உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பெண் ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு; தலிபான் ஆட்சிக்கு மாறும் வங்கதேசம்

பெண் ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு; தலிபான் ஆட்சிக்கு மாறும் வங்கதேசம்

டாக்கா: வங்கதேச வங்கி எனப்படும் அந்நாட்டின் மத்திய வங்கி, பெண் ஊழியர்கள் அரைக்கை வைத்த மேலாடைகள், லெக்கிங்ஸ் அணிய தடை விதித்திருப்பது போராட்டத்தை துாண்டியுள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்த 2024 ஆகஸ்டில் முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனாவின் அரசு, மாணவர்கள் போராட்டத்தால் கவிழ்ந்தது. அதன்பின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு ஆட்சியில் உள்ளது. இவரது ஆட்சியில், வங்கதேச நிறுவன தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானை நினைவுகூரும் விஷயங்களை மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. அவரது உருவம் பதித்த ரூபாய் நோட்டுகள் வெளியிடுவதை நீக்கியுள்ளனர். முஜிபுர் ரஹ்மானின் பெயரிலான நினைவிடங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதுவரை அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வந்த அரசு, தற்போது கலாசார ரீதியான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக அந்நாட்டின் மத்திய வங்கியான வங்கதேச வங்கி, சமீபத்தில் பெண் ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், பெண்கள் பணிக்கு பொருத்தம் இல்லாத, குட்டையான, அரைக்கை உடைகள், இறுக்கமான லெக்கிங்ஸ் ஆகியவற்றை அணியக் கூடாது. புடவை அல்லது சல்வார் கமீஸ் மட்டுமே அணிய வேண்டும். பணியிடத்தில் ஒழுக்கத்தைப் பேணுவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்தது. இதற்கு, பெண் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தலைநகர் டாக்காவில் உள்ள வங்கதேச வங்கியின் தலைமையகத்திற்கு வெளியே, பெண் ஊழியர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், 'எங்கள் உடை; எங்கள் உரிமை; இது தலிபான் ஆட்சியல்ல; இது வங்கதேசம்' போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ' எங்கள் உடைகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பறிக்கும் இந்த உத்தரவு, வங்கதேசத்தின் மதச்சார்பற்ற அரசியல் சாசனத்திற்கு எதிரானது' என்று போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர். சமூக வலைதளத்திலும் வங்கியின் முடிவுக்கு எதிராக பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. பிரச்னை தீவிரமானதை தொடர்ந்து, வங்கதேச வங்கி இந்த உத்தரவை வாபஸ் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பேசும் தமிழன்
ஜூலை 26, 2025 13:10

பள்ளிக்கூட சீருடை..... சூப்பர்.... ஆடைக்கு உள்ளே இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்று தெரியாத அளவுக்கு இருக்கிறது.


lana
ஜூலை 26, 2025 11:14

ஏம்பா அந்த கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம் பெண்கள் க்கு மட்டும் தானா. ஆண்கள் க்கு தேவையில்லை யா. ஆண்கள் ஒழுக்கம் ஆக இருந்தால் அங்குள்ள பெண்கள் பாதுகாப்பு ஆக இருப்பார் கள். இந்த மூர்க்கத்தனமான சிந்தனை மாறாத வரையில் எதுவும் மாறாது.


hasan kuthoos
ஜூலை 26, 2025 10:22

கண்ணியமான உடை அணிந்து செல்வது தாலிபான் ஆட்சி என்றால் அதை செய்வதில் என்னதவறு , பெண்களை காட்சிப்பொருளாக பார்க்கும் மற்றவர்கள் மத்தியில் பெண்களை கண்ணியமாக ஒழுக்கமாக ஆடை அணியச்சொல்லும் இஸ்லாம் மார்க்கம் ஆயிரம் மடங்கு உயர்ந்தது , அதை ஆணாதிக்கம் என்றோ வேறு எதுவேனும்னாலும் சொல்லிக்கொள்ளுங்கள்


vijay
ஜூலை 26, 2025 11:17

அது சரிப்பா. ஆமாம், ஆண்கள் எல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை கல்யாணம் செய்யலாம் என்று உங்க சமூகத்தில் இருக்கே. அது எல்லாம் என்னப்பா? உங்க மார்க்கம் தவிர மற்ற சமூக மக்களை காபிர் என்று சொல்லுதே, அதெல்லாம் என்ன தம்பி?


அப்பாவி
ஜூலை 26, 2025 09:20

ஆம்மளைங்க எல்லோரும் தாடி வளர்க்கணும்னு சொல்லி, யூனுஸ் க்கு ஆப்பு வையுங்க.


Padmasridharan
ஜூலை 26, 2025 05:28

இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஆண்கள் முதலில் செய்வதே பெண்களை கட்டுப்படுத்துவதுதான் சாமி. அவர்கள் மட்டும் என்னவேனாலும் செய்வார்கள். அல்லாஹ் பெயரைச் சொல்லிக்கொண்டு ஆணாதிக்கம் உள்ள மதம். எல்லா உயிர்களையும் ஒரே கடவுள் படைத்தாரென்று நம்புபவர்கள் மற்ற மக்களை கொல்வதில் நிறைய ஆர்வம் காட்டுபவர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை