உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிங்கப் பெண்கள் ஜாஸ்மின், மீனாட்சி: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்

சிங்கப் பெண்கள் ஜாஸ்மின், மீனாட்சி: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லிவர்பூல்: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இந்தியாவின் ஜாஸ்மின், மீனாட்சி தங்கம் வென்றனர். நுபுர் வெள்ளி, பூஜா வெண்கலம் வென்றனர். இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இந்தியா சார்பில் 20 பேர் உட்பட, 65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள் பங்கேற்றனர். 57 கிலோ பிரிவு பைனலில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா 21, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற போலந்தின் ஜூலியாவை எதிர்கொண்டார். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார் ஜாஸ்மின். மூன்று சுற்று முடிவில், 5 நடுவர்களில் 4 பேர் ஜாஸ்மினுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினர். முடிவில் ஜாஸ்மின் 4-1 என (30-27, 29-28, 30-27, 28-29-29-28) வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றி, உலக சாம்பியன் ஆனார். மீனாட்சி அபாரம் பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவு பைனலில் இந்தியாவின் மீனாட்சி ஹூடா, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற, மூன்று முறை உலக சாம்பியன் ஆன, கஜகஸ்தானின் நஜிம் கைஜய்பேவை எதிர்கொண்டார். இதில் மீனாட்சி, 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, புதிய சாம்பியன் ஆனார். நுபுர் 'வெள்ளி' பெண்களுக்கான 80+ கிலோ எடைப் பிரிவு பைனலில் இந்தியாவின் நுபுர் ஷியோரன், போலந்தில் அகட்டாவை சந்தித்தார். இதில் சமமான போட்டியை வெளிப்படுத்திய போதும், நுபுர் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. பூஜா 'வெண்கலம்' 80 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பூஜா, பாரிசின் எமிலி அஸ்குய்த்தை சந்தித்தார். இதில் பூஜா 1-4 என தோல்வியடைந்து, வெண்கலம் கைப்பற்றினார். இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கம் வென்றது.

சாக் ஷி வழியில்...

குத்துச்சண்டை குடும்பத்தை சேர்ந்தவர் ஹரியானாவின் ஜாஸ்மின். இவரது மாமா சந்தீப், பர்விந்தர் என இருவரும் முன்னாள் தேசிய சாம்பியன்கள். கடந்த 2016, ரியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் சாக் ஷி வெண்கலம் வென்ற போது ஜாஸ்மின், 10 வது படித்துக் கொண்டிருந்தார். அப்போது, 'விளையாட்டில் பெண்கள் சாதிக்கின்றனர். நீயும் முயற்சி செய்,' என மாமா தெரிவிக்க, குத்துச்சண்டையில களமிறங்கினார். பாரிஸ் ஒலிம்பிக் முதல் சுற்றில் தோற்றாலும், தற்போது உலக சாம்பியனாகி உள்ளார்.

மூன்றாவது வீராங்கனை

அன்னிய மண்ணில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்தியாவின் மூன்றாவது, நான்காவது வீராங்கனை என ஜாஸ்மின், மீனாட்சி பெருமை பெற்றனர். முன்னதாக மேரி கோம், நிஹாத் ஜரீன் இதுபோல சாதித்தனர். * தவிர உலக குத்துச்சண்டையில் சாம்பியன் ஆன 9வது (ஜாஸ்மின்), 10வது (மீனாட்சி) இந்திய வீராங்கனை ஆகினர். முன்னதாக மேரி கோம் (6 முறை, 2002, 2005, 2006, 2008, 2010, 2018), நிஹாத் ஜரீன் (2 முறை, 2022, 2023), சரிதா தேவி (2006), ஜென்னி (2006), லேஹா (2006), நீத்து கங்ஹாஸ் (2023), லவ்லினா (2023), சவீட்டி (2023) தங்கம் வென்றுள்ளனர்.

ஆட்டோ டிரைவர் மகள்

ஹரியானாவின் ரூர்கி என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர் மீனாட்சி ஹூடா 24. இரண்டு அக்கா, ஒரு அண்ணன் உள்ளனர். இவரது தந்தை ஸ்ரீகிருஷ்ணன் ஹூடா, வாடகை ஆட்டோ டிரைவர். கடந்த 2013ல் விஜய் ஹூடா என்பவர், 'ஆபத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், குழந்தைகளுக்கு குத்துச்சண்டை கற்றுக் கொடுத்தார். இதைப் பார்த்த மீனாட்சி, 2018ல் இங்கு சேர முடிவெடுத்தார். 'மகளின் விளையாட்டுக்கு தகுந்த உணவு உட்பட மற்ற வசதிகளை செய்து தர முடியாது,' என்பதால் தந்தை எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் பயிற்சியாளர் விஜய், அனைத்து உதவியும் செய்ய, முதல் தொடரில் சாதனை படைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Yasararafath
செப் 15, 2025 18:46

பெண்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்க கூடாது.


Ramesh Sargam
செப் 15, 2025 13:13

பதக்கம் வென்ற அணைத்து வீரப்பெண்மணிகளுக்கும் வாழ்த்துக்கள்.


SUBBU,MADURAI
செப் 15, 2025 10:07

என்னை குற்றம் சொல்லும் நீ மட்டும் ஜாதி மதம் குலம் கோத்திரம் பார்க்காமல் இருப்பவனாக இருந்தால் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஓங்கி குரல் கொடுக்கும் நீ பெஹல்காம் தாக்குதலில் பலியான இந்துக்களுக்கு ஏன் உன் கண்டன குரலை இதுவரை கொடுக்கவில்லை உனக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி என்னை எதிர்த்து எதிர்வாதம் பண்ண உன் பாட்டன் Aurangzeb உயிரோடு வந்தாலும் முடியாது.


karthikeyan
செப் 15, 2025 09:15

வாழ்க நமது பெண்கள், மேலும் வளர வேண்டும்.


SUBBU,MADURAI
செப் 15, 2025 06:35

ஹிந்தி மொழி பேசும் ஹரியானாவின் ரூர்கி என்கிற சிறிய கிராமத்தில் ஆட்டோ ஓட்டும் ஒரு டிரைவர் தன்னுடைய மகளுக்கு மதுரை மீனாட்சி அம்மனின் பெயரான மீனாட்சி என்று பெயரை வைத்து இருக்கிறார் இதிலிருந்து என்ன தெரிகிறது இந்தியா என்பது ஒரு ஆன்மீக பூமி இந்த பூமியில் வடக்கு தெற்கு என்கிற பேதமில்லை இமயம் முதல் குமரி வரை காசி முதல் இராமேஸ்வரம் வரை பாரதம் என்கிற இந்த நாடு இந்துக்கள் வாழ்ந்த புண்ணிய