உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு; ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்; ஜி 7 மாநாட்டில் தீர்மானம்

இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு; ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்; ஜி 7 மாநாட்டில் தீர்மானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கன்னாஸ்கிஸ்: இஸ்ரேலுக்கு தன்னை தற்காத்துக் கொள்ளும் அனைத்து உரிமையும் உண்டு; பிரச்னைக்கு முக்கிய மூல காரணம் ஈரான் நாடு தான் என்று ஜி 7 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஈரானின் அணுசக்தி திட்டத்தை எதிர்த்து அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த 13ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை தொடர்ந்துள்ளது. இரு நாடுகள் இடையேயான தாக்குதல்களின் விளைவாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. டெஹ்ரானில் இருந்து அனைவரும் உடனடியாக வெளியேறுங்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான், இஸ்ரேல் நாடுகளின் மோதல் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளன.இந் நிலையில், இருநாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் வழங்கி உள்ளார் என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறி உள்ளார்.ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட அவர், பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது; இருநாடுகளும் சந்தித்து கருத்துகளை பரிமாறிக் கொள்ள ஒரு வாய்ப்பு உள்ளது. அமெரிக்க அதிபர், இரு நாடுகளிடமும் ஒரு திட்டத்தை முன் வைத்துள்ளார். அதன் மூலம் போர் நிறுத்தம் செய்து கொள்வதற்கான பரந்துபட்ட விவாதங்கள் தொடங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை இருநாடுகளும் பின்பற்றுமா என்று நாம் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஜி 7 தலைவர்கள் உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விபரம்: இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து உரிமையும் உண்டு. இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புக்கான எங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். அப்பாவி பொதுமக்கள் பாதுகாக்கப்படுவதும் மிகவும் முக்கியமானது. பயங்கரவாதம் மற்றும் பிராந்திய அமைதியின்மைக்கு முக்கிய மூல காரணமாக ஈரான் உள்ளது. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் தயாரிக்கக்கூடாது என்பதில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களால் முதலில் தயார் செய்யப்பட்ட தீர்மானத்தை, அதில் இருந்த சில வாசகங்களால் அதிபர் டிரம்ப் ஏற்க மறுத்தார். வாசகங்களை மாற்றிய நிலையில், இறுதித் தீர்மானத்தை டிரம்ப் ஏற்றுக்கொண்டார் என மாநாட்டு நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

BABU ANTONY THOMAS
ஜூன் 18, 2025 12:26

அமெரிக்கா இந்தியா பாக்கிஸ்தான் போரைத் தடுத்து நிறுத்தியதே ... பாக்கிஸ்தான் ஈரானுக்கு உதவி விடக் கூடாது என்பதற்காகத் தான் என்பது தெளிவாகிறது.


spr
ஜூன் 17, 2025 21:11

"இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து உரிமையும் உண்டு. இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புக்கான எங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். அப்பாவி பொதுமக்கள் பாதுகாக்கப்படுவதும் மிகவும் முக்கியமானது" .இது போலவே பயங்கரவாதம் மற்றும் பிராந்திய அமைதியின்மைக்கு முக்கிய மூல காரணமாக உள்ள பாகிஸ்தானையும் இப்படிக் கண்டித்து, இந்தியாவை ஆதரிப்பதாக அறிக்கை வெளியிடப்படுமா?


மீனவ நண்பன்
ஜூன் 18, 2025 06:45

இஸ்ரேல் மிகவும் குட்டி நாடு ..ஒரே நேரத்தில் பாலஸ்தீன் இரான் ரெண்டு நாட்டையும் வெளுத்து காட்டறான் நான் இலவசங்கள் வாங்கி பிழைக்க பிறந்தவர்களா? அஞ்சாநெஞ்சன் தளபதி போர் வாள் இப்படி பட்டப்பெயர் வைத்துக்கொண்டு மக்களை சுரண்டரங்களே நியாயமா


morlot
ஜூன் 17, 2025 20:22

This is a failure G7 summit. There is no Modi. White people always défend white jewish cou ntry.Pakistan is also possesing Abomb,but we never said or attacked pak for that purpose and also they threatened us with their A bomb.Israel wants to dominate middle east.They destroyed and killed innocent 57000persons they destroyed lebanon syria and they want to destroy Iran. Netanyou must be killed ́.Heis more dangerous person than Hitler.


மீனவ நண்பன்
ஜூன் 18, 2025 06:47

மார்க்கத்தின் அலறல் ..


கரன்
ஜூன் 17, 2025 16:41

ஆமாம். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மத்த நாடுகளுக்கு உரிமை இல்லை.


Kumar Kumzi
ஜூன் 17, 2025 14:24

மூர்க்கம் வெறிபிடித்து ஆடுவதற்கு காரணமே ஈரானின் இஸ்லாமிய மதம் கொள்கை தான் அழிப்பதில் தவறே இல்லை


Haja Kuthubdeen
ஜூன் 17, 2025 17:44

ஒன்னு தெரியுமா மூர்க்ஸ் எதிரியே...உலகில் வேக வேகமா வளர்ந்து வருவது மூர்க்ஸ் மதம்தானாம்...


Ahamed Fazal
ஜூன் 17, 2025 13:22

கோழைகள் கூட்டம் , சிங்கம் சிங்கிளா தான் வரும்


Kumar Kumzi
ஜூன் 17, 2025 14:15

பார்ர்ரா பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவுக்கு கோவம் வருது ஆமா ஒனக்கு இந்தியாவில் என்ன வேல


SUBBU,MADURAI
ஜூன் 17, 2025 12:35

Thousands of prisoners escape Tehran prison. Remember when prisoners escaped from a prison in Damascus just before the Assad regime in Syria fell? This is exactly whats happening in Iran now. This is what a falling regime looks like


RRY
ஜூன் 17, 2025 12:34

Good


lana
ஜூன் 17, 2025 12:28

சந்தடி சாக்கில் ஈரோடு ஈர வெங்காயம் பற்றி சேர்த்து விட வேண்டாம். நமது நாட்டின் உயரிய தத்துவம் அறிவியல் கருத்துக்கள் நமது மொழி அனைத்தையும் இழிவு படுத்தி இருக்கிறார் ஈரோடு வெங்காயம். உங்களுக்கு படித்து புரிந்து கொள்ள முடியவில்லை அல்லது வெள்ளை காரனுக்கு சாமரம் வீச தமிழ் உட்பட இந்திய மொழி களை இழிவு படுத்தியது தான் இவர்கள் சாதனை


Subramanian N
ஜூன் 17, 2025 12:21

முதலில் ஈரான் தான் இஸ்ரேலை அணுகுண்டினால் தாக்குவேன் என்று மிரட்டியது , செய்திகளை கவனத்துடன் படித்து தெரிந்து கொள்ளவும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை