உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகின் 80% பிரச்னைக்கு முதியவர்கள் தான் காரணம்; டிரம்பை கேலி செய்தாரா ஒபாமா!

உலகின் 80% பிரச்னைக்கு முதியவர்கள் தான் காரணம்; டிரம்பை கேலி செய்தாரா ஒபாமா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: உலகின் 80% பிரச்னைக்கு முதியவர்கள் தான் காரணம் என முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். டிரம்பை ஒபாமா கேலி செய்திருப்பார் என அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.அமெரிக்காவில் 2008 முதல் 2017ம் ஆண்டு வரை அதிபராக பணியாற்றியவர் தான் பராக் ஒபாமா. 64 வயதான ஒபாமா வயதான தலைவர்களைப் பற்றி ஒரு கருத்தை முன் வைத்துள்ளார். உலகின் 80% பிரச்னைக்கு முதியவர்கள் தான் காரணம் என முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியது 77 வயதான அதிபர் டொனால்டு டிரம்பைக் குறை கூறும் விதமாக பரவலாகக் கருதப்பட்டன.ஒபாமா அளித்த பேட்டி ஒன்றில், ''அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் முதியவர்களால் தான் உலகில் 80 சதவீதம் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவர்கள், தங்கள் சாவுக்கு பயப்படுகிறார்கள். முக்கியத்துவம் இல்லாமல் போவதை எண்ணி அஞ்சுகிறார்கள். அதனால் அவர்கள் எதையும் விட்டு விடத் தயாராக இல்லை.''அவர்கள் எல்லாவற்றிலும், தங்கள் பெயரை எழுதி வைக்கிறார்கள். அச்ச உணர்ச்சி அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது,'' என்று கூறியுள்ளார்.அவர், 2019ம் ஆண்டிலும் ஒரு முறை இதேபோல் பேசியுள்ளார். ''ஒவ்வொரு பிரச்னையிலும் பாருங்கள். முதியவர்கள் தான் வழி விடாதவர்களாக, பிரச்னைக்கு காரணமானவர்களாக இருப்பர். நீங்கள் இந்த வேலையை செய்வதற்கு தான் வந்திருக்கிறீர்கள் என்று அரசியல் தலைவர்களுக்கு நினைவூட்டுவது முக்கியம். அதே வேளையில், நீங்கள் ஆயுள் காலத்துக்கும் அதே வேலையை செய்து கொண்டிருக்க முடியாது,'' என்று அவர் தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் 'பாராசிட்டமால்' மருந்து சாப்பிட்டால், குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படும் என்று சில நாட்களுக்கு முன் டிரம்ப் கூறியிருந்தார்.அது பற்றி கருத்து தெரிவித்த ஒபாமா, ''இத்தகைய கருத்துக்கள், பொது சுகாதாரத்தை பாதிக்கும். கர்ப்பிணியாக இருக்கும் பெண்களை பாதிக்கும். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோரை பதற்றம் அடையச் செய்யும்,'' என்றார்.வயதான தலைவர்களை கடுமையாக சாடி, ஒபாமா பேசி இருப்பது அமெரிக்க அரசியலில் பேசும் பொருளாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sun
செப் 27, 2025 23:16

கை குடுங்க சகல ! இப்பத்தான் நீங்க கரெக்ட்டா பேசி இருக்கீங்க!


ஆரூர் ரங்
செப் 27, 2025 21:46

90 வயதிலும் மகனுக்கு வழிவிடாமலிருந்தவர் பற்றி அவருக்குக்கூட தெரிந்திருக்குமா?.


SANKAR
செப் 28, 2025 06:05

also applicable to a 75 years old in India


D.Ambujavalli
செப் 27, 2025 18:57

நம் ஊரில் நடக்கும் ராமதாஸ்- அன்புமணி பனிப்போரிலும் இந்த தத்துவம்தான் வெளிப்படுகிறது ‘பழசாய்ப்போன பாத்திரமெல்லாம் பரனுக்குள்ளே போகணும்’ என்று ஒரு திரைப்பாடல் உள்ளது ஆனால் வீட்டு விசேஷங்களுக்கு இறக்கி வைத்து, துலக்கிப் பயன்படுத்துவது போல,இக்கட்டான சூழ்நிலைகளில் அவர்களின் அறிவுரை, ஆலோசனையைக் கேட்டுக்கொள்ளலாம். பெரியவர்களும், ‘நாமும், விழுந்து எழுந்து பெற்ற அனுபவங்களை இளையவர்களையம் பெற விடுவோம் தேவைப்பட்டால் அழைப்பின் பேரில் தலையிடுவோம். என்று இருப்பது அவர்களுக்கும் மதிப்பளிக்கும் Summon இல்லாத ஆஜர் தன் மதிப்பைத் தானே கெடுத்துக்கொள்வதாகும்


Santhakumar Srinivasalu
செப் 27, 2025 18:49

இது நம்ம பாமக ராமதாஸிக்கு பொருந்தும்!


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 27, 2025 18:35

நமது பிரதமர் மோடியிடம் அவர் நிறைய கற்றுக்கொண்டுவிட்டார் என்றே தோன்றுகிறது. மேக் இன் இந்தியா திட்டம், உள்கட்டுமான விரிவாக்கம், அண்ணிய என்ஜிஓக்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பு, பொதுநலன் சார்ந்த திட்டங்கள், ராணுவ பலத்தை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உயர்த்திவருவது, இப்படி பல நடவடிக்கைகள். மோடியிடம் கற்ற வித்தைகளை மோடியிடமே காட்டுகிறார் என்பதுதான் நம் கவலை.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 28, 2025 02:34

தம்பட்டம் அடித்துக் கொள்வது,. டிகிரி சர்டிபிபேட்டை கேட்டா கோர்ட்டுக்கு பின்னாடி ஒளிந்து கொள்வது, பெருமுதலாளிகளை மிரட்டி வசூல், சர்வாதிகாம், இப்படி லிஸ்ட் நீளமா போகுது


Sankari
செப் 27, 2025 18:26

வயதான முதியவர் ஒருவர் வயது பிரச்சினையை பற்றி பேசுவது சிரிப்பு வரவழைக்கிறது


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 27, 2025 18:24

இது பெரும்பாலும் உண்மை. ஆனால் சில பதவிகளுக்கு பல்லாண்டுகால அனுபவமுடன் வரலாற்று தவறுகளை நினைவில்கொண்டு அவற்றை நேர் செய்யும் முயற்சிகள் முதியவர்களாலே முன்னின்று நடத்தப்படுகிறது. அவர்கள் அடுத்த தலைமுறையினரை முன்னிறுத்தி, வழிநடத்தினால் இன்னும் சிறப்பு. ஆனால் பெரும்பாலான நாடுகளில் கிழவர்கள் ஆட்சியில் அமர்ந்துகொண்டு, அல்லது வாரிசுகளுடன் எல்லாமும் நானே, நானே என்று ஆடுவதுதான் நடக்கிறது.


spr
செப் 27, 2025 18:19

அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் முதியவர்களால் தான் உலகில் 80 சதவீதம் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவர்கள், தங்களுக்கான முக்கியத்துவம் இல்லாமல் போவதை எண்ணி அஞ்சுகிறார்கள். அதனால் அவர்கள் எதையும் விட்டு விடத் தயாராக இல்லை.அவர்கள் எல்லாவற்றிலும்,தங்கள் பெயரை எழுதி வைக்கிறார்கள். அச்ச உணர்ச்சி அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது, இது இந்தியாவுக்கு மிக பொருத்தம் நாடு இளைஞர்களை அதிகம் கொண்டதாக இருப்பினும், இங்கே முடிவெடுக்கும் முக்கிய,பொறுப்புக்களில் இருப்பவர்கள் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் இருப்பவர்களே பொறுப்புடன் அடுத்த தலைமுறையை உருவாக்க தவறியவர்கள்.


புதிய வீடியோ