உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தோழியை மதுபோதையில் மிதக்கவிட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண் கைது

தோழியை மதுபோதையில் மிதக்கவிட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண் கைது

சென்னை: தோழியை போதையில் மிதக்கவிட்டு, தனியார் தங்கும் விடுதியில் நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண்ணையும், அவரது ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்தனர். வேலுார் மாவட்டத்தை சேர்ந்த, 23 வயது பெண், சென்னையில் தனியார் விடுதியில் தங்கி உள்ளார். இவருக்கு சென்னை பெரம்பூரை சேர்ந்த, 27 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்தது. கடந்த மாதம் 27ம் தேதி, பெரம்பூர் பெண், தன் தோழியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மாலை, 6:00 மணிக்கு, நுங்கம்பாக்கத்தில் உள்ள 'பப்'க்கு அழைத்துள்ளார். அதை ஏற்று, வேலுார் பெண், நுங்கம்பாக்கத்தில் உள்ள, 'பப்'புக்கு சென்றுள்ளார். அங்கு தோழிகள் இருவரும் மது குடித்துள்ளனர். பின், அருகேயுள்ள தனியார் தங்கும் விடுதி அறைக்கு சென்றுள்ளனர்.அப்போது பெரம்பூர் பெண், தன் நண்பர்களான கொடுங்கையூரை சேர்ந்த மனாசே, 29, உள்ளிட்ட இருவரை, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துள்ளார். நள்ளிரவு வரை நான்கு பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். பேசிக்கொண்டே இருந்த போது, வேலுார் பெண் போதையில் மயங்கி துாங்கி விட்டார். அதிகாலை எழுந்த போது, தன் அருகே மனாசே படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடைகளும் கலைந்திருந்தன. இதனால், தன் தோழி மற்றும் அவரது ஆண் நண்பர்களை கடுமையாக திட்டிவிட்டு, மறுநாள் தன் சொந்த ஊரான வேலுாருக்கு சென்றார். அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்ற போது, பாலியல் வன்முறைக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. இதனால், தோழி மற்றும் அவரது ஆண் நண்பர்கள் மீது, வேலுார் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றம் சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலைய எல்லையில் நடந்திருப்பதால், புகார் மனு அங்கு மாற்றப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் புகார் அளித்த பெண், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது உறுதியானது.இதையடுத்து, பாலியல் வன்முறை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பெரம்பூர் பெண், அவரது ஆண் நண்பர் மனாசே, 29 ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மற்றொரு வாலிபரை தேடி வருகின்றனர்.கைதான பெண்ணும், ஆண் நண்பர்களும் சிறு வயதில் இருந்தே நட்புடன் பழகி வந்தவர்கள். அவர்கள் விரும்பியதால், தன் தோழியை போதையில் மிதக்க விட்டு, நண்பர்களுக்கு விருந்தாக்கியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

Natchimuthu Chithiraisamy
ஜூலை 11, 2025 13:12

பெண்ணை பெற்ற அப்பா அம்மாவுக்கு அந்த ஆண்கள் நன்றி சொல்லட்டும். அவர்கள் கண்டித்து வளர்த்த விதம். .


Ben Sam
ஜூலை 11, 2025 08:51

ஆண் வர்க்கத்தின் வக்கிரம். ஆணானாலும் பெண்ணானாலும் குடி எல்லாவற்றையும் கெடுக்கும். திராவிட மாடலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.


HoneyBee
ஜூலை 08, 2025 13:05

குடிச்சிட்டு கவுந்து படுத்துட்டு மத்தவக என்ன சொல்வது. பெண்கள் குடிப்பழக்கம் வந்தது தான் செய்த சாதனை. இதுதான் பெண் விடுதலையா. வேலை முடிந்தது இதை ஏன் அந்த பெண் பெரிது படுத்த வேண்டும். இதெல்லாம் குடிக்கும் போது தெரியாதா. குடி உடல் உறவு இது சகஜமாகிப் போனது இன்றைய பெண்களிடம்


sugumar s
ஜூலை 08, 2025 16:22

very true. unless ladies understand the issues that could crop up if they are drunk there could be no solution. you can complain to police what whatever had happened is happened. if drinking was avoided, she could have come home safely.


தமிழன்
ஜூலை 08, 2025 11:56

என்ஜாய்மென்ட் வித்தவுட் ரெஸ்பான்சிபிலிட்டி. அதைத்தான் இவர்கள் செய்துள்ளனர்


Gokul Krishnan
ஜூலை 08, 2025 07:27

குற்றம் செய்தது அந்த பெரம்பூர் பெண்ணும் அவளது ஆண் நண்பனும் ஆனால் பெயர் வெளியிடும் போது ஆணும் பெயர் மட்டும் ஏன் அவளுக்கு பெயர் இல்லையா


Vel1954 Palani
ஜூலை 07, 2025 19:55

ஆக மொத்தத்தில் தமிழக மக்கள் பெரும்பாலோர் மதுவுக்கும் மாதுவுக்கும் அடிமை ஆகிவிட்டார்கள். வெளியே தெரிந்தது சில. வெளியே தெரியாதது பல சம்பவங்கள். எந்த கட்சி வந்தாலும் இதற்கு விடிவுகாலம் இல்லை . வெளியே பயிரை மேய்கிறது. நடக்கும் இந்த கலியுக கலிகாலத்தில் அக்கிரமம் அராஜகம் அதிகரித்து விட்டது. அந்த ஆண்டவனே எல்லாத்தையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறன் . தண்டனை கொடுக்க மாட்டேங்கிறானே.சாமி எல்லாத்தையும் பார்த்து கொண்டுதான் இருக்கு. அதனால் சாமி மேலே நம்பிக்கை குறைந்து விடும் போல இருக்கு.


Suresh Sivakumar
ஜூலை 07, 2025 16:36

Dravida model. Periyar mann


சிவகுமார்
ஜூலை 07, 2025 16:01

வேலியே பயிரை மேய்கிறது - ஆட்சியாளர்களுக்கு அச்சமில்லை. பெண்களைப்பற்றிய புரிதல் திரைப்படங்களில் தவறாக சித்தரிக்கப்படுகிறது. மிகவும் வருந்தத்தக்கது.


திருட்டு திராவிடன்
ஜூலை 07, 2025 15:54

இதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சி


Rathna
ஜூலை 07, 2025 15:54

குடி குடியை கெடுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள். பெண் சுதந்திரம் என்ற பெயரில் கடை சரக்கு வெளியில் வந்தால்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை