உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிரியா ராணுவ தலைமையகம் மீது குண்டுவீச்சு; தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்

சிரியா ராணுவ தலைமையகம் மீது குண்டுவீச்சு; தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்

டமாஸ்கஸ்: துரூஸ் இன மக்களுக்கு ஆதரவாக சிரியாவில் தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், அந்நாட்டின் ராணுவ தலைமையகம் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாஷர் அல் ஆசாத்தின் ஆட்சி முஸ்லிம் கிளர்ச்சியாளர்களால் கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, அல் ஆசாத் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றார். அதன்பிறகு, ஹயத் தஹிர் அல் ஷியாம் சிரியாவின் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை விரும்பாத முன்னாள் அதிபர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்கள் சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dms21hm2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனிடேயே, சிரியா அரசு படைகள், அரசு ஆதரவு குழுக்கள் மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு பயங்கரவாதிகள், துரூஸ் இன மக்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்வேய்தா மாகாணத்தில் தங்களின் செல்வாக்கை விரிவுபடுத்த முயன்று வருகின்றனர். அதேவேளையில், துரூஸ் இன மக்கள் இஸ்ரேல் நாட்டு அரசுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளனர். எனவே, துரூஸ் இன மக்களை பாதுகாக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது. துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக, ஸ்வேய்தா மாகாணத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல், குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளது. சிரியாவின் தகவல் அமைச்சர் ஹம்சா அல்-முஸ்தபா கூறுகையில், 'ஸ்வேய்தா மாகாணத்தில் நடைபெற்ற இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் ஒரு வெற்றி அல்ல. மாறாக இஸ்ரேல் அரசாங்கம் உள்நாட்டு பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. ஸ்வேய்தா மாகாண மக்கள் இந்த நாட்டின் ஒரு தூண்களாவர். அவர்களும் எங்களின் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான்,' என்று கூறினார்.இஸ்ரேல் சிரியாவில் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 4 நாட்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பேசும் தமிழன்
ஜூலை 17, 2025 09:05

இஸ்ரேல் நாட்டை உண்மையிலேயே பாராட்ட வேண்டும்.... அது உலக நாடுகள் அனைத்திற்கும் தீவிரவாதிகளின் தாயகத்தை அழிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. அப்படியே பாகிஸ்தான் பக்கமும் பார்வையை திருப்பினால் உலகில் பாதி தீவிரவாதம் ஒழிந்து விடும். அதற்க்காக அனைத்து உலக நாடுகளும் இஸ்ரேல் நாட்டுக்கு உதவி செய்ய வேண்டும்.


Kasimani Baskaran
ஜூலை 17, 2025 03:58

பெரும்பான்மையானவர்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறிவிட்டார்கள். அதிக இடம் தேவைப்படும் இஸ்ரேல் அதை எடுத்துக்கொள்ளலாம். அப்படி வேண்டாம் என்றால் பாலஸ்தீனர்களுக்கு வீடுகள் / நகரங்களை அமைத்து குடியேற்றலாம்.


தாமரை மலர்கிறது
ஜூலை 16, 2025 22:55

மைனாரிட்டி ட்ருஸ் மக்களை இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாக்க இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது பாராட்டத்தக்கது.


Indian
ஜூலை 16, 2025 22:50

சூப்பர்


mindum vasantham
ஜூலை 16, 2025 22:42

இஸ்ரேல் தன்னை நாட்டாமையாக நினைத்து வருகிறது


புதிய வீடியோ