வாசகர்கள் கருத்துகள் ( 11 )
படுக்க பாய் போட்டால் அப்புறம் வேறொன்று கேட்பார் அந்த டிரம்ப். அதான்பா போத்திக்க போர்வை கேட்பார் என்று கூறவந்தேன். அதுக்குள்ள உங்கள் கற்பனையை வேறு பக்கம் திருப்பாதீங்க.
இந்தியாவின் மீதான அதிக வரிவிதிப்பினால் சீனாவும் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளது. இதுதான் சரியான தருணம் இந்தியா-சீன நலிவடைந்துள்ள உறவு மீண்டு எழ. ஒருபக்கம் சீனா ஆதரவு வார்த்தைகள். மறுபக்கம் ரஷ்யா அதிபர் புடின் வருகை என்கிற செய்தி. டிரம்புக்கு இவை மீண்டும் கோபத்தை அதிகரிக்கும். அடுத்து என்ன செய்வாரோ அந்த டிரம்ப்?
ஊஹூம். டிராகனை அப்படி எளிதில் நம்ப லாயக்கில்லை. சில நாட்களிலேயே அருணாச்சல் சீனாவுடையது அப்படீன்னு ஆரம்பிப்பான். தற்போது அவனுக்கும் அடி விழுந்ததால் அடக்கி வாசிக்கிறான். எச்சரிக்கை தான் இவனிடத்தில் எப்போதும் வேண்டும். நம்பத்தகாதவன். அமெரிக்கா வெளிப்படையாய் செய்வதை சத்தம் இல்லாமல் செய்பவன் இவன்.
எல்லா நாட்டிலும் பழமொழி ஒரே மாதிரி தான் இருக்கும்னு நினைக்கிறேன்
சபாஷ் சீனாகாரன் கருத்து சூப்பர் ...நம்ம அதிபர் பெட்ரோல் பம்ப்க்கு தெரியுமா
இந்திய, சீனா, ரஷ்யா, வடகொரியா சேர்ந்தால் ட்ரம்பின் கொட்டம் தானாக அடங்கிவிடும்.
சீனாக்காரனுக்கு பாதிப்பு ஏற்படும்,அதற்கு பேசி உள்ளான்...
உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஆசைப்படும் அமெரிக்கா அதிபர் எல்லாவிதமான மனித கொலைக்குற்றங்களுக்கும் ஒரேமாதிரியான நிலைப்பாட்டை கொண்டிருக்கவேண்டும் .தீவிரவாதத்த்தையே தங்களுடைய நாட்டின் வெளியுறவுக்கொள்கையாக வைத்துள்ள பாகிஸ்தானின் படை தளபதிக்கு வெள்ளை மாளிகையில் விருந்தளிப்பதேன்? விருந்தளிக்கும்போது அமெரிக்காவின் தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தீவிரவாதிகளை அமெரிக்காவிடம் ஒப்படைக்க கோராதது ஏன்? மறுவிருந்தளிக்கும்போதாவது கேட்பீர்களா?
மற்ற நாடுகளை அடக்குவதற்கு வரிகளை ஆயுதமாகப் பயன்படுத்துவது ஐ.நா. சாசனத்தை மீறுவதாகும்.உலக வர்த்தக அமைப்பின் விதிகளை பலவீனப்படுத்துகிறது. டிரம்பின் இந்த அடாவடி செயலை பாதிக்கப்பட்ட உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். இதை விட்டுவிட்டால் பிறகு ஒவ்வொவொரு நாட்டையும் தனித்தனியாக பிரித்து தனது அடிமையாக்கி ஆள தொடங்கிவிடுவார் ஜாக்கிரதை விழித்தெழுங்கள்...
//இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்// இதுநாள் வரை இது தமிழ் பழமொழி என்றல்லவா நினைத்திருந்தேன், உலக பழமொழியா அல்லது தமிழில் இருந்து உலகம் முழுவதும் பரவியதா?
சீன தூதர் என்ன சொன்னாருன்னு நமக்கு தெரியாதல்லவா?