வாசகர்கள் கருத்துகள் ( 2 )
வாழ்த்துகள்
பதக்கம் வென்ற அணைத்து வீரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பாரிஸ்: பாரிஸில் நடைபெறும் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் தமிழக வீராங்கணைகளான துளசிமதி வெள்ளி பதக்கமும், மணிஷா ராதாஸ் வெண்கல பதக்கமும் பெற்றனர்.மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதி போட்டியில் சீனாவின் யாங் குயூ ஷியாவுடன் விளையாடிய துளசிமதி முருகேசன் 21-17, 21-10 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் அவர் வெள்ளி பதக்கம் வென்றார்.வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் மனிஷா ராமதாஸ் டென்மார்க்கின் கேத்ரின் ரோசன்கிரனை நேர் செட்களில் தோற்கடித்து வெண்கலம் வென்றார்.இதில் 21-12, 21-18 என்ற செட் கணக்கில் மனிஷா ராமதாஸ் வெற்றி பெற்றார். ரோசன்கிரனை தோற்கடிக்க மனிஷா 25 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். இத்துடன் பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. பதக்க பட்டியலில் இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் 22 இடத்தில் உள்ளது.
வாழ்த்துகள்
பதக்கம் வென்ற அணைத்து வீரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.