உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யார் அந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி: கேட்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்

யார் அந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி: கேட்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்புவனம்: '' மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் வழக்கில் தலைமைச் செயலகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி யாரோ தலையிட்டு தான் காவல்துறையினர் கொடூரமாக நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சொல்கிறார்கள் . அந்த அதிகாரி யார் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேணடும்,'' என மார்க்சிஸ்ட்கட்சியின் மாநில செயலர் சண்முகம் கூறியுள்ளார்.மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது: போலீசார் குற்றவாளிகளுக்கு நேரடியாக தண்டனை தருவது, என்கவுன்டர் என்ற பெயரில் கொலை செய்வது, கைகால்களை முறிப்பது அனைத்தும் சட்டவிரோதமானது. மனித உரிமையை மீறக்கூடிய செயலாகும். இந்த சம்பவங்களில் எல்லாம், உரிய காலத்தில் தமிழக அரசு தலையிட்டு சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால் அஜித்குமார் இழந்திருக்க மாட்டோம்.இதில் வெளிவராத விஷயம் என்பது, தலைமைச் செயலகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி யாரோ தலையிட்டுதான் இந்தளவுக்கு மிக கொடூரமாக போலீசார் நடந்து கொள்ளக்கூடிய அழுத்தத்தை ஐ.ஏ.எஸ்., அதிகாரி கொடுத்ததால் தான் சம்பவம் நடந்தது என அனைவரும் பேசுகின்றனர் ஆனால், அந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி யார் என்பது விவரம் வெளிப்படாமல் மூடி மறைக்கும் நிலை உள்ளது. வெளிப்படைத்தன்மை இல்லாத நிலை உருவாக்குகிறதுசம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி யார் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இரண்டு பெண்கள் வந்த கார் யாருக்கு உரிமையானது . இந்த மாதிரியான பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் இந்த வழக்கு உள்ளது.சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்து விட்டதால், இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு இல்லை என தமிழக அரசு கருதக்கூடாது. இந்த வழக்கு சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு, விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகவும், தமிழக போலீசார் சம்பந்தப்பட்டு உள்ளதாலும் சி.பி.ஐ.,க்கு மாற்றுகிறோம் என முதல்வர் கூறியுள்ளார். அதேபோல் நான் எழுப்பிய கேள்விக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்கு அரசு என்ன செய்ய வேணடும் என யோசிக்க வேண்டும். இதுபோன்ற நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்கு குழு அமைத்து போலீஸ் அதிகாரிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் திட்டத்தை உருவாக்க வேண்டும். நேற்று டி.ஜி.பி., பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளார். இவ்வளவு நாட்கள் எஸ்பி.,யும் டி.எஸ்.பி.,யும் தனிப்படைகள் என்ற பெயரில் ரவுடி கூட்டத்தை வைத்து கொண்டு செயல்பட்டுள்ளனர் என்பதற்கு இந்தசம்பவம் ஒரு எடுத்து காட்டு. இனிமேல் அந்த படைகள் கலைக்கப்படும். 6 மணிக்கு மேல் லாக்கப்பில் கைதிகளை வைக்கக்கூாடது என்பது எல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உதவும்.போலீசார் மனித உரிமைகள் மதிப்பது கிடையாது. எல்லாவற்றையும் விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணோட்டத்தில் போலீசார் நடந்து கொண்டுள்ளனர். மனித உரிமை என்பது எல்லாவற்றையும் விட மேலானது. மனித உயிர் எல்லாவற்றையும் விட மேலானது.மனித உரிமையை காலில் போட்டு மிதிப்பது என்பதும், மனித உயிர்களை காவு வாங்குவது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத மிகக்கொடூரமான விஷயம். இந்த விஷயத்தில் தமிழக அரசு இதுபோன்ற சம்பவங்கள் வகையில் நடவடிக்கை இருக்க வேண்டும். அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கியது மட்டும் போதுமானது அல்ல. போதுமான இழப்பீட்டு தொகை வழங்க முன்வர வேண்டும். வழக்கில் எந்தவித குறுக்கீடும் இல்லாமல், இந்த வழக்கு நியாயமாக நடைபெற வேண்டும். ஐகோர்ட் மதுரை கிளை தலையிட்டதால், இவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சி.பி.ஐ., விசாரணை உத்தரவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஐகோரட் தொடர்ந்து கண்காணிக்கும். அஜித்குமாருக்கு நீதியும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணமும் வேண்டும். எப்.ஐ.ஆர்., போடாமல் எப்படி போலீசார் இவ்வளவு ஆர்வம் காட்டினார்கள் என்பது சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. மனிதனை கொலை செய்யவேண்டிய அளவு குற்றம் கிடையாது. எவ்வளவு பெரிய குற்றமாக இருந்தாலும், தண்டனை கொடுக்க இவர்கள் யார்? கோவில் அருகே கொலை நடந்தது அதிர்ச்சி அளிக்கிறது. வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும். யாராக இருந்தாலும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டு அனைவருக்கும் தண்டனை பெற்று தர வேண்டும். நீதியும், நிவாரணம் பெற்றுத்தர கட்சி துணை நிற்கும். சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

raja
ஜூலை 04, 2025 06:59

என்னோட யூகம் என்ன என்றால் இந்த கொலைக்கும் திருட்டு ஓங்கோல் கோவால் புர திராவிடர்களின் சிலை கடத்தலுக்கு தொடர்பு இருக்குமோ என்று என்ன தோன்றுகிறது...


Padmasridharan
ஜூலை 04, 2025 05:22

ரௌடிகளை வைத்து காவலர்கள் மக்களை மிரட்ட தேவையில்லை சாமி. இவர்களுக்கு கொடுத்த காக்கிச்சட்டையும், வண்டியையும் பயன்படுத்தி இவர்களே மக்களிடமிருந்து பணம் / பொருள் புடுங்க ரௌடிகள் போல்தான் ஒருமையில் பேசி, அதட்டி, மிரட்டி, அடித்து, அறைக்கும் அழைத்து செல்கின்றனர். அதிகார பிச்சைக்காரர்களாக மாறி இருக்கின்றனர் பலரும் i


ராஜா
ஜூலை 04, 2025 04:28

யார் அந்த சார் போல விடையில்லாத அநேக கேள்வி உண்டு தூத்துக்குடி துப்பாக்கி சூடு, தா கிருஷ்ணன் கொலை , தாம்பரம் ரயில் நிலையம் கொலை , ஜெயில் வயர் கொலை, ஜக்கி வளாகம் கொலை, சாத்தான்குளம் கொலைகள், இன்னும் எத்தனை கொலைகள் விடை இல்லாமல் இருப்பதே தமிழக மக்களுக்கு அரசுகள் செய்த நன்மை.


Kasimani Baskaran
ஜூலை 04, 2025 03:59

கொலை செய்த, செய்யத்தூண்டிய குற்றவாளிகளுக்கு மரண தண்டனைதான் தீர்வு.. நீதிமன்றத்தில் பொய் சொன்ன அதிகாரிகளையும் கூட பணிநீக்கம் செய்யவேண்டும்.


Mani . V
ஜூலை 04, 2025 03:37

ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத கேள்வி. ஏனென்றால், கடைசியில் ஒரு பிரயோசனமும் இருக்கப் போவது இல்லை. இறந்த பையனின் தம்பிக்கு "அரசு வேலை" என்ற எலும்புத் துண்டை கொடுத்துள்ளதால், வழக்கு விசாரணையின் போது இறந்த பையனின் அம்மா, "எனக்கு அந்த நடிகரின் பெயரில் பையனே இல்லை" என்று கொலைகாரர்களுக்கு எதிராக சாட்சி சொல்லாமல், பிறழ் சாட்சி சொல்வார்கள். அந்த, "பெரிய கருப்பன் சாமி" புண்ணியத்தில் "அப்பா"வுக்கு ஏதும் ஆபத்து வராது. அந்தக் குடும்பம் அரசு வேலை, நிவாரணம் என்ற மாயையில் சிக்கி இதை மறந்தே போகும். இதற்கு மாங்கு, மாங்கு என்று குரல் கொடுத்த மற்றவர்கள்தான் பாவமோ, பாவம்.


Raj S
ஜூலை 03, 2025 23:05

அய்யயோ கைப்புள்ளைக்கு கோவம் வந்திருச்சு... எடுக்கறது பிச்சை அதுல என்ன வெட்டி பேச்சு??


Kjp
ஜூலை 04, 2025 08:09

வெட்டிப் பேச்சல்ல சரியான கேள்வி கேட்டிருக்கிறார்.


Raj S
ஜூலை 08, 2025 00:34

என்னத்த சரியான கேள்வி? முதுகெலும்புள்ள ஆம்பளையா இருந்தா, அந்த துறையின் அமைச்சர் பதவி விலகனும்னு உண்ணாவிரத போராட்டம் பண்ண வேண்டியது தான?


Shankar
ஜூலை 03, 2025 22:59

இப்படி ஏதாவது இப்பவே கேட்டு வச்சாத்தானே அடுத்தவருஷம் வரப்போற தேர்தல்ல 25 கோடிக்கு பதில் 35 கோடியாகவும் சீட்டும் கொஞ்சம் அதிகமாகவும் கேட்கலாம். நல்லா இருக்குது உங்களோட நாடகம். உங்களுக்கு மட்டும் இல்ல, திருமாவளவனுக்கு இந்த யோசனை தான். அதுக்கு தான் அவரும் இந்த கொலை விஷயத்துல ஈயம் பூசுன மாதிரியும் பூசாத மாதிரியும் பேசிட்டு இருக்கார்.


Mohanakrishnan
ஜூலை 03, 2025 22:58

சார் யார் என்று 6 மாதமாய் துருவி தேடுகிறார்கள் சார் யார் என்று இன்னும் 20 வருடங்களில் தெரிந்த பிறகு இயேசு அதிகாரி பெயர் தெரியும்


தாமரை மலர்கிறது
ஜூலை 03, 2025 22:49

யார் அந்த சார் என்ற கேள்வி திமுகவின் ஆட்சியில் தொடர்ந்து ஒலிக்கிறது.


hariharan
ஜூலை 03, 2025 22:45

மார்க்ஸிஸ்ட் சண்முகம் வைகோவிடம் பாடம் படிக்க வேண்டும். கூட்டணி தர்மத்திற்காக இந்த அரசை கேள்வி ஒன்றும் கேட்க மாட்டேன் என்கிறார் வைகோ. இவர் 20 கோடிக்கு மேலே அடுத்த தேர்தலில் போட்டுக்கொடுப்பதற்காக கூவுகிறாரோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை