உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காதில் பேண்டேஜூடன் பிரசாரத்தில் டொனால்டு ட்ரம்ப்

காதில் பேண்டேஜூடன் பிரசாரத்தில் டொனால்டு ட்ரம்ப்

மில்வவூக்கி: துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்த அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் காதில் பேண்டேஜூடன் மீண்டும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதே நேரம் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோபைடன் போட்டியிடுகிறார்.நேற்று முன்தினம் (ஜூலை 13) பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் ட்ரம்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார். காது பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று மில்வவூக்கி மாகாணத்தில் டிரம்ப் பிரசாரம் செய்ய வந்தார். அப்போது காதில் பேண்டேஜூடன் பொது மக்கள் முன் தோன்றினார். இப்பிரசாரத்தில் டிரம்ப் மகனும் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Balasubramanian
ஜூலை 17, 2024 14:38

மக்கள் குறை கேட்டே ஆகவேண்டும் ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில் விட முடியாது


ஆரூர் ரங்
ஜூலை 17, 2024 13:18

1967 இல் துவங்கிய வேலை. அப்போது குண்டடிப்பட்ட எம்ஜியார் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து அனுதாபம் தேடி கருணாநிதி அண்ணா வென்றார்கள்.


Indhuindian
ஜூலை 17, 2024 06:47

தீதி ஸ்டயலில் பிரச்சாரம் ஆனா இது நிஜம் அது டிராமா


மேலும் செய்திகள்