உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெளிப்படையாக அறிவிக்காதது ஏன்: முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி

வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெளிப்படையாக அறிவிக்காதது ஏன்: முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்துக்கு வந்த வெளிநாட்டு முதலீடு குறித்து வெளிப்படையாக ஏன் அறிக்கை வெளியிடுவதில்லை என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஐந்து முறை வெளிநாட்டுப் பயணங்கள், முதலீட்டாளர் மாநாடு என்று கூறும் தமிழக முதல்வர் ஏன் தமிழகத்துக்கு வந்த வெளிநாட்டு முதலீடு பற்றி வெளிப்படையாக அறிவிப்பு வெளியிடுவதில்லை?எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது? எவ்வளவு முதலீடு பெற்றுள்ளோம்? எவ்வளவு தொழில்கள் துவங்கப்பட்டுள்ளன? எவ்வளவு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன? என்பதை தைரியமாக தமிழக தொழில் துறை இணையதளத்திலோ, அல்லது தமிழக முதலீட்டு வழிகாட்டி நிறுவனத்தின் இணையதளத்திலோ வெளிப்படையாக ஏன் வெளியிடுவதில்லை? அதை விட்டுவிட்டு எக்ஸ் வலைதளத்தில் தொழில்துறை அமைச்சரும், முதல்வரும் தொடர்ந்து வெற்று விளம்பரம் தேடுவது, இந்த அரசு ஒரு பொய், பித்தலாட்ட அரசு என்பதையே உறுதி செய்கிறது.உங்கள் ஆட்சியில் தொழில் முதலீடுகள் குறித்தும், துவங்கப்பட்ட தொழில்கள் குறித்தும், உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்தும், முதல்வர் ஸ்டாலினிடம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக வெள்ளை அறிக்கை கேட்கிறேன். இனியும் எக்ஸ் வலைதளத்தில் பொய் புரட்டு புள்ளிவிவரங்களை அள்ளிவிட்டு தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம் என்றும், தொழில் முதலீடுகள் குறித்து 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Thravisham
செப் 10, 2025 05:23

ஓர் திருத்தும். வெளிநாட்டு முதலீடா அல்லது வெளிநாட்டில் முதலீடா? த்ரவிஷன்கள் விளக்கம் அளிப்பார்களா?


N S
செப் 10, 2025 02:11

வள்ளுவர் அப்பாவிடம் அங்கு சொன்னார் "யா காவராயினும் பதில் காக்க". குடும்ப முதலீடுகள் பற்றி யாரும் கேட்க கூடாது.


ManiMurugan Murugan
செப் 09, 2025 23:43

தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளின் தொழிலாளர் பிரச்சனைகளை என்ன என்று கேட்காத அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி புதிய முதலீடுகளையா வரவேற்பார்கள் அவர்கள் குடும்பத்திற்கு முதலீட்டிற்கு ஆள் பார்த்திருப்பார்கள் பழைய ஒப்பந்தங்களை புதுப்பிக்க சென்றது தான் உண்மை என்பதே எனது கருத்து நமது நாட்டில் பல தொழிற்சாலைகள் உள்ளபோது அயல்நாட்டுக்கு போக வேண்டிய க் காரணம் என்ன


M Ramachandran
செப் 09, 2025 21:37

சாப்டர் க்ளோஸ். நீயும் கிரிமினல் தான். ஸ்டாலின் திறமை உனக்கு வராது.நீ ஒரு சுயநலமி பச்சோந்தி நம்பிக்கை துரோகி. உனக்கு ஸ்டாலின் அருள் வைத்தால் தான் டெப்பாசிட்டே கிடைக்கும். தேர்தலுக்கு பிறகு வெளிப்படையாக கோபால புரம் அடிமையாகி விடுவாய். உன் மேலால் உள்ள கொடை கேஆசு கழுத்துக்கு மேலே உள்ள கத்தி தொங்கி கொண்டிருக்கு.


K.n. Dhasarathan
செப் 09, 2025 21:26

முன்னாள் முதல்வரே நீங்கள் கொடுத்த வெள்ளை அறிக்கையை வெளியில் காட்டுங்கள், நீங்கள் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தீர்கள் என்று அறியாமல் பேசுகிறார்கள், பாவம் மன்னித்து விடுங்கள், எப்போ உங்கள் அறிக்கை நாளைக்கு கிடைக்குமா ?


pakalavan
செப் 09, 2025 21:04

200 ரூ்பா குடுத்து கூத்து கட்ற எடப்பாடியா ?


rama adhavan
செப் 09, 2025 20:05

முதலீடு வந்தால் சொல்லிவிடலாமே. வரவில்லையே? என்ன செய்ய? வைத்துக் கொண்டு வஞ்சனையா? சொல்லாமல் இருக்க. ஆமாம் தமிழக மக்கள் வரிப்பணத்தில் தானே பயணம்? பலனை மக்களுக்கு சொல்லலாமே? மேலும் யாராவது பொது நல வழக்கு போட்டால் என்ன?


GMM
செப் 09, 2025 19:32

எடப்பாடி தலைவர், அம்மா போல் செல்வாக்கு உடையவர் இல்லை. பிஜேபி ஆதரவில் சூழ்நிலை முன்னாள் முதல்வர். எடப்பாடி கோரிக்கை மதுரை விமான நிலையம் முத்துராமலிங்கம் பெயர், வன்னியர் உள் ஒதுக்கீடு பிற சாதி விலகலை உருவாக்கும். சிறுபான்மை ஆதரவு தமிழகத்தில் திமுகவிற்கு இருக்கும். செங்கோட்டையன் மீது எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நடவடிக்கை எடுக்க பின்புலம் இல்லை. வெளிநாடு முதலீடு பற்றி வெளிப்படை ஒரு பயனும் தராது. இலவச மனை, வீடு பற்றிய அறிவிப்பு அதிக வாக்கு பெற உதவாது. எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பு உதவாது. இருமுறை திமுக வெற்றிக்கு உதவியவர் எடப்பாடி. பிஜேபி அண்ணா திமுக கூட்டணியின் மக்கள் செல்வாக்கு குறைந்து விடும். தமிழக நல்ல மாற்றம் தவறான அரசியல் பேச்சால் ஏமாற்றத்தில் முடியும்.


திகழ்ஓவியன்
செப் 09, 2025 19:06

நேற்று வரை ஸ்டாலின் அவர் பணத்தை அங்கு கொண்டு சென்று டெபாசிட் செய்து வந்துள்ளார் என்று. இன்று இப்படி: புளி யை காட்டிய போது இது என்ன?எங்க தயாரிக்கிறீங்க? என்றும் இது கொட்ட எடுத்ததா?இல்லை எடுக்க போவதா?கேட்டால் நான் விவசயி என்று அள்ளி விட வேண்டியது...


Palanisamy T
செப் 09, 2025 18:37

ஏதோ கடந்த காலங்களில் நீங்கள் வெளிப்படையாக ஆட்சி நடத்தியதை போன்று பேசுகின்றீர்கள். இன்றைக்கு சில முன்னாள் அதிமுக அமைச்சர்கள்மேல் அத்தனை குற்றச் சாட்டுகள். வாக்காளர்கள் என்ற முறையில் சுயமரியாதையுள்ள மக்கள் வெளிநாட்டு முதலீடுகள் குறித்துமட்டும் இன்றி, உள்ளூர் முதலீடுகளிலும் அதிக கவனம் செலுத்துவார்கள். அவர்களுக்கு வெளிப்படைத்தன்மை தேவை. அந்த மக்களுக்கு ஊழலற்ற நல்லாட்சி தேவை. இதை இரண்டு திராவிடக் கட்சிகளும் கொடுக்க தவறிவிட்டன. சும்மா இருவரும் வேடங்கள் போட வேண்டாம். நடித்தது போதும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை