உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அமெரிக்காவில் இந்தியர் கைது

ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அமெரிக்காவில் இந்தியர் கைது

வாஷிங்டன்: பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாக அவர்களின் கொள்கைகளை பரப்பியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்திய மாணவரை, அமெரிக்க குடியேற்றத்துறை கைது செய்துள்ளது.அமெரிக்காவின், ஜார்ஜ்டவுன் பல்கலையில், வெளிநாட்டு சேவைப் பள்ளியின் ஒரு பகுதியாக இயங்கும் அல்வலீத் பின் தலால் முஸ்லிம் - கிறிஸ்துவர்கள் புரிந்துணர்வு மையத்தில் முதுநிலை ஆராய்ச்சி மாணவராக இருப்பவர் பதர் கான் சுரி.இவர் மாணவராக பயின்று வந்ததுடன் அத்துறையில் பாடமும் நடத்தி வருகிறார்.இவர், டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலையில், 'அமைதி மற்றும் மோதல்' என்ற தலைப்பில், முனைவர் பட்டத்துக்கான ஆய்வுப்படிப்பை முடித்துள்ளார்.இவரை அமெரிக்க குடியேற்றத் துறையினர் சமீபத்தில் கைது செய்தனர்.இது குறித்து அவரது வழக்கறிஞர் ஹஸன் அகமது கூறியதாவது:அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி, பதர் கான் சுரியை அமெரிக்க குடியேற்றத் துறை கைது செய்துள்ளது. தற்போது அவர் லுாசியானாவின் அலெக்ஸாண்ட்ராவில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். குடியுரிமை நீதிமன்ற விசாரணை தேதிக்காக காத்திருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை உதவி செயலர் டிரிசியா மெக்லாலின் கூறுகையில், “மாணவர் பதர் கான் சுரி, சமூக வலைதளம் வாயிலாக ஹமாஸ் ஆதரவு மற்றும் யூத எதிர்ப்பு கருத்துகளை பகிர்ந்துள்ளார். ஹமாஸ் அமைப்புக்கு ஆலோசனை வழங்கும் ஒரு மூத்த பயங்கரவாதியுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது,” என்றார்.அமெரிக்க குடியுரிமை பெற்ற பாலஸ்தீன பெண் மாப்ஹேஸ் சலே என்பவரை பதர் கான் சுரி மணந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

essemm
மார் 21, 2025 06:19

போடுங்கள் இவனையும் தூக்கில். இவனை போன்றவர்களை வெளியில் விட்டால். நாடு சின்னபின்னமாகிவிடும்.


சமீபத்திய செய்தி