உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுக்கு எதிராக சீனா, பாக்., உடன் கூட்டணியா: இல்லை என்று கூறி சமாளிக்கிறது வங்கதேசம்

இந்தியாவுக்கு எதிராக சீனா, பாக்., உடன் கூட்டணியா: இல்லை என்று கூறி சமாளிக்கிறது வங்கதேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: இந்தியாவுக்கு எதிரான நோக்கத்துடன் எந்த சந்திப்பையும் நடத்தவில்லை என்று சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து வங்கதேசம் விளக்கம் அளித்துள்ளது. சீனாவின் குன்மிங்கில் சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளின் பிரதிநிதிகள் கடந்த ஜூன் 19ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த 3 அண்டை நாடுகளுடனும் இந்தியாவுக்கு முரண்பாடு இருந்து வருகிறது. இந்த சூழலில், இந்த சந்திப்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை குறித்து வங்கதேச இடைக்கால அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் தவுஹித் ஹொசைன் கூறுகையில், ' சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை அரசியல் தொடர்பானது அல்ல. அதிகாரிகள் அளவிலானது மட்டுமே. இந்த சந்திப்பில் கூட்டணி வைப்பதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை. நாங்கள் யாருடனும் எந்த கூட்டணியும் அமைக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நோக்கத்தில் இந்த சந்திப்பு நடக்கவில்லை என்பதை உறுதியளிக்கிறேன்,' எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kannan
ஜூன் 27, 2025 21:44

ஓகே... நம்பிட்டோம்.... நெக்ஸ்ட்....


venugopal s
ஜூன் 27, 2025 16:06

இதுவும் தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி போல் ஒரே குழப்பமாக உள்ளதே!


subramanian
ஜூன் 27, 2025 15:10

இந்தியாவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியதாக ஒப்புக் கொண்டார் என்பது அர்த்தம்.


cpv s
ஜூன் 27, 2025 14:25

any islam country india must be very care full, do not give any free support for this country this all are braud people.


Iyer
ஜூன் 27, 2025 14:13

ஒரேவாரத்தில் நாம் சீனா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் என்ற மூதேவிகளை தாக்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும். OPERATION SINDOOR ன் 3 நாட்களிலேயே - நமது தாக்குதல், மற்றும் தடுப்பு சக்தி நிரூபணம் ஆகிவிட்டது. பொருளாதாரத்திலும் இந்த 3 நாடுகளும் முழுவதும் சிதைந்து விட்டன. பாரத் தேசத்தை தாக்குவது கனவு ஆகும். பாரத் இந்த 3 நாடுகளையும் ஒரே நேரத்தில் தாக்கினாலும் தங்களை காத்துக்கொள்ளும் சக்தி கூட இந்த மூன்று மூதேவிகளிடமும் இல்லை.


sivakumar seenichamy
ஜூன் 27, 2025 14:55

சீனா 5 மடங்கு நம்மை விட அனைத்திலும் பலசாலி


ராமகிருஷ்ணன்
ஜூன் 27, 2025 13:51

இந்த பூனையை கொஞ்சம் தட்டி வைக்கவும்


V RAMASWAMY
ஜூன் 27, 2025 12:56

இந்த நம்பமுடியாத ஜென்மங்களுடன் மிகவும் ஜாக்கிரதையாக விழிப்புடன் இருக்கவேண்டுமென நமது ஒப்பற்ற பிரதமருக்கு தெரியாதா என்ன.


Ramesh Sargam
ஜூன் 27, 2025 12:35

இந்தியாவுக்கு எதிரான நோக்கத்துடன் எந்த சந்திப்பையும் நடத்தவில்லை. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது இதுதான். இதைவிட அதிகமாக யாரும் பொய் பேசமுடியாது. ஆனால் ஒருவர் பேசுவார், அவர் நமது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை