உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மியான்மர் எல்லையில் மோதல் உச்சகட்டம்; எல்லை மாநிலங்களில் தீவிர கண்காணிப்பு

மியான்மர் எல்லையில் மோதல் உச்சகட்டம்; எல்லை மாநிலங்களில் தீவிர கண்காணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசம்- மியான்மர் அரசுக்கு எதிராக போர் நடத்தி வரும் கிளர்ச்சிப் படையினர், வங்கதேச எல்லைப் பகுதி முழுவதையும் கைப்பற்றி விட்டனர். இதனால் வடகிழக்கு மாநிலங்களில் கண்காணிப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.நம் அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெவ்வேறு கிளர்ச்சி படையினர் போர் நடத்தி வருகின்றனர். இந்தியா, வங்கதேச எல்லையில் அமைந்துள்ள ராக்கைன் மாநிலத்தில் கணிசமான நிலப்பரப்பை, அரக்கன் ராணுவம் எனப்படும் கிளர்ச்சிப்படை கைப்பற்றி உள்ளது. மியான்மர் மற்றும் வங்கதேசம் இடையிலான எல்லைப் பகுதி முழுவதும் அரக்கன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.இரு தரப்புக்கும் போர் உச்சத்தை எட்டி உள்ளதால், இந்திய எல்லையை நோக்கி கிளர்ச்சிப்படையினரும், போரால் பாதிக்கப்பட்ட மக்களும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு எல்லை மாநிலங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளும்படி மத்திய அரசு உத்தரவிட்டது. வடகிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகியவை மியான்மருடன் 1,643 கி.மீ., துாரம் எல்லையை பகிர்கின்றன.இதன் வழியாக, லட்சக்கணக்கான அகதிகள் நம் எல்லைப் பரப்பிற்குள் நுழைவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதை தடுக்கும் நோக்கில், மியான்மர் எல்லையில் தடுப்பு வேலி அமைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்தப் பணிகளும் வேகப்படுத்தப்பட்டுள்ளன.மியான்மர் எல்லை நிலவரம் குறித்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: மியான்மர் உள்நாட்டு போர் காரணமாக இந்தியாவுக்குள் அகதிகள் ஊடுருவும் அபாயம் உள்ளது. நிலைமை குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். விழிப்புடன் இருக்கிறோம். மியான்மரில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க பேச்சுவார்த்தை மற்றும் ஆக்கபூர்வமான விவாதங்களில் ஈடுபட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.மியான்மரின் கிளர்ச்சிக்குழுக்கள் நிதி திரட்டுவதற்காக போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதுவும் இந்தியாவிற்கு மற்றொரு சவாலாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venugopal s
டிச 26, 2024 18:43

மத்திய பாஜக அரசு எப்போதும் எல்லைப் பாதுகாப்பில் கோட்டை விட்டு விட்டு பிறகு வாய்ச் சவடால் பேச்சு பேசுவதே வழக்கமாகி விட்டது!


பெரிய ராசு
டிச 26, 2024 21:05

நீயும் உன் விடியா மூஞ்சி தலைவனும் எல்லைக்கு போயி தடுத்து நிறுத்துங்க


Sivagiri
டிச 26, 2024 13:38

அந்த கவர்மெண்டுகளிடம் பேசுவது நோ-யூஸ் எல்லையில் முழுவதும் ஸ்ட்ராங் வேலி போட்டு, அதோடு, பாகிஸ்தான் - சைனா பார்டர்கள் போல, இனி பங்களாதேஷ் - பர்மா பார்டர்களும் தனித்தனியாக கண்காணிக்கப்படவேண்டியதே... சுற்றிலும் நமக்கு எதிரிகள்தான் - சீனா மட்டும், நேரடி எதிரி - சைனாவை நேரடியாக சமாளிக்கலாம்/ஆனால் பாகிஸ்தான் - பங்களாதேஷ் - பர்மா - நேபாள் - எல்லாமே மேற்கத்திய அடிமைகள் - துரோகிகள் - எப்போதும் கழுத்தை அறுக்க தயங்காத துரோகிகள் -வடகிழக்கு , மற்றும் மே-வங்கம் ஆகிய பார்டர் மாநிலங்கள் அனைத்தையும் டில்லியை போன்று யூனியன் பிரதேசம் ஆக்கி, போலீஸ் - ராணுவம் சேர்ந்த கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டியது அவசியம் - -


Kanns
டிச 26, 2024 12:15

Shoot All Foreigners Infiltrating Into India. Capture their Land for Accommodating them in their Own Land Under Indian Administration


Kumar Kumzi
டிச 26, 2024 09:53

வந்தால் சுட்டுத்தள்ளுங்கள்


MUTHU
டிச 26, 2024 18:55

அப்படி செய்தால் ஐக்கிய நாடுகள் சபை தலைவர் அந்தோணி குட்டராசு இந்தியாவினை கேள்வி கேட்பார்.


MUTHU
டிச 26, 2024 18:56

அடித்து விரட்டுபவனை கேள்வி கேட்க மாட்டார்கள்.


Venkatesan Srinivasan
ஜன 03, 2025 00:08

Each bullet fired at the borders can solve a million dollar headache. So Indian defence should use liberally bullets to control infiltration of criminals across the borders. We cant afford to fence the 1700 km borders. No international laws and convention can address our problems. Freely use bullets which is more economical to tackle cross border issues. Jai Hind Jai Bharat Satyameva Jayate.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை