உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எதிரிகளை தோற்கடிக்கும் வரை தாக்குதல் தொடரும்: சொல்கிறது ஈரான்

எதிரிகளை தோற்கடிக்கும் வரை தாக்குதல் தொடரும்: சொல்கிறது ஈரான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: எதிரிகளை முழுமையாக தோற்கடிக்கும் வரை தாக்குதல் தொடரும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திறன்களை அழிப்பதே நோக்கம் என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், தாக்குதலை தீவிரப்படுத்தும்படி தன் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவுடன் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த நிலையில் ஈரானின் புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி), தெரிவித்துள்ளதாவது:அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. எதிரிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்படும் வரை இந்தத் தாக்குதல் தொடரும்.பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-வது படைப்பிரிவு தலைமையகம், கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் தாக்கப்பட்டன.இவ்வாறு ஈரான் காவல் படை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
பிப் 28, 2026 20:50

எதிரிகள் மிகவும் வலுமையாக உள்ளார்கள். தோற்கடிக்கவே முடியாது. மக்களை காப்பாற்ற அமைதி பேச்சுக்கு ஈரான் செல்லவேண்டும். இல்லை என்றால், உலக வரைபடத்தில் ஈரான் இருக்காது.


Chinnappan Arulappan
பிப் 28, 2026 18:39

கனவில் கூட இவர்கள் எதிரிகள் என்று சொல்பவர்களில் ஒருவரைக் கூட தோற்கடிக்க முடியாது காரணம்: பொதுமக்கள் அரசுக்கு எதிராக உள்ளார்கள் ஆதரவாக இல்லை அவ்வளவு அட்டூழியம்


Sree
பிப் 28, 2026 18:25

உலக வெட்டியான் அமெரிக்கா மயானத்திற்கு புதிய நிரந்தர அமைதி உறுப்பினர்களை சேர்க்கையை மும்முரமாக சேர்க்கின்றது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை