உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிணைக்கைதிகளின் உடல்களை கண்டுபிடிப்பதில் சிரமம்; இஸ்ரேலிடம் அவகாசம் கேட்கும் ஹமாஸ்

பிணைக்கைதிகளின் உடல்களை கண்டுபிடிப்பதில் சிரமம்; இஸ்ரேலிடம் அவகாசம் கேட்கும் ஹமாஸ்

காசா: பிணைக்கைதிகளின் உடல்களை ஒப்படைப்பதற்கு அவகாசம் தேவைப்படுவதாக இஸ்ரேலிடம் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வந்த போர், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முயற்சியால் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. அமெரிக்கா முன்மொழிந்த 20 அம்ச திட்டங்களின் முதல் கட்டத்திற்கு மட்டுமே, இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளன.பிணைக்கைதிகளை பரஸ்பரமாக விடுவித்தனர். மொத்தம் 28 பிணைக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் படிப்படியாக ஒப்படைத்து வருகிறது. பிணைக்கைதிகளின் உடல்கள் அடங்கிய பெட்டிகளை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் இயக்கம் ஒப்படைத்து வருகிறது. அண்மையில், பிணைக்கைதியின் உடலுக்கு பதிலாக வேறு உடலை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல், தங்கள் நாட்டைச் சேர்ந்த பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் முறையாக ஒப்படைக்க வேண்டும் என்று ஹமாஸூக்கு எச்சரிக்கை விடுத்தது. அதேவேளையில், ஹமாஸ் ஒப்பந்தத்தை கடைபிடிக்கவில்லை எனில், இஸ்ரேல் காசாவில் தாக்குதலை தொடங்கலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு மேலும் இரு பிணைக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் ஒப்படைத்துள்ளது. மேலும், காசாவின் இடிபாடுகளில் சிக்கியுள்ள பிணைக்கைதிகளின் உடல்களை மீட்டுக் கொண்டு வர அவகாசமும், நவீன உபகரணங்களும் தேவை என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. தற்போது வரை மொத்தம் 28 உடல்களில் 9 பேரின் சடலங்கள் இஸ்ரேலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மத்தியஸ்தம் செய்த நாடுகளின் உதவியுடன் எஞ்சியவர்களின் உடல்களை தேடும் பணியில் ஹமாஸ் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

MP.K
அக் 16, 2025 15:43

போரில்லா நல்லுலகம் காண்போம் வாழ்க வையகம்


Perumal Pillai
அக் 16, 2025 11:32

The terrorists will never be trusted. Total eradication and complete annihilation are the only solutions that will sustain peace.


Keshavan.J
அக் 16, 2025 10:51

Dont ever trust them. They are buying time to Plan something serious. Dont allow them , go inside and take down each and every Hamas terrorist.


Pandi Muni
அக் 16, 2025 09:54

உலகத்தை விட்டு ஒழிக்கப்படவேண்டிய ஒரு இனம்


நிக்கோல்தாம்சன்
அக் 16, 2025 09:18

பெண்களை ஈவு இரக்கமின்றி கொடும் தண்டனைக்கு ஆளாக்கிய ஹமாஸ் அன்று முகம்மதியர்கள் இந்தியாவை தாக்கியபோது என்னென்ன செய்திருப்பார்கள் என்று கண்முன்னே நிறுத்துகிறார்கள், இதனால்தானோ என்னவோ பெண்கள் தீக்குளித்தனர்? ஆனால் அதற்க்கு சதி என்று பெயரிட்டு மறைத்தோம். போங்கடா நீங்களும் உங்க புரிதலும்


vee srikanth
அக் 16, 2025 09:37

காட்டுமிராண்டிகள் என்று கூட சொல்லலாம்


Senthoora
அக் 16, 2025 10:49

ஜெர்மனியில் அடித்து விரட்டப்பட்ட இசுரேலியர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பாலஸ்தீனர்கள். இன்று நன்றி இல்லாமல் பலஸ்தினர்களல இன்று இசுரேலியர்கள் அடித்து குழந்தைகள், பெண்களை கொண்டு வீசி கொல்லும்போது ஒண்ணுமேல் சொல்லலையே, மத வெறுப்பு உணர்வுடன் இன்று பாக்கிறிங்க சார்.


visu
அக் 16, 2025 11:52

நீங்கள் சொல்லும் தகவல் பொய். முதலில் பாலஸ்தீனர்கள் அடைக்கலம் கொடுக்கவில்லை அந்த பகுதிகள் பிரிட்டன் வசம் இருந்தவை அவர்கள் பிரித்து கொடுத்தார்கள் அது மட்டுமின்றி 3000 வருடங்களுக்கு முன்பு அவை யூத நாடக இருந்த பகுதி அதை அவர்கள் திரும்ப பெற்றார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை