உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குற்றங்களை குறைக்காவிட்டால்... இன்ஸ்.,களுக்கு எச்சரிக்கை

குற்றங்களை குறைக்காவிட்டால்... இன்ஸ்.,களுக்கு எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ரவுடிகளை ஒழிக்க, கொலைகள் நடக்காமல் இருக்க, முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், பதவி உயர்வில் சிக்கல் நேரிடும்' என, டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு, ஐ.ஜி.,க்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாநில அளவில் நடக்கும் குற்றங்கள், அவற்றை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, மண்டல வாரியாக ஐ.ஜி.,க்கள் ஆய்வு கூட்டங்களை நடத்தி உள்ளனர். இது குறித்து, டி.எஸ்.பி.,க்கள் கூறியதாவது: காவல் நிலைய பதிவுகளில், விசாரிக்கப்படாத சி.எஸ்.ஆர்., ரசீதுகளே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். போலீசார், ரவுடிகளின் வீட்டருகே சென்று, விசாரணை செய்ததற்கான, 'லைவ் லொகேஷன்' விபரத்தை, இன்ஸ்பெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ரவுடிகள் குறித்து கிடைக்கும் தகவல்களை, 'பருந்து' செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். போலீஸ் நிலைய எல்லைகளில், பகுதி வாரியாக நடந்த குற்றங்கள் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவோர், எளிதில் தப்பி செல்லாமல் இருக்க, தற்காலிகமாக 'செக் போஸ்ட்' அமைக்க வேண்டும். பகல், இரவு நேரங்களில், ரோந்து பணிகளில் கிடைத்த தகவல்களை, பதி வே டுகளில் குறித்து வைக்க வேண்டும். அமாவாசை நாளில் ரோந்து பணிக்கு, கூடுதலாக போலீசாரை நியமிக்க வேண்டும். முன் விரோதம், பழிக்கு பழி வாங்க துடிக்கும் எதிரிகள் உள்ளிட்டோரை கண்காணித்து கொலைகளை தடுக்க வேண்டும். போலீஸ் நிலைய எல்லைகள் தோறும், குற்றங்களை குறைக்க வேண்டும். டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பணித்திறன் குறித்து, எஸ்.பி.,க்கள் ஆய்வு செய்வர். அவர்கள் தரும் அறிக்கை அடிப்படையில், மேல் நடவடிக்கை எடுக்கப்படும். பதவி உயர்வுக்கும் சிக்கல் ஏற்படலாம் என, ஐ.ஜி.,க்கள் எச்சரிக்கை செய்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

KRISHNAN R
நவ 08, 2025 12:28

நடப்பது நடக்கப்போவது நடந்தது எல்லாம் அறிவோம் -


KOVAIKARAN
நவ 08, 2025 10:04

மாநில அளவில் நடக்கும் குற்றங்கள், அவற்றை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, மண்டல வாரியாக ஐ.ஜி.,க்கள் ஆய்வு கூட்டங்களை நடத்தி உள்ளனர் என்று தினமலர் செய்தி உள்ளது. நீங்கள் என்ன கூட்டம் போட்டுக் கூவினாலும், திமுக ஆட்சியில் இருக்கும்வரை ஒன்றும் செய்யமுடியாது. ஏனென்றால், காவல் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, அந்தந்த மண்டலத்தின் IG க்களோ, அல்லாது அந்தந்த மாவட்டங்களின் SP க்களோ அல்ல. அவர்கள் அனைவரும், அமைச்சர்கள், மாவட்டம், வட்டம் என்று அந்தந்த பகுதியில் உள்ள திமுகவினர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது, அவர்கள். சொல்படி தான் கேட்பார்கள். இதனாலயேதான் 2021 லிலிருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போய் சீரழிந்து கிடக்கிறது. அந்த சீரழிவு நமது இந்திய நாடு முழுவதும் அறியப்பட்டு சந்தி சிரிக்கிறது. இனிமேல் ஆட்சியில் மீதமிருக்கும் ஐந்து மாதங்களில் என்ன சாதித்து என்ன கிழிக்கப்போகிறார்கள்


V RAMASWAMY
நவ 08, 2025 09:07

குற்றங்கள் என்பது லஞ்சம் என்பதும் உள்ளடக்கம்.


duruvasar
நவ 08, 2025 08:55

தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது. 4 1/2 ஆண்டுகள் என்பது ஒரு பயிற்சி காலம்போல் தெரிகிறது.


