பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஏவுகணை
இஸ்லாமாபாத்:அமெரிக்காவின் நவீன 'ஏ.ஐ.எம். - 120' ரக ஏவுகணைக ளை பாகிஸ்தானுக்கு வழங்க அந்நாட்டின் போர் விவகாரங்கள் துறை ஒப் புதல் அளித்துள்ளது. இது குறித்து அமெரிக்க போர் விவகாரங்கள் துறை வெளியிட்ட அறிக்கை: அரிசோனா மாகாணம் டூசான் நகரைச் சேர்ந்த 'ரேதியான் கம்பெனி' தன் தயாரிப்பான ஏ.ஐ.எம். - 120 ஏவுகணைகளின் உற்பத்திக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் ஏவுகணைகளை பெற உள்ளன. இது வானில் இருந்து வானில் உள்ள நடுத்தர துார இலக்குகளை தாக்கக் கூடியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.