உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தான் பற்றி உலகுக்கே தெரியும்; ரயில் கடத்தலில் பழிசுமத்தியதற்கு இந்தியா பதிலடி

பாகிஸ்தான் பற்றி உலகுக்கே தெரியும்; ரயில் கடத்தலில் பழிசுமத்தியதற்கு இந்தியா பதிலடி

புதுடில்லி: 'பயங்கரவாதிகளின் மையமாக திகழ்வது எந்த நாடு என்பது உலகிற்கே தெரியும். மற்ற நாடுகளின் மீது பழியை போடுவதற்கு பதிலாக, உங்கள் உள்நாட்டில் நிலவும் பிரச்னைகளை சரிசெய்வதில் கவனம் செலுத்துங்கள்', என்று பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.கடந்த இரு தினங்களுக்கு முன்பு, நம் அண்டை நாடான பாகிஸ்தானின், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இருந்து, கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நோக்கி சென்ற கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணியர் ரயிலை பயங்கரவாதிகள் கடத்தினர். தண்டவாளத்தில் வெடிகுண்டை வெடிக்கச் செய்து, ரயிலில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட, 450 பயணியரை பயங்கரவாதிகள் சிறைபிடித்தனர். அதன்பிறகு, பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று விட்டு, மக்களை அந்நாட்டு ராணுவத்தினர் மீட்டனர். உலகளவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பலூச் பிரிவினைவாதிகளுக்கு இந்தியா மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் சப்கத் அலி கான் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பிருப்பதாக தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், 'எங்களது கொள்கையில் இருந்து நாங்கள் மாறவில்லை. அதுபோல உண்மையும் மாறாது. பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதத்தை இந்தியா ஆதரிக்கிறது. உலகளவிலான படுகொலை பிரசாரத்தை இந்திய முன்னெடுத்து வருகிறது,' எனக் கூறினார். பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து பதிலளித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், ' பாகிஸ்தானின் அடிப்படை ஆதாரமற்ற இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கிறோம். பயங்கரவாதிகளின் மையமாக திகழ்வது எந்த நாடு என்பது உலகிற்கே தெரியும். மற்ற நாடுகளின் மீது பழியை போடுவதற்கு பதிலாக, உங்கள் உள்நாட்டில் நிலவும் பிரச்னைகளை சரிசெய்வதில் கவனம் செலுத்துங்கள்,' என்றார். இந்தியாவைப் போல ஆப்கானிஸ்தானும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்ததுடன், 'உங்களின் உள்நாட்டு பாதுகாப்பில் அக்கறை செலுத்துக்கள்', என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rahul Nigam
மார் 14, 2025 22:20

இந்தியா பாகிஸ்தானுக்கு துணை நிற்க வேண்டும். ஏனெனில், நாட்டின் பிரிவினையின் போது ஆங்கிலேயர்கள் மதத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்தினர், இதன் விளைவாக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது, இது விரும்பத்தகாதது.


M.COM.N.K.K.
மார் 14, 2025 20:24

நமது இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றபோது நமது தலைவர்கள் தெரிந்தோ தெரியாமலோ சில தவறுகளை செய்துவிட்டனர் ஆகவேதான் நமது நாடு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.குறிப்பாக ஜம்மு காஷ்மீர் பலுசிஸ்தான் போன்ற பிரச்சனைகளை சொல்லலாம்.இதை நமது தலைவர்கள் நினைத்திருந்தால் இந்த பிரச்சனைகளை அன்றே முடித்திருக்கலாம் நாம் சில பகுதிகளை அன்று தேவை இல்லை என்று எண்ணியதால் இன்று நாம் பல வகையில் வேதனையுடன் வாழ்ந்துவருகிறோம்.காஷ்மீர் மன்னரும் பலுசிஸ்தான் மன்னரும் இந்தியாவுடன்தான் சேர விரும்பினார்கள் ஆனால் நமது அப்போதைய பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அவர்கள் அதில் ஆர்வம் காட்டாமல் இருந்ததால் இப்போது நாம் துன்பத்தை அனுபவித்துவருகிறோம் இதற்கு காலம்தான் பதில்சொல்லவேண்டும்.


Ramesh Sargam
மார் 14, 2025 20:20

தீவிரவாதிகள் தலைநகரம் பாக்கிஸ்தான் என்று உலகுக்கே தெரியும்.


A1Suresh
மார் 14, 2025 17:47

பல்வேறு மனிதவுரிமை மீறல்கள் பலூச் மக்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் 70 ஆண்டுகளாக செய்து வருகிறது. எந்தவிதமான வளர்ச்சி பணிகளும் பலூச் மாகாணத்தில் நடப்பதில்லை. 40 பில்லியன் டாலருக்கு பலூச் மாகாணத்தை சீனாவிடம் மொத்தமாக அடகுவைத்து விட்டது பாகிஸ்தான் அரசு. எந்த விதமான கல்வி, பொருளாதார, சமூக நலத்திட்டங்கள், உரிமைகள், சலுகைகள் பலூச் மக்களுக்கு பாகிஸ்தான் தரவில்லை. பல்வேறு ஆதிவாசி இனக்குழுக்கள் வாழும் பலூச் மாகாணத்தையும், பஷ்தூன் பழங்குடியினர் வாழும் கைபர்-பக்தூன்வா மாகாணத்தையும் சுரண்டி கொழுக்கிறது மேற்கு பஞ்சாப் எனும் மேல்தட்டு நவநாகரீக பணக்கார வர்க்கம். எனவே இது முழுக்க முழுக்க வர்க்கபுரட்சி ஆகும். இதற்கும் இந்தியாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்பகுதிகளுக்கும் இந்தியாவிற்கும் நில வழியாக நேரடியான சாலை தொடர்பே இல்லை. பிறகு எப்படி பணமோ -ஆயுதமோ- மற்ற உதவிகளையோ இந்தியா செய்யமுடியும் ? ஈரான்-ஆப்கானிஸ்தான் மீது வேண்டுமானால் குற்றம் சாட்டலாம்.


Karthik
மார் 14, 2025 15:16

இஞ்சி தின்ன குரங்கு போல முழிக்குது இந்த பக்கி அரசு..


நிஜ தமிழன்
மார் 14, 2025 14:39

வயிட்டேரிச்சல் பிடித்தவர்கள். இந்த பாக்கிஸ்தான் இந்தியாவிக்கு செய்த தீவிரவாத தாக்குதல்கள் என்னில் அடங்காதவை, இப்போது நம்மை பார்த்து குறைக்குது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை