வாசனை திரவிய சேமிப்பு கிடங்கில் தீ: 6 பேர் பலி
அங்காரா: துருக்கி கொஹலி மாகாணம் டிலோவசி நகரில் வாசனை திரவிய சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களுக்கு வாசனை திரவியம் சப்ளை செய்யப்படுகிறது. இக்கிடங்கில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பணி செய்து கொண்டிருந்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி அணைத்தனர். விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.