Krishna
நவ 08, 2025 07:28

Sack& Punish All Superior Officials esp Dist-Higher Police& Judges Not Punishing 90% PowerMisusing MegaLooting Police-Magistrates


Kasimani Baskaran
நவ 08, 2025 06:22

தீம்காவின் இளைஞர் அணியில் காவல்துறை இணைந்து விட்டது பலருக்கு தெரியாது போல. வெட்டினால் கூட சுட்டுப்பிடிக்கும் பொழுது சரியாக முழங்காலில் சுட்டுப்பிடிக்க வேண்டும் - ஒரு பொழுதும் கட்டுப்போட்டு மட்டும் பிடிக்கக்கூடாது... கடமை உணர்ச்சியில் தமிழக காவல்த்துறை எல்லை கண்டது..


Ram
நவ 08, 2025 06:06

Minor விபத்து கேசுகளில் கூட வாகனங்களை அள்ளிச்சென்று மாமூல் வாங்குவதை கொள்கையாக கொண்டுள்ளார்கள் , அந்த மாமூல் வாங்க இடைதரஃகர்கள் மூலமாகத்தான் செய்கிறார்கள்


சுந்தர்
நவ 08, 2025 05:34

இவ்வளவு நாளா இவற்றை எல்லாம் நாங்க செய்யவே இல்லை சார். மாமூல் மட்டும் வாங்கிப்போம் சார்.


சிட்டுக்குருவி
நவ 08, 2025 05:27

காவல்துறைக்கு குற்றங்கள் நடந்தது ,நடக்கப்போவது ,நடக்கவ்வாவ்ய்ப்பிருப்பது போன்ற விவரங்களை மக்களிடமிருந்து பெற தடையாய் இருப்பது சாட்சியங்கள் விவகாரம் .தகவல் கொடுப்பவர் கட்டாயம் சாட்சியத்திற்கு வரவேண்டும் என்பதுதான் .பெரும்பாலான குற்றங்களில் சாட்சியங்கலுக்கு பாதுகாப்பு இல்லாததும் ஒருகாரணம் .சாட்சி சொல்லவந்தாலும் ஒருமுறையில் முடிவதில்லை .எப்போதெல்லாம் வழக்கு விசாரணைக்கு வருகின்றதோ அப்போதெல்லாம் சாட்சியங்களும் கோர்ட்டுக்கு வரவேண்டும் .இதனால் அவர்களும் அவர்கள் செய்யும் தொழில் /பணி மிகவும் பாதிக்கப்படுகின்றது .அதனால் அரசு தகவல் பாதுகாப்புச்சட்டம் /சாட்சியங்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றி ,தகவல் கொடுப்பவர் விருப்ப பேரிலேயே சாட்சியங்கள் அளிக்கலாம் ,இல்லையென்றால் அவர்கள் தகவல் பாதுகாப்பதுமின்றி அவர்களைப்பற்றிய செய்திகளும் வெளியிடாமல் பாதுகாக்கப்படும் என்ற சட்டம் இயற்றவேண்டும் .குற்றங்கள் நடப்பதை எவ்வளவோபேர்கள் பார்க்கின்றார்கள் .ஆனால் எவரும் காவல்துறை கட்டுப்பாட்டு எண் 100 க்கு போன் செய்வதில்லை .இதை பரிசீலித்து காவல்துறை அரசுக்கு பரிந்துரைக்கவேண்டும் .கட்டுப்பாட்டு எண் 100 வரும் செய்திகள் தருபவர் பற்றிய விவரங்கள் பாதுகாக்கப்படும் என்ற வாசகமும் விளம்பரங்களில் இடம்பெறவேண்டும் .இன்னொரு விஷயம் ஆனால் அதற்க்கு வழி இருக்குமா தெரியவில்லை .குற்றம் நடப்பதை அறிந்தவர் /ப்பார்த்தவர் காவத்துறைக்கு தெரிவிக்காமையும் ஒருகுற்றமாக சட்டத்தில் கருதப்படவேண்டும் .சாத்தியம் மிக குறைவு .


முக்கிய வீடியோ