மேம்பால பணிகள் தாமதம் ஆகலாமா?
சுங்கக் கட்டணத்தின் ஒரு பகுதி, சாலை பராமரிப்பிற்கும், நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணியரின் வசதிக்கும் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், பராமரிப்பு பணிகள் முறையாக செய்யப்படாததால் விபத்துகள் ஏற்படுகின்றன. செங்கல்பட்டு முதல் உளுந்துார்பேட்டை, செங்குறிச்சி வரையிலான 151 கி.மீ., நெடுஞ்சாலையில், புக்கத்துறை, படாளம், மதுராந்தகம், திண்டிவனம், விக்கிரவாண்டி ஆகிய இடங்களில், மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. விடுமுறை நாட்களில், போக்குவரத்து நெரிசல், ஐந்து மடங்காக அதிகரிக்கிறது. இதனால் பொதுமக்களின் பயண நேரம், எரிபொருள் செலவு அதிகரிக்கிறது. இதனை தவிர்க்க, மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். - ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,