உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுக்கு வரி விதித்து விரிசலுக்கு வழிவகுத்தேன்: பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார் டிரம்ப்

இந்தியாவுக்கு வரி விதித்து விரிசலுக்கு வழிவகுத்தேன்: பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''இந்தியாவுக்கு வரி விதிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மிகவும் பெரிய விஷயம். இப்படி வரி விதித்தது, இந்தியா உடனான உறவில் விரிசல் ஏற்படுத்தியுள்ளது,'' என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இது குறித்து நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: இந்தியா தான் ரஷ்யாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக இருந்தது. அவர்கள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது 50 சதவீத வரி விதித்தேன். அது எளிதான காரியம் அல்ல. மிகவும் பெரிய விஷயம். இந்தியா உடனான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. நான் அமெரிக்காவின் நலனுக்காக தான் நிறைய செய்துள்ளேன். இது நமது பிரச்னையை விட ஐரோப்பாவின் பிரச்னை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 7 உலகளாவிய மோதலை தீர்த்து வைத்துள்ளேன். சில தீர்க்க முடியாத மோதலை தீர்த்து வைத்து உள்ளேன். காங்கோ மற்றும் ருவாண்டா இடையே 31 ஆண்டுகளாக நடந்து வந்த போரை தீர்த்து வைத்துள்ளேன். இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

K V Ramadoss
செப் 14, 2025 17:28

மொத்தத்தில் ஒரு மடையன்..


Anand
செப் 13, 2025 13:30

மொடாக்குடிகாரர்கள் யாவரும் இப்படித்தான் புலம்புவார்கள்..


Barakat Ali
செப் 13, 2025 12:53

தலைமைதாங்கும் திறன் இல்லை ..... பிரச்னைகளை முதிர்ச்சியுடன் அணுகும் திறனுமில்லை .....


Rajarajan
செப் 13, 2025 11:13

நீங்க நல்லவரா, கெட்டவரா ??


K.Ravi Chandran Pudukkottai
செப் 13, 2025 10:33

இந்தியாவுடன் உறவுக்கு வழி வகுத்தேன் என்பதை பொது வழியில் பெருமையாக கூறலாம். இந்தியாவுடன் விரிசலுக்கு வழி வகுத்தேன் என்பதை எவ்வளவு பெருமையான சாதனையாக டிரம்பர் கூறுகிறார் பாருங்கள்! அய்யோ, அய்யோ!


KR india
செப் 13, 2025 10:07

எல்லாம் நன்மைக்கே என்று எடுத்து கொள்ள வேண்டும் அடுத்து நடைபெறும் BRICS மாநாட்டில், மின்னல் வேகத்தில், BRICS CURRENCY-யை அறிமுகப் படுத்தி விட வேண்டும். அதில், நம் நாடு கையெழுத்து போட்டு விட வேண்டும். பாரதப் பிரதமர் அவர்களே, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களே, BRICS சுர்ரெனசி-யில் இணைய, இதை விட அருமையான சந்தர்ப்பம் அமையாது. அமெரிக்கா விதித்த அநியாய வரியை சாக்காக வைத்து, BRICS CURRENCY-யில் உடனே மோடிஜி அவர்கள் கையெழுத்து போட்டு விட வேண்டும். அதன் பிறகு, இந்திய-அமெரிக்கா பேச்சுவார்த்தை, கீச்சு வார்த்தை எல்லாம் ஒப்புக்கு நடக்கட்டும். அமெரிக்கா-வியாபாரத்திற்கு டாலர் பயன்படுத்துவோம். BRICS+ நாடுகளிடையே, BRICS CURRENCY மட்டுமே, பயன்படுத்துவோம் இதுவே இந்தியாவின் கொள்கை என்று அறிவித்து விடுங்கள். அமெரிக்கா வரியை முற்றிலும் நீக்கி விட்டால், BRICS CURRENCY-ல் நம் நாடு சேர்வது தள்ளி போகும் அல்லது மிகுந்த தயக்கத்தை ஏற்படுத்தி விடும். இப்போது, நிலைமை அப்படி அல்ல. நீஅமெரிக்கா வரியை உயர்த்தியதால், எங்களுக்கு வேறு வழி இல்லை. எனவே, BRICS-ல் இணைந்தோம், என்று சொல்லி கொள்ளலாம். BRICS CURRENCY-ல் இணைய, இயற்கையே ஏற்படுத்தி கொடுத்துள்ள, GOLDEN OPPORTUNITY-ஐ தவற விட்டு விடாதீர்கள் மோடிஜி Please PROCEED to sign Brics Currency Agreement without any Delay


Ganesh
செப் 13, 2025 12:13

சார், முக்கியமான விஷயம் என்ன வென்றால் எல்லா நாடுகளும் அமெரிக்கா கடன் பத்திரங்கள் வைத்துள்ளனர்.. பிரிக்ஸ் currency கொண்டு வருவதற்கு முன் அதை தங்கமாக மாற்ற வேண்டும்.. மட்டும் அதற்கான மதிப்பீடு எல்லா நாடுகளும் ஏற்றுக்கொள்ளுவது போல் செய்ய வேண்டும்.... எனக்கு தெரிந்து புதிய ஆங்கில வருடம் நம் ஆசிய நாடுகளுக்கு நல் செய்தியும் யூரோப் மற்றும் அமெரிக்காவிற்கு தேயும் வருடமாகவும் அமையும்... மோடி எப்பவும் அதிர்ச்சி செய்தி தருவதில் நிபுணர்....


Sriniv
செப் 13, 2025 10:03

He imposed the tariffs just to please Pakistan. His family was involved in a crypto business with Pak. Govt. This was part of the deal. Pak knows it cannot defeat India militarily, so they used the American way to do an economic attack on India. But it totally backfired. Now Trump has been exposed as being part of the Pak. game to work against India. இதற்கு எவ்வளவு மில்லியன் டாலர்கள் கை மாறியதோ தெரியாது.


Sekar
செப் 13, 2025 09:59

பெரிய அண்ணன் போல் செயல்படும் அமெரிக்காவை முற்றிலும் புறம் தள்ள முடியாது. ஒருவேளை அதுபோல் நடந்தால் உலகம் வேறு மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்ளும்.


c.k.sundar rao
செப் 13, 2025 09:55

Trump has gone mad, all the policies introduced by him internally and externally is harming his country and its people.


Subburamu K
செப் 13, 2025 09:00

Number one terrorist country USA They have provrd open by the dinner meetings of Trump and Asir Muni USA is a dangerous country to world peace


புதிய வீடியோ