உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  ஈரானுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சீனா

 ஈரானுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சீனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தும்படி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை சீனா வலியுறுத்தியுள்ளது.அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உடன் தொலைபேசியில் பேசினார். அராக்சி ஈரானின் சமீபத்திய நிலவரங்களை அவருக்கு விளக்கினார். இதை் தொடர்ந்து, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறியதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாட்டை காப்பதற்கு சீனா ஆதரவு அளிக்கும். அமெரிக்காவும் இஸ்ரேலும் உடனடியாக ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். பதற்றத்தை அதிகரிப்பதைத் தவிர்த்து, மோதல் மேற்கு ஆசியா முழுதும் பரவாமல் தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தமிழன் மணி
மார் 04, 2026 10:29

நாம் எல்லாம் நினைப்பது போல இந்த டிரம்ப் ஒன்றும் நல்லவனில்லை அமெரிக்க சட்டப்படி அதிபர் ஒரு நாட்டின் மீது போர் என அறிவித்தால் அந்த போரை முன்னெடுக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை போர் ஆரம்பித்த 2 மாதத்திற்குள் பெற வேண்டும் அப்படி அனுமதி கிடைக்கவில்லையென்றால் அமெரிக்க அதிபர் உடனடியாக போரை நிறுத்தியாக வேண்டும் அமெரிக்க ராணுவ தலைமை தளபதி பொறுப்பும் அதிபருடையதாகவே இதுவரை உள்ளது அமெரிக்க அதிபர் கடைசியாக போர் என அறிவித்தது இரண்டாம் உலக போரின் போது மட்டுமே அதன்பின் எந்தவொரு அமெரிக்க அதிபரும் பிற நாடுகளுடன் போர் புரிந்தாலும் அதற்கு ராணுவ நடவடிக்கை என்ற பெயர்தான் உபயோகிப்பானுகள் இதற்கு அந்நாட்டின் நாடாளுமன்ற அனுமதி தேவையில்லை இவனோ ராணுவ தாக்குதல் நடவடிக்கை என்ற பெயரில் ஈரான் மீது இஸ்ரேல் அதிபருடன் சேர்ந்து குண்டு வீசி அந்த நாட்டை அழித்துக் கொண்டிருக்கிறான் இந்த டிரம்ப்புக்கு உண்மையில் உலகம் அமைதியாக இருக்க வேண்டும் என்கிற எந்தவொரு வெங்காய பாசமும் கிடையாது இவனுக்கு இரண்டே இரண்டு குறிக்கோள்தான் ஒன்று எண்ணெய் வளம் கொண்ட நாடுகளை தன்வசப்படுத்தி அந்த எண்ணெய் வளத்தை கைப்பற்றி உலகை தன் கையில் வைத்துக் கொள்ள வேண்டும் இன்னொன்று எந்த நாடெல்லாம் அமெரிக்க டாலரை எதிர்த்து பிற நாடுகளுடன் வணிகம் செய்கிறதோ, அந்த நாடுகளையெல்லாம் தன் அதிகாரத்தால் பயமுறுத்தி அதை பணிய வைக்க வேண்டும் டாலர் மட்டுமே உலகை ஆள வேண்டும் நன்றாக யோசித்துப் பாருங்கள் நண்பர்களே இவன் அண்டை நாடான வெனிசுலாவை போதை பொருள் கடத்தல் அதிகம் நடக்கிறது, அதை அந்த நாட்டின் அதிபர் ஊக்குவிப்பதாக கூறி வெணிசுலா அதிபரை குடும்பத்தோடு அள்ளிக் கொண்டு வந்தான் போதை பொருளுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் இன்றுவரை அவன் எடுக்கவில்லை உண்மையில் வெணிசுலா அதிபர் அமெரிக்க டாலருக்கு எதிராக வணிகம் செய்ய முயன்றார் அந்த நாட்டில் ஏகப்பட்ட எண்ணெய் வளத்தை கைப்பற்றி கொள்ளையடிக்கவே அதிபரை அள்ளிக் கொண்டு வந்தான் இப்போது ஈரானும் அதே அமெரிக்க டாலரை எதிர்த்து பிற நாடுகளுடன் வணிகம் செய்து வருகிறது இதற்கு குள்ளன் சீனாவும் ஆதரவு மேலும் ஈரானும் மிகுந்த எண்ணெய் வளம் கொண்ட நாடு மேலும் குள்ளன் சீனாதான் ஈரானிடம் அதிகமாக எண்ணெய் வர்த்தகம் செய்யும் நாடு இதையெல்லாம் வைத்தே திட்டமிட்டு ஈரான் எண்ணெய் வளத்தை கைப்பற்றி சீனாவுக்கும் செக் வைத்து சீனா எண்ணெய் வாங்குவதை தடுத்து உலகத்தை தன் அதிகார பலத்தின் கீழ் கொண்டு வர நினைக்கிறான் இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் எவனெல்லாம் அமெரிக்க டாலரில் வணிகம் செய்யாமல் எதிர்க்கிறானோ மற்றும் அவனது நாடு எண்ணெய் வளம் கொண்ட நாடாக இருந்தால் ஏதாவது ஒரு காரணத்தை கூறி அந்த நாட்டின் மீது போர் தொடுத்து அதை நாசமாக்கி அழிக்க வேண்டும் இதுதான் இவனுடைய ஈன குறிக்கோள் கேடுகெட்ட ஈரான் செய்வதும் தவறு அதற்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்காரன் செய்வதும் தவறுதான் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே அந்நாட்டின் மீது போர் புரிவது மனித தன்மையற்ற செயல் ஈரானும் ரகசியமாக அனு ஆயுதம் தயாரித்தால் அதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டும் ஆக மொத்தம் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் போர் எதற்கும் தீர்வாகாது இந்த போர் வெகு நாட்கள் நடக்காது ஈரான் தந்திரமாக ஜலசந்தி பாதையை ஆக்கிரமிப்பு செய்து ஆசிய நாடுகளை கச்சா எண்ணெய்க்கு அலைய விட்டுக் கொண்டிருக்கிறான் அப்படி ஒரு வேலை இந்த போர் நீடித்தால் ஆசிய நாடுகள் கச்சா எண்ணெய்க்கு ரஷ்யாவை நாடும் இந்த போரால் பயனடைய போவது ரஷ்யாதான்


Kasimani Baskaran
மார் 04, 2026 04:32

சீன ஆயுத சந்தைக்கு விழுந்த ஆப்பு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.


Keshavan.J
மார் 04, 2026 02:27

நீ முதல்லே நல்ல ஆயுதத்தை கொடு அப்புறம் ஆதரவு தரலம்


தாமரை மலர்கிறது
மார் 04, 2026 00:39

இந்த போரால் பயனடையபோவது சீனா தான். துபாய், பஹ்ரைன், அபுதாபி, சவுதி, ஈராக் இல் உள்ள அமெரிக்கா ராணுவ முகாம்களை பாதுகாப்பு கருதி அந்தந்த நாடுகள் மூட சொல்லும். இந்த போரை உக்ரைன் போர் மாதிரி முடிந்தவரை இன்னும் ரெண்டு வருடத்திற்கு நீடிக்க சீனா முயலும். அதற்காக ஈரானுக்கு உதவி பண்ணும். பிரதமர் மோடி இந்த போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும். இல்லையெனில் இந்தியாவின் காஸ் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டு நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.


தமிழன் மணி
மார் 04, 2026 03:17

என்ன ஒரு கேனத்தனமான பதிவு சீனா பயனடையவா கோமாளி டிரம்ப் போரின் முதல் நாளில் மட்டும் 7000 கோடி செலவு செய்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறான்? தம்பி உனக்கு உலக நடப்பு தெரியல அப்படி கொஞ்சம் ஓரமா போயி விளையாடு


aaruthirumalai
மார் 03, 2026 23:08

ஈயம் பூசுன மாரி இருக்கனும் இதெல்லாம் தொழில் நேக்குமா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை