உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் இன்னும் ஓட துவங்காதது ஏன்?

ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் இன்னும் ஓட துவங்காதது ஏன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதல், 'ஸ்லீப்பர் வந்தே பாரத்' ரயிலை, பல்வேறு கட்ட சோதனை நடத்தி தயார் படுத்திய நிலையில், இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பது, பயணியர் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில், இருக்கை வசதி மட்டுமே உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jft56j1b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'சிசிடிவி கேமரா' அதனால், அடுத்தகட்டமாக, படுக்கை வசதி உள்ள, 'வந்தே பாரத்' ரயில்களை தயாரித்து, இரவு நேரங்களில் இயக்க ரயில்வே திட்டமிட்டது. அதன்படி, கர்நாடக மாநி லம் பெங்களூரில் உள்ள பி.இ.எம்.எல்., நிறுவனத்தில், முதல், 'ஸ்லீப்பர் வந்தே பாரத்' ரயில் தயாரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த ரயில், சென்னை ஐ.சி.எப்., ஆலைக்கு வந்தது. இதில், 16 'ஏசி' பெட்டிகள் உள்ளன. பயணியரை கவரும் வகையில், ஆரஞ்ச், மஞ்சள் நிறங்களில் உள்அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. முதல் வகுப்பு பெட்டியில், வெந்நீரில் குளிக்கும் வசதி உள்ளது. ஒவ்வொரு இருக்கையிலும், புத்தகங்கள் வாசிப்பதற்கு வசதியாக, எல்.இ.டி., மின் விளக்கு, மொபைல் போன் மற்றும் லேப்டாப் சார்ஜிங் பாயின்ட் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. முதல் வகுப்பு, 'ஏசி' பெட்டியில், மேல் படுக்கைக்கு செல்ல ஏணி வசதி உள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் தனித்தனியாக சிறிய உணவகம், உணவு பதப்படுத்தி வைக்க குளிர்பதன பெட்டி வசதியும், சூடாக உணவு பரிமாறுவதற்கு தனி வசதியும் உள்ளன. 'சிசிடிவி கேமரா' மற்றும் ரயில்கள் மோதலை தடுக்கும் தொழில்நுட்பம் என, 30 வசதிகள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு கட்ட ஆய்வுக்கு பின், இந்த ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில், கடந்த ஆண்டு இறுதியில், சென்னை ஐ.சி.எப்., ஆலையில் இருந்து டில்லிக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா - லாபன் இடையே மணிக்கு, 180 கி.மீ., வேகத்தில் இயக்கி வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. அனைத்து சோதனைகளும் முடிந்து, ஆறு மாதங்களுக்கு முன், பாதுகாப்பு ஆணையரும் ஒப்புதல் அளித்து விட்டார். ஆனாலும், இன்னும் பயன்பாட்டிற்கு வராதது, பயணியருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இறுதிகட்டம் இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: 'ஸ்லீப்பர் வந்தே பாரத்' ரயில், மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் உடையது. நீண்ட துாரம் செல்லும் தடத்தில், ஸ்லீப்பர் ரயில் ஒன்று மட்டுமே போதாது. மற்றொரு ரயிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என கருதப்படுகிறது. 2வது ரயில் தயாரிப்பும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதன்பின், இந்த ரயில் போக்குவரத்து துவங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

A MN
செப் 06, 2025 17:35

ஒரு ரயில் A to B சென்றால் இன்னொரு ரயில் B to எ செல்லும் எனவே இரண்டு ரயில்கள் வேண்டும்


வாய்மையே வெல்லும்
செப் 06, 2025 13:15

பாஸ் ஒண்ணுமே புரியல.. ஒரு ரயிலுக்கு பதிலாக ஒரே நேரத்தில் இரண்டு ரயில் ஓட்டமா.?? சற்று விளக்கவும் டியர் அங்கிள் ...ஹாஹாஹா


Ganesun Iyer
செப் 08, 2025 13:05

இங்கிட்டிருந்து, அங்கிட்டு போவ ஒன்னு, எதிர்வாடைல அங்கிட்டிருந்து, இங்கிட்டு வர ஒன்னு ஆகமொத்தம் ரெண்டு.


R Hariharan
செப் 06, 2025 09:34

எந்த பயணிகள் கவலை படுகிறார்கள். சும்மா போடக்கூடாது. ஏற்கனேய வந்த பாரத் எக்ஸ்பிரஸ் காலியாக ஓடுகிறது. அதற்கு பதிலாக எக்ஸ்பிரஸ் சூப்பர் பாஸ்ட் போன்றவை விடலாம். இன்னும் பல தடங்களில் தேவையான ரயில் சேவை விடவில்லை. அகல பாதை மினிமயக்கம் ஆக்கப்பட்டு பல தடங்களில் புதிய ரயில் சேவை தொடங்க வில்லை. செங்கோட்டை மதுரை மிகையும் மோசம். பெங்களூரு, திருப்பதி, ஹைதெராபாத், போண்டி, கன்னியாகுமாரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் மும்பை நியூ டெல்லி போன்ற இடங்களுக்கு ரயில் சேவை வேண்டும்.


Ganesun Iyer
செப் 07, 2025 16:34

தெரிஞ்ச மாதிரி உளற கூடாது.. பயணிகள் இல்லாமலேயா 4 பெட்டி அதிகமா இணைச்சிருக்காங்க?


அப்பாவி
செப் 06, 2025 07:25

தூங்கி எழுந்திருக்க வேண்டாமா? ஸ்லீப்பர் ஆச்சே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை