s
செப் 20, 2024 10:59

உங்கள் பாஜக கட்சியில் வட இந்திய அரசியல்வாதிகள் பெரிய பதவிகளில் அனுபவிக்க தமிழக பாஜகவில் நீங்கள் எல்லோரும் உழைப்பது போல் தான்!


ஆரூர் ரங்
செப் 20, 2024 11:27

நிர்மலா மற்றும் ஜெய்சங்கர் பெரிய பதவிகளில் இல்லையா? தமிழர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி அகில இந்திய பிஜெபி தலைவராக இருந்தாரே. கடைசியாக அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த தமிழர் யார்? தி.மு.க வின் தலைவராக தெலுங்கர்களே இருந்தார்கள். (.அண்ணாவின் தாயார் பங்காரு அவர்கள் கூட தெலுங்கர் என்பார்கள். )


Barakat Ali
செப் 20, 2024 16:54

இந்த பரம்பரை குடும்ப கொத்தடிமைக்கு கம்பேர் செய்து பெருமைப்பட்டுக் கொள்வதில் ஒரு தனி ஆனந்தம் ......


தஞ்சை மன்னர்
செப் 21, 2024 11:12

ஹி ஹி ஆரூர் ராங் அது நூல் அளவு வித்தியாசம் நூல் ன்னு நான் சொன்னது அளவுக்குத்தான் நீ வேறு ஏதும் நினைக்க வேண்டாம்


Paramasivam Ravindran
செப் 20, 2024 10:57

மக்களால் வேண்டாம் என்று தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஆளுநர் பதவி. இது மட்டும் சரியா? . அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா..


Mohan
செப் 20, 2024 10:31

இப்போ பரவாயில்ல நீங்க நல்லா பேச காத்துக்கிட்டீங்க .


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 20, 2024 10:30

பரம்பரை கொத்தடிமைகளை கட்டி வைத்து வளர்ப்பதில் திமுகவுக்கு இருக்கும் திறமை உங்களுக்கு பிஜேபிக்கு இல்லை ....... உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள் .....


pv, முத்தூர்
செப் 20, 2024 10:02

மீண்டும் மன்னராட்சி முறை


முக்கிய வீடியோ