உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமித் ஷா - செங்கோட்டையன் சந்திப்பு கூட்டணிக்கு வேட்டு வைக்குமா?

அமித் ஷா - செங்கோட்டையன் சந்திப்பு கூட்டணிக்கு வேட்டு வைக்குமா?

சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருப்பது, அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'அ.தி.மு.க.விலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்கும் பணியை 10 நாட்களுக்குள் துவங்க வேண்டும்' என, பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்தார். மறுநாளே செங்கோட்டையன் கட்சி பதவிகளை, பழனிசாமி பறித்தார். அ.தி.மு.க. நிர்வாகிகள் யாரும் செங்கோட்டையனுக்காக குரல் கொடுக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த செங்கோட்டையன், தியானம் செய்து மன அமைதி பெற ஹரித்வார் போவதாக சொல்லிவிட்டு, டில்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா ஆகியோரை சந்தித்தார். இது பற்றி அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை கூறும்போது, “இன்றுகூட அமித் ஷாவை சந்தித்தேன். செங்கோட்டையனை சந்தித்தது பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை” என்றார். அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி மருது அழகுராஜ், ''தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., முதலில் தாமரை கொடியை ஏற்றினார். இப்போது, தாமரை கொடியை ஏற்கும் அளவுக்கு, அ.தி.மு.க. தலைவர்களை பா.ஜ. சிறைபிடித்துள்ளது,'' என கூறினார். ”பழனிசாமியால் நீக்கப்பட்ட செங்கோட்டையனை, அமித் ஷா டில்லிக்கு வரவழைத்து சந்தித்திருப்பது, அ.தி.மு.க.வுக்கு விடப்பட்ட சவால். கூட்டணி கட்சியின் உள் விவகாரங்களில் பா.ஜ. நேரடியாக தலையிடுவதாகவே அர்த்தம். முன்பே இப்படி நடந்து கொண்டதால்தான், 2023ல் பா.ஜ. கூட்டணியை பழனிசாமி முறித்துக் கொண்டார். இப்போது, அதே நிலை திருபுகிறதோ என்ற சந்தேகம், அ.தி.மு.க.வினருக்கு ஏற்பட்டுள்ளது” என ஒரு சீனியர் தலைவர் கூறினார். அமித் ஷா- - செங்கோட்டையன் சந்திப்பால், அ.தி.மு.க.வில் பழனிசாமிக்கு எதிரான கலகக்குரல் அடங்குமா அல்லது பா.ஜ. கூட்டணிக்கு வேட்டு வைக்குமா என்று, இரு கட்சிக்குள்ளும் விவாதம் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Easwar Kamal
செப் 11, 2025 17:48

எடப்பாடிக்கு தெரியும் பிஜேபி தயவு இல்லாமல் ஒரு 10 சீட் கூட தேறாது. கொஞ்சம் அடங்கித்தான் போவார். உதயநிதி சொல்வது போல இந்த எடபடி இருக்கின்ற வரை அதிமுக ஜெய்க்க வாய்பே இல்லை. இப்போது திமுக ஆளும் கட்சி இவர்களை மீறி தேர்தல் கமிஷன் பெரிய அளவில் சித்து விளையாட்டு காட்ட முடியாது. பேசாமல் எடப்பாடி திராவிட முன்னேற்ற கழகம் என்று வைத்து கொள்ளலாம் யாரும் சொந்தம் கொண்டாட mudiyadhu.


Durai Kuppusami
செப் 11, 2025 07:11

நீ தலைவர்.. அம்மா என்று சொல்லி இப்பொ கூட்டணிக் கே வேட்டு வைக்கும் அண்ணாமலை சொல்றது சரிதான் என்று சொல்ல முடியுமா


Tamilan
செப் 10, 2025 23:18

அவர்கள் எக்கேடுகெட்டு போனால் என்ன


அப்பாவி
செப் 10, 2025 21:44

சும்மா ஹரித்வாருக்கு மனநிம்மதிக்காக போயிட்டு திரும்பும் வழியில் அமித் சா வீட்டில் நல்ல டீ சாப்புட்டு போகலாம்னு.போயிருப்பாரு. இதில் அரசியல் பண்ணாதீர்கள்.


M Ramachandran
செப் 10, 2025 21:15

செங்கோட்டையன் அவர்கள் மிக அமைதியானவர் அவரிடம் பழனிச்சாமி முரட்டு தனமாக நடந்திருப்பது அவரின் தலை கனத்தை எடுத்து காட்டுகிறது.


கு.ரா. பிரேம் குமார்
செப் 10, 2025 20:39

அ.தி.மு.க விலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து பணயாற்ற வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தில் செயலாற்றும் செங்குட்டுவன் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும் நிலையில் வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அதை மறுத்ததன் மூலம் அ.தி.மு.க.வினர் ஒன்றாக இணைய கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள் பா.ஜ.க.விற்குள்ளும் இருப்பது தெளிவாகிறது.


Sun
செப் 10, 2025 20:30

செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார் சரி. துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கும் பிசியான வேளையில் முன்னரே திட்டமிடப் படாமல் சந்திக்க வாய்ப்ப்பே இல்லை. இதற்கு ஏன் செங்கோட்டையன் ஹரித்துவார் செல்கிறேன் கடவுள் ராமரை தரிசனம் செய்யப் போகிறேன் என ஏன் பச்சைப் பொய் சொல்ல வேண்டும். இவரது அரசியல் விளையாட்டுகளுக்கு கடவுள் ராமர் தான் கிடைத்தாரா? சொந்தக் காரணங்களுக்காக செல்கிறேன். எந்த அரசியல் கட்சித் தலைவரையும் சந்திக்க செல்லவில்லை என ஏதாவது ஒரு பொய்யை சொல்லி இருக்கலாமே? ஒரு வேளை ராமன் இருக்கும் இடம்தான் சீதைக்கு அயோத்தி என்பதைப் போல் அமித்ஷா இருக்கும் இடம்தான் செங்கோட்டையனுக்கு அயோத்தி போல.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
செப் 10, 2025 19:10

என்னமோ டெபாசிட் வாங்க போற மாதிரி சீன் , விடியல் 23 கட்சி கூட்டணி 178_190 சீட் ஜெயிக்கும், இது ஒரு பாட்டாளியின் கணிப்பு


Sundar R
செப் 10, 2025 18:59

BJP and the ADMK leaders have clout, talk independently to the tall leaders of BJP and do all that are necessary to improve their respective parties, Tamil Nadu State and its people and our country. But, DMK is a factory-run enterprise under the ownership of Karunainidhis Family. Their job is to loot the money from the Tamil Nadu people and run several hundreds of Corporate Companies. So, all the DMK leaders are slaves of Karunainidhis Family. Above all, DMK is a dirty party because DMK people have dirty minds.


SP
செப் 10, 2025 18:20

அமித்ஷா அவர்களின் கணக்கு தமிழகத்தில் எடுபடாது. எடப்பாடி யார் தலைமையில் கூட்டணி என்பது முன்கூட்டியே அறிவித்திருக்க தேவையில்லை இதன் பலன் தேர்தலில் தெரியும்.