மேலும் செய்திகள்
மாயமான இந்திய மாணவர் ஆற்றில் சடலமாக மீட்பு
6 hour(s) ago
பீஜிங்: பலகட்ட சோதனைகளுக்கு பின், 'புஜியன்' என்ற நவீன விமானம் தாங்கி போர்க்கப்பலை, சீனா தன் கடற்படையில் முறைப்படி நேற்று இணைத்தது. நம் அண்டை நாடான சீனா, 'லியோனிங், ஷான்டாங்' என்ற இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்களை கொண்டுள்ளது. இந் நிலையில் மூன்றாவதாக, 'புஜியன்' என்ற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய விமானம் தாங்கி போர்க்கப்பலை, பலகட்ட சோதனைகளுக்கு பின், கடற்படையில் முறைப்படி நேற்று இணைத்தது. ஹைனான் மாகாணத்தின் சான்யா கடற்படை தளத்தில் நடந்த நிகழ்ச்சியில், சீன அதிபர் ஷீ ஜின்பிங் இந்த கப்பலின் சேவையை துவக்கி வைத்தார். 2024 மே மாதத்தில், புஜியன் போர்க்கப்பலின் முதல் சோதனை நடந்த நிலையில், தற்போது அது கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. 'லியோனிங், ஷான்டாங்' விமானம் தாங்கி போர்க்கப்பல்களில், 'ஸ்கி - ஜம்ப்' என்ற முறையில் விமான ஏவுதல் நடக்கிறது. புஜியன் போர்க்கப்பலில் மின்காந்த உந்துவிசை அமைப்பு வாயிலாக ஏவுதல் நடக்கிறது. இந்த போர்க்கப்பலில் அதிகளவில் ஆயுதங்கள் எடுத்துச்செல்ல முடியும். மேலும், கனரக விமானங்களையும் இதிலிருந்து ஏவ முடியும். சீ னாவின் முதல் கடற்படை விமா னம் தாங்கி கப்பலான லியோனிங் முன்னாள் சோவியத் யூனியனின் தயாரிப்பாகும். முதல் இரு விமானம் தாங்கி போர்க்கப்பல்களை விட, புஜியன் போர்க்கப்பல் மிகப்பெரியது. தொழில்நுட்ப ரீதியாக, புஜியன் கப்பல் அமெரிக்காவின் போ ர்டு கப்பலின் ஏவுதல் அமைப்பை நெருங்கி உள்ளது. இருப்பினும், அணுசக்தி வாயிலாக இயங்குதல், மிகப்பெரிய அளவு மற்றும் மேம்பட்ட ஏவுதள வடிவமைப்பு ஆகிய காரணங்களினால், அமெரிக்காவின் போர்டு கப்பலே இன்னமும் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த, திறன் மிக்க விமானம் தாங்கி கப்பலாக கருதப்படுகிறது.
6 hour(s) ago