உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் திரும்பி வந்தனர்

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் திரும்பி வந்தனர்

டெக்சாஸ் : அமெரிக்காவில், சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களில், 205 பேரை ராணுவ விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தார், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப். டெக்சாசின் சான் அன்டோனியோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், பஞ்சாபின் அமிர்தசரஸ் வந்தடைய உள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற உடன், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றினார். மெக்சிகோ எல்லையில் அவசரநிலையை அறிவித்ததுடன், நாடு கடத்தும் நடவடிக்கையையும் முடுக்கிவிட்டார்.

விஸ்வரூபம்

அமெரிக்காவில், 18,000 இந்தியர்கள் சட்ட விரோதமாக குடியேறி இருப்பது தெரியவந்தது. சட்ட விரோதமாக குடியேறியவர்களை இந்தியா திரும்பப் பெறும் என, பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்து இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதை அறிந்ததும், நம் வெளியுறவுத்துறையும் தீவிரமாக களத்தில் இறங்கியது. 'அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் இந்தியர்கள் இருந்தாலும், விசா காலம் முடிந்தோ, முறையான ஆவணங்கள் இன்றியோ தங்கியிருந்தால் அவர்களை திரும்பப் பெறுவோம். 'அவர்களை திரும்ப அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்' என்று, அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

துவக்கம்

இதற்கிடையே, மத்திய அமெரிக்க நாடுகளான கவுதமாலா, ஹோண்டுராஸ், தென் அமெரிக்க நாடான பெருவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.இதை தொடர்ந்து, இந்தியர்களை திருப்பி அனுப்பும் பணியை அமெரிக்க நேற்று துவங்கியது. டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியோ விமான நிலையத்தில் இருந்து, அமெரிக்க விமானப் படையின் சி - 17 விமானத்தில், முதற்கட்டமாக, 205 இந்தியர்களை அனுப்பினர்.அவர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட அந்த ராணுவ விமானத்தில், ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. அது இரவில் பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலைத்தை வந்தடையும் என அதிகாரிகள் கூறினர்.சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தும் பணி தொடரும் என அமெரிக்க அதிகாரிகள் கூறினர். அதிபர் டிரம்பை சந்திக்க பிரதமர் மோடி அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், இந்தியர்களை நாடு கடத்தும் நடவடிக்கை ஊடகங்களில் பேசு பொருளாகி உள்ளது.

எத்தனை பேர் திரும்புவர்?

அமெரிக்காவில் 55 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அதில் 8 முதல் 12 லட்சம் பேர் அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்படாதவர்கள். சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என்று டிரம்ப் சொல்வது இவர்களைத்தான்.ஆண்டுக்கு 30 லட்சம் பேரை எல்லையில் அமெரிக்க போலீஸ் கைது செய்கிறது. அதில் ஒரு லட்சம் பேர் இந்தியர்கள். சிறைக்கு சென்றாலும், சட்ட போராட்டம் நடத்தி குடியுரிமை பெற வழிகள் உண்டு. நீண்ட விசாரணை முடிந்து, வழக்கு தள்ளுபடி ஆகும்போது தான், நாடு கடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்படும். 18,000 இந்தியர்கள் அந்த உத்தரவை வாங்கி கையில் வைத்திருக்கின்றனர். சட்ட அங்கீகாரம் பெறாத லட்சக்கணக்கான மற்ற இந்தியர்களின் நிலை என்ன ஆகும் என்று உடனடியாக தெரியவில்லை. இப்போதே ஏராளமான இந்தியர்கள் போலீசுக்கு பயந்து வேலையை விட்டு நின்று விட்டனர்; அட்ரஸ் மாற்றி தங்கியுள்ளனர். சென்ற ஆண்டில் மட்டும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பிய பணம், 111 பில்லியன் டாலர். ரூபாயில் கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி. அதில், மேலே சொன்ன 'சட்ட விரோத' இந்தியர்கள் பங்கும் கணிசமானது. வங்கதேசத்தவரை திருப்பி அனுப்புவதில் மோடி அரசு காட்டும் அதே தீவிரத்தை, மெக்சிகோ, கனடா, இந்தியா பிரஜைகளை திருப்பி அனுப்புவதில் டிரம்ப் அரசு காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த கெடுபிடி நடவடிக்கை சரியா தவறா என்பதை காட்டிலும், இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை இரு அரசுகளும் உணரவில்லை என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

பல்லவி
பிப் 06, 2025 13:06

கல்வி நிலையங்களில் கல்லாதவர்களை ஆட்சி பீடத்தில் நியமனம் செய்யக் கூடாது


sankaranarayanan
பிப் 05, 2025 21:20

அமெரிக்காவில், சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களில், 205 பேரை ராணுவ விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தார், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப். என்ற உங்களது செய்தியே தவறானது திருத்திக்கொள்வேண்டும். ராணுவ விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தேவர்களின் எண்ணிக்கை 104 என்றுதான் செய்தி இப்போது வந்துள்ளது ,


Sivaprakasam Chinnayan
பிப் 05, 2025 21:02

கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி, ஆட்சிக்கு வந்ததும் 60 ரூபாயில் இருந்து 35 ரூபாய்க்கு கொண்டு வருவோம் என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் பேசி வந்ததும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி மோடி முதன் முதலாக பிரதமர் பதவியில் அமர்ந்தார். அப்போது, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 60.39 என இருந்தது. இப்போது, மோடியின் ஆட்சிக் காலத்தில் கிட்டத்தட்ட 27 ரூபாய் டாலருக்கு எதிராக சரிவை சந்தித்துள்ளது. கனடா டாலருக்கு


PalaniKuppuswamy
பிப் 05, 2025 21:02

இந்திய மானத்தை எடுத்ததற்ககாக தேச துரோக வழக்கு போட்டு 6 மாதம் அரசு சிறையில் வைக்க வேண்டும். இந்த வெளி தாண்டும் வில்லன்களை


V வைகுண்டேஸ்வரன்
பிப் 05, 2025 15:27

திரும்பி வரவில்லை. இந்த திருட்டுப் பசங்களை அமெரிக்கா துரத்தி அடித்து, தூக்கிக்கிட்டு வந்து இந்தியாவுக்குள் இறக்கி விட்டது. இந்திய மானம் பறக்கிறது.


ஆரூர் ரங்
பிப் 05, 2025 17:05

லட்சம் தமிழர்களை இலங்கை அகதிகளாக திருப்பி அனுப்பியதை ஏற்றுக் கொண்டதும் பர்மா தமிழர்களை விரட்டியடித்ததும் உங்களபிமான காங் ஆட்சியில்தான்.


M S RAGHUNATHAN
பிப் 05, 2025 18:55

உங்கள் வீட்டில் திருட வந்தவனை நீங்கள் பிடித்து கௌரவமாக நடத்தி அவன் வீட்டில் கொண்டு போய் விடுவீர்களா அல்லது தர்ம அடி கொடுத்து காவல் துறையிடம் ஒப்படைப்பீர்களா


Raman
பிப் 05, 2025 19:16

you are commenting on US India issues ..surprising, better restrict to Manali..


guna
பிப் 05, 2025 15:23

வைகுண்டம்....முதலில் கூடிய கூட்டத்திடம் நீ மன்னிப்பு கேள்...திருப்பரங்குன்றம்நேற்று என்ன புருடா விட்டாய்


V வைகுண்டேஸ்வரன்
பிப் 05, 2025 17:04

யாரு இது? புது fanclub மெம்பெர்? டிரம்ப் அடிச்சு தூரத்துவதற்கும் திருப்பரங்குன்றத்துக்கும் என்ன சம்பந்தம்??


Thamizhan
பிப் 05, 2025 15:15

வீடானாலும், நாடானாலும்...விதி ஒன்னுதான். பசியோடு வேண்டுமானாலும் தூங்கிவிடலாம், ஆனால் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தூக்கம்கூட வராது. எந்த நாடானாலும் இந்த நிலைமை ஒன்றுதான். டிரம்ப் செய்வது உத்தமம், எனில் நம் விஸ்வகுருதான் அதுக்கும் வழிகாட்டி என்பதை உணரவேண்டும். illegal immigrants எவனாயிருந்தாலும் தண்டனை ஒன்றே வழி. அவனுங்கள அப்டியே கொண்டுபோய் கடல்ல கொட்டிடுங்க ஆபீசர்


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 05, 2025 15:11

வங்கதேசத்தவரை திருப்பி அனுப்புவதில் மோடி அரசு காட்டும் அதே தீவிரத்தை ..... மோடி அரசு இதில் தீவிரம் காட்டுவது போல தெரியவில்லை ..... வங்கதேசத்தவர்கள் நம்மிடம் உள்ள கணக்கை விட தினம் ஊடுருவியிருக்கிறார்கள் ..... ஷேக் ஹசீனாவுடனான நட்பின் காரணமாக மோடி அவர்களை வெளியேற்றுவதில் சுணக்கம் காட்டினார் .....


Nirmala Desikan
பிப் 05, 2025 14:42

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்? ஒழுங்கா பாடு படு நம் நாட்டில் உயர்த்து பாரதத்தை உலகளவில்.


Nirmala Desikan
பிப் 05, 2025 14:38

அங்கு சென்ற இந்தியர்கள் எல்லோரையுமே திருப்பி அனுப்ப வேண்டும். அப்போதுதான் நம் நாடும் உறுப்புடும். நம் நாட்டு மக்களும் நிம்மதியாக இருப்பார்கள். இவர்கள் அங்கு போனதினால் வீடு வாங்குவதும் சரி வாடகைக்கு செல்வது எல்லாமே விலை ஏறிவிட்டது. எவ்வளவு வேண்டுமானாலும் கொடுத்து வாங்குபவர்கள் அமெரிக்க டாலரில் பேசுகிறது. ஆனால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்ன செய்ய முடியும்? நடுத்தர குடும்பங்கள் எப்படி குடும்பம் நடத்துவார்கள்? இப்போதெல்லாம் ஒரு குடியிருப்பு மாடி கட்டினால் கூட அசால்டாக சொல்கிறார்கள் ஒரு கோடி ரெண்டு கோடி. அது எதனால இந்த மாதிரி அமெரிக்காவுக்கு போயி அந்த பணம் இங்க வரும்போது அவங்க எவ்வளவு வேண்டுமானாலும் கொடுப்பாங்க என்கிற இதுல இவங்க ஏத்துறாங்க. அப்ப சின்ன நடுத்தர குடும்பத்தில் இருக்கிறவங்க வாங்குறதுக்கு முடியுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை