உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காசாவில் நடப்பவை நெஞ்சை உருக்குகின்றன: முதல்வர் ஸ்டாலின் வேதனை

காசாவில் நடப்பவை நெஞ்சை உருக்குகின்றன: முதல்வர் ஸ்டாலின் வேதனை

சென்னை: ''காசா மூச்சு திணறுகிறது. உலக நாடுகள் கவனிக்காமல் இருக்க கூடாது. காசாவில் நடப்பவை நெஞ்சை உருக்குகின்றன'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.காசாவில் இஸ்ரேல் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியது. இந்த செய்தியை மேற்கொள் காட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: காசா மூச்சு திணறுகிறது. உலக நாடுகள் கவனிக்காமல் இருக்க கூடாது. காசாவில் நடப்பவை நெஞ்சை உருக்குகின்றன. காசாவில் நடக்கும் சம்பவங்களால் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். ஒவ்வொரு வீடியோ காட்சியும் நெஞ்சை உருக்குவதாக உள்ளது. குழந்தைகளின் அழுகை, பட்டினி கிடக்கும் குழந்தைகளின் வீடியோ காட்சி, மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சு, ஐநா விசாரணை கமிஷனின் இனப்படுகொலை அறிவிப்பு ஆகியவை எந்த மனிதனும் ஒருபோதும் பாதிக்கப்படக்கூடாத துன்பத்தைக் காட்டுகின்றன.அப்பாவி உயிர்கள் பறிபோகும் போது மவுனமாக இருக்க கூடாது. இனிமேல் அமைதி காக்க முடியாது. ஒவ்வொருவரும் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். இந்தியா உறுதியாகப் பேச வேண்டும், உலகம் ஒன்றுபட வேண்டும், இந்த பயங்கரத்தை இப்போதே முடிவுக்குக் கொண்டுவர நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Mathivanan
செப் 19, 2025 01:16

வேங்கைவயலும், கள்ளக்குறிச்சிய்ம் காசால இருந்திருக்கலாம்


S.kausalya
செப் 19, 2025 00:04

தமிழ்நாட்டில் நடப்பவைகளை அறிந்து உலக தலைவர்கள் தினமும் அதிர்ச்சி அடைகின்றனர்.இவரை நம்பி ஓட்டு போட்ட தமிழக மக்களின் நிலை நாளுக்கு நாள் மோசமான கொண்டு உள்ளது.இதில் அங்குள்ளவர்களை பற்றி கவலை கொண்டு தீர்வு காண சொல்கிறார்.. ஏன் உக்ரைன் போய் நம் மக்களை காப்பாற்ற வந்தது பொய் தான் போல் காசாவிற்கும் போய் போர் நிறுத்த ஒப்பந்தம் போட அங்கு போக வேண்டியது தானே


Prasath
செப் 18, 2025 22:40

முன்பு கோவையில் வெடித்த போது சிலிண்டர் வெடிப்பு என்று முட்டுகுடுத்தியே இந்துக்கள் உயிர் என்றால் உங்களுக்கு பெரிதாக தெரியவில்லையா


R.MURALIKRISHNAN
செப் 18, 2025 22:15

இங்கே கஞ்சாவினால் தமிழகம் திணறுகிறது. காசா மட்டுமே கண்ணில் தெரிகிறது. தமிழனுக்கு இவரை எண்ணி சிரிப்பதா அழுவதா ன்னு தெரிய வில்லை. கட்சிகாரனுக்கும் ஒன்னும் புரியவில்லை


Chess Player
செப் 18, 2025 22:04

யாரவது கொஞ்சம் சொல்லி தாங்க. வெளி உறவு மதிய அரசு பார்த்துக்கும் இவரு தமிழ் நாட ஒழுங்கா கவனிச்சா அதுவே பெரிய விஷயம் மேலும், வெளி உரவத்துறைக்கு அனுபவமும் அறிவும் வேண்டும் நம்ப தமிழ் நட்டயாவது ஒழுங்கா பார்க்கச்சொல்லுங்க


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
செப் 18, 2025 21:07

அங்க நெதன்யாஹுவின் மைன்ட் வாய்ஸ்.....நாமலாச்சும் திவிரவாதிகளை போட்டு தள்ளுவதில் அர்த்தமிருக்கு ஆனால் இந்தியாவில் தமிழ்நாட்டில் மக்கள் விடியல் கிடைக்கும் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சி நடத்தும் சுடலையார் தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்றி கொண்டிருப்பதை பார்த்தால் நாமே பரவாயில்லை போல....


sankaranarayanan
செப் 18, 2025 20:05

காசா மூச்சு திணறுகிறது. உலக நாடுகள் கவனிக்காமல் இருக்க கூடாது. காசாவில் நடப்பவை நெஞ்சை உருக்குகின்றன என்னடா இந்த வினோதம் திராவிட மாடல் அரசில் இங்கே நடக்கும் கொள்ளை கொடூரம் பெண்களை சூரையாடல் கற்பழிப்பு


Vasan
செப் 18, 2025 20:51

சார், அவர் லெவெல்லே வேற. அவர் அணுகுற பிரச்சினையே இஸ்ரேல் - பாலஸ்தீனம், ரஷ்யா- உக்ரைன் அது போல இன்டர்நேஷனல் பிரச்சினைகள். அவர் கிட்ட போய் தமிழ்நாட்டு பிரச்சினைகளை சொல்லி கேவல படுத்தாதீங்க ப்ளீஸ்.


N S
செப் 18, 2025 19:57

அன்று கோவையில் நடந்த சம்பவங்களால் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அப்பா அதிர்ச்சியடையவில்லை. இன்று காசா. விரைவில் தேர்தல் வரவுள்ளது. ஆப்ரிக்காவில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவில்லை. அப்பப்பா இன்னும் எத்தனையோ உணர்ச்சிகள் வரப்போகுது. ........


Sudha
செப் 18, 2025 19:55

டிரம்ப்–க்கு கொடுக்கப்போகும் நோபல் பரிசு இனி இவருக்கு


Vasan
செப் 18, 2025 20:54

சரியான போட்டி. இறுதியில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் தான் வெற்றி பெறுவேன். நோபல் கப் எனக்கே.


vee srikanth
செப் 19, 2025 12:02

ஏற்கனவே, ஒரு மாற்று திறனாளி, இவங்களுக்கு அல்வா குடுத்திருக்கிறார்


morlot
செப் 18, 2025 19:16

Be careful mr P.M,netanyou is a dangerous person, he will a send monad agent to attack you if you are against him and israel.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை