உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஓமன் கடலில் கவிழ்ந்த எண்ணெய் டேங்கர்: 13 இந்தியர்கள் உட்பட 16 மாயம்

ஓமன் கடலில் கவிழ்ந்த எண்ணெய் டேங்கர்: 13 இந்தியர்கள் உட்பட 16 மாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மஸ்கட்: ஓமன் கடலில் டுக்ம் துறைமுகத்திற்கு சென்ற கப்பலில் இருந்து எண்ணெய் டேங்கர் கவிழ்ந்தது. அதில் பணியாற்றிய 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.ஓமனின் தென்மேற்கு கடற்கரையில் டுக்ம் துறைமுகம் அமைந்துள்ளது. இது அந்த நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில் சார்ந்த முக்கிய அங்கமாக திகழ்கிறது. ராஸ் மத்ரகாவில் இருந்து கிளம்பிய 'பிரெஸ்டீஜ் பால்கன்' என்ற கப்பல், இந்த துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்தது. துறைமுகத்திற்கு அருகே, கப்பலில் இருந்த எண்ணெய் டேங்கர், கடலில் தலைகீழாக கவிழ்ந்தது.இதில் எண்ணெய் டேங்கரில் பணியாற்றிய இந்தியர்கள் 13 பேர், இலங்கையை சேர்ந்த 3 பேர் என 16 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை ஓமன் கடல் பாதுகாப்பு மையம் உறுதி செய்துள்ளது. கடலில் தலைகீழாக கவிழ்ந்ததால் 16 பேரும் இறந்திருக்க கூடும் என்கின்றனர். இந்த கப்பல் 117 மீட்டர் நீளம் கொண்ட, குறுகிய கடல் பயணத்துக்காக 2007ல் வடிவமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை