உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சிறுவனை சுட்டு கொன்ற போலீசார்

கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சிறுவனை சுட்டு கொன்ற போலீசார்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில், ஒருவரை கத்தியால் குத்திய 16 வயது சிறுவனை அந்நாட்டு போலீசார் சுட்டுக் கொன்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில், நேற்று முன்தினம் இரவு, 16 வயது சிறுவன் ஒருவன் தகராறில் ஈடுபட்டான். ஹார்டுவேர் கடையின் வாகன நிறுத்துமிடத்தில் நடந்த சண்டையில், அங்கிருந்த ஒரு நபரை சிறுவன் கத்தியால் குத்தினான். இது குறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த போலீசார் சிறுவனை பிடிக்க முயன்றனர். அப்போது, போலீசாரை நோக்கி கத்தியால் குத்த வந்த சிறுவனை, அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், குண்டு காயங்களுடன் போராடிய சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். அவனை பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே அவன் இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து ஆஸி., போலீசார் கூறுகையில், 'சம்பவ இடத்தில் வன்முறையில் ஈடுபட போவதாக, முந்தைய நாள் இரவே சிறுவன் ஒருவன் போன் செய்து தகவல் தெரிவித்தான்.'அந்த இடத்துக்கு நாங்கள் செல்வதற்கு முன்பே, கத்திக்குத்து நடந்துவிட்டது. அவனை பிடிக்க முயன்ற போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், அவன் இறந்துவிட்டான். அந்த சிறுவன் ஆன்லைன் வாயிலாக பயங்கரவாத செயல்கள் குறித்து பயிற்சி எடுத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளான். இருப்பினும், விசாரணையின் முடிவில் அனைத்து விபரங்களும் தெரியவரும்' என தெரிவித்தனர்.கடந்த மாதம் 15ம் தேதி சிட்னியில் உள்ள தேவாலயத்தில் நுழைந்த 16 வயது சிறுவன், அங்கிருந்த பாதிரியாரை கத்தியால் குத்தினான். இது தொடர்பாக சிறுவன் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.சமீபகாலமாக, ஆஸி.,யில் சிறுவர் பயங்கரவாதம் அதிகரித்து வரும் சூழலில், “இது அமைதியை விரும்பும் தேசம். இங்கு வன்முறை, பயங்கரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை,” என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mohan
மே 07, 2024 16:42

ஒஇந்த மாதிரி சிறுவர்களை அமைதி மார்க்கத்தினர்தான் மூளைசலவை செய்து வன்முறையில் ஈடுபடுத்துகின்றனர் அதுவும் முந்திய நாளே அனவுன்ஸ் வேற செய்துள்ளான்- அதைப் பாருங்க கண்டிப்பா அமைதி மார்க்க ஆசாமி தான்


Ramesh Sargam
மே 06, 2024 13:04

வளர்ப்பு சரியில்லாமல் போவது, பெற்றெடுத்த பிள்ளைகள் மீது அதிக அக்கறை காட்டாமல் பெற்றோர்கள் செயல்படுவது போன்றவற்றால், இப்படி இளம்வயதிலேயே சிறுவர்கள் தவறான வழிக்கு செல்கின்றனர் முதலில் பெற்றோர்கள் சரியாக கவுன்சிலிங் செய்யப்படவேண்டும்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி