உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வரக் கூடாது? அணுமின் நிலையங்களில் தாக்குதலுக்கு பின் டிரம்ப் சூசகம்!

ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வரக் கூடாது? அணுமின் நிலையங்களில் தாக்குதலுக்கு பின் டிரம்ப் சூசகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஈரானின் 3 அணுமின் நிலையங்களில், அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், அங்கு (ஈரான்) ஏன் ஆட்சி மாற்றம் வர கூடாது என அதிபர் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 10 நாட்களாக நடந்து வரும் சண்டை முக்கிய கட்டத்தை எட்டியது. அமெரிக்கா நேற்று நேரடியாக தாக்குதல் நடத்தியும், மோதலில் இருந்து பின் வாங்காத ஈரான், சில மணி நேரங்களில் இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறி வைத்து சக்திவாய்ந்த, 'கொரம்ஷார் - 4' ஏவுகணையை ஈரான் வீசியது.இந்நிலையில், ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வர கூடாது என அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து டிரம்ப், சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கிரேட் பி-2 விமானிகள் மிசோரியில் பாதுகாப்பாக தரையிறங்கினர். சிறப்பாகச் செய்த பணிக்கு நன்றி. ஈரானில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதம் சிறப்புமிக்கது.தாக்குதல்கள் கடினமாகவும், துல்லியமாகவும் இருந்தன. எங்கள் ராணுவத்தின் திறமை நிரூபிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானது அல்ல. ஆனால் தற்போதைய ஈரான் ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சேகர்
ஜூன் 23, 2025 13:31

அணு ஆயுதங்களை செயலிழக்க செய்யாமல் கதிரியக்க கசிவுகளே இல்லாமல் அணு ஆயுத ஆலையை எப்படி ஒழிக்க முடியும் என இன்னும் புரியவில்லை. டிரம்ப் 22ஆம் நூற்றாண்டு அறிவாளி என நினைக்கிறேன்.


சேகர்
ஜூன் 23, 2025 12:39

அமெரிக்கர்களே அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் தேவை என நினைக்கிறார்களாமே


Sudha
ஜூன் 23, 2025 11:50

முதல்ல நீ தாண போகப்போற,


Narayanan
ஜூன் 23, 2025 10:38

சமீபத்தில் நடந்த ஜி 7 மாநாட்டில் டிரம்ப் மோடிஜியை சந்தித்தார் . டிரம்ப் தன்னால்தான் இந்திய பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டது என்று பொய்ச்சொன்ன காரணத்தினால் அவர் அழைத்தபோது மோடிஜி நம் நாட்டில் முக்கிய வேலை இருக்கிறது என்று மறுத்த தருணத்தில் பாகிஸ்த்தான் ராணுவத்தளபதியை அழைத்து வெள்ளை மாளிகையில் விருந்து என்னே ஒரு அர்ப்பத்தனம் பாகிஸ்த்தான் காரனும் அதற்கு நன்றிக்கடனாக டிரம்புக்கு நோபல் பரிசுக்கு சிபாரிசுசெய்தான் . பின்னர் அந்தர்பல்ட்டி அடித்துவிட்டான். டிரம்ப் வக்கரபுத்திகாரனாக மாறிவிட்டார் .


Narayanan
ஜூன் 23, 2025 10:24

அமைதி பூங்காவாக இருந்த அமெரிக்காவை, உலகின் மற்ற நாடுகளை நித்தமும் எதாவது ஒரு கோணத்தில் அச்சப்படுத்திக் கொண்டே இருப்பதால் அமெரிக்காவில்தான் ஆட்சிமாற்றம் உடனடித்தேவை .


Senthoora
ஜூன் 23, 2025 10:00

முதலில் வட்டி, வரி, பெட்ரோலுக்காக. கனிமலவளத்துக்காக இஸ்ரேலை விட்டு தூண்டிவிட்டு, பிறகே அந்த நாட்டுக்கு தானே வந்து குண்டுபோடும் இந்த பயித்தியகார ஆட்சி அமெரிக்காவில் மாறனும்.


Paramasivam. Y
ஜூன் 23, 2025 08:12

மொதல்ல ட்ரம்ப பதவியில் இருந்து மாத்தணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை