உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை வழிநடத்துவது யார்: கேட்கிறார் திருமாவளவன்

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை வழிநடத்துவது யார்: கேட்கிறார் திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவள்ளூர்: '' தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்ட அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை வழி நடத்தப்போது அமித்ஷாவா அல்லது பழனிசாமியா என்ற கேள்வி எழுகிறது,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறினார்.திருவள்ளூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைத்துவிட்டது. இனி ஏன் அ.தி.மு.க., தனியாக கூட்டணி அமைக்க போகிறது. தனி கூட்டணி அமைப்பது என்றால், அவசரமாக கூட்டணியை அமைத்து இருக்க மாட்டார்கள். இன்னும் கொஞ்சம் பொறுத்து இருப்பார்கள். தேர்தலுக்கு இன்னும் 10 மாதம் உள்ளது. ஆனால், ஓராண்டுக்கு முன்பே அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைத்துவிட்டது என கூறிவிட்டார்கள்.என்ன அழுத்தமோ என்ன காரணமோ மிகவும் முன்கூட்டியே கூட்டணி அறிவிக்கும் நிலை அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுவிட்டது. பின்னணியை விளக்க வேண்டிய பொறுப்பு அ.தி.மு.க., தலைவருக்கு தான் உண்டு.பா.ம.க., நிறுவனர் ராமதாசை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஏன் சந்தித்தார் என தெரியாது. பா.ம.க.,வின் பிரச்னை குறித்து கருத்து சொல்லவிரும்பவில்லை. நாங்கள் தி.மு.க., கூட்டணியில் இருக்கிறோம். தொடர்வோம்.அ.தி.மு.க., பா.ஜ., முன்பு கூட்டணியில் இருந்ததாக அமித்ஷா கூறி வருகிறார். இக்கூட்டணியை தே.ஜ., கூட்டணி என்றும், கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறோம் எனவும் அமித்ஷா சொல்கிறார். இதற்கு அ.தி.மு.க., தலைவர்கள் குறிப்பாக இ.பி.எஸ்., தான் விளக்கத்தை , தெளிவை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பா.ஜ., தலைமையில் கூட்டணியா, அ.தி.மு.க., தலைமையில் கூட்டணியா என்ற கேள்வி எழுகிறது. அறிவிக்க வேண்டியவர் யார். அவர் மத்திய உள்துறை அமைச்சராக இருக்கலாம். அ.தி.மு.க., மூத்த தலைவர்களாக இருக்கலாம். ஆனால், தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு உருவாக்கிய கூட்டணியை வழிநடத்துவது அமித்ஷாவா இ.பி.எஸ்., அவர்களா என கேள்வி எழுகிறது. இதற்கு எல்லம் அவர் தான் விளக்கம் சொல்ல வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Sampath
ஜூலை 02, 2025 15:31

திருமா ஒரு நீசமான விலங்கு என்று முதலில் தெரிந்து கொள்ளவும். வீடு பூட்டி இருந்தால் உள்ளே வந்து உக்காந்து கொண்டு 20000 கேட்பார் .


theruvasagan
ஜூன் 28, 2025 17:42

வடிவேலுவை ஒருத்தன் கேட்பானே. என்னன்ணே நல்லா இருக்கிங்களா என்று. அதற்கு அவர் சொல்லும் பதில். நல்ல இல்லாட்டி என்ன செய்யப்போற. அதே பதில்தான் இதற்கும்


venugopal s
ஜூன் 28, 2025 16:38

அந்தக் கும்பலை வழி வேறு நடத்த வேண்டுமா? ஒரு கல்லை எடுத்து எறிந்தால் தலை தெறித்து ஓடிப் போகும் கூட்டம் அது!


madhesh varan
ஜூன் 28, 2025 16:16

சங பரிவார, ஆர் எஸ் எஸ் தான் வழிநடத்துது, வேலுமணி இல்லாட்டி செங்கோட்டையனுக்கு ஆப்பு வச்சு அவுங்கள பிஜேபி ல சேர வைப்பதே ஈ டி கு தலையாய கடமை, அவுங்க மூலமா அதிமுகவை கபளீகரம் செஞ்சு அதிமுகவை குழிதோண்டி புதைப்பதே அமித்சா கணக்கு, அதை முறியடிக்கவே எடப்பாடி காய்ப்பட்டோருக்கு போர்ராரு, இப்போ இருந்து ஆரம்பிச்சு, டிசம்பர் ல பிஜேபி ல இருந்து வெளிய வந்துடுவாங்க, அப்புறம் பிஜேபி டெபாசிட் பொய் காலியாகும்,


Krishna Moorthy
ஜூன் 28, 2025 10:32

முதலில் உன்னை வழி நடத்துபவர் யார் என சொல். பங்கு கேட்போம் என சொன்ன நீ இப்பொழுது கூச்சமில்லாமல் எதை கொடுத்தாலும் வாங்கிக் கொள்வோம் என சொல்ல காரணம் என்ன? அது சீட்டா இல்லை நோட்டா?


பேசும் தமிழன்
ஜூன் 28, 2025 08:22

வரும் தேர்தலில பெறப்போகும் தோல்வி..... இப்போதே கண்களில் தெரிகிறது போல் தெரிகிறது..... அதனால் தான் இந்த புலம்பல்.... இனியும் இந்து மதத்தை பற்றி தவறாக பேசி பார்..... உங்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.


திகழ் ஓவியன், Ajax, Ontario
ஜூன் 28, 2025 08:20

கண்டிப்பாக பிளாஸ்டிக் சேர்மன் இல்லை. ம ந கூ அமைத்த போது யார் வழி நடத்தினார்கள் ? அவர்கள் தான் குரு குரு மா


VENKATASUBRAMANIAN
ஜூன் 28, 2025 08:16

உனக்கு என்ன யார் வழிநடத்தினால்.. முதலில் ஒரு திமுகவிடமிருநது உட்கார் நல்ல நாற்காலி வாங்க முடியுமா என்று பார. கொத்தடிமைகள் பேச தகுதியற்றவர்கள்


பேசும் தமிழன்
ஜூன் 28, 2025 08:15

நீ எதற்க்காக திமுக கூட்டணியில் இருக்கிறோம்..... இருக்கிறோம் என்று திரும்ப திரும்ப சொல்லி கொண்டு இருக்கிறாய்..... பாமக உள்ளே வந்தால்.... நம்மை வெளியே விரட்டி விடுவார்கள் என்று பயமா...... கான் கிராஸ் கட்சி செல்வப்பெருந்தகை வேறு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களை பார்த்து விட்டு வருகிறார்..... இந்தி கூட்டணி தலைவர் சொல்லாமல்.... அவர் போய் பார்த்திருக்க மாட்டார்..... அதனால் நீங்கள் தான் உஷாராக இருக்க வேண்டும்..... எதற்கும் வைகோ மற்றும் விஜய் உடன் சேர்ந்து மூன்றாவது அணி அமைக்க ரெடியாக இருங்கள்..... எப்போது வேண்டுமானலும் திமுக உங்களை வெளியே விரட்டி விடலாம்.


SIVA
ஜூன் 28, 2025 08:12

அவங்க கூட்டணி ஆட்சி என்று சொல்வதே திமுக அல்லக்கைகளை வெறுப்பேத்தத்தான் , அந்த பிளான் நல்லா வேலை செய்கின்றது , இதனால் இனி திமுக கூட்டணி கட்சிகள் அதிக இடம் கேட்கும் , ஆட்சியில் பங்கு கேட்கும் , அதனால் இழப்பு திமுகவிற்கு தான் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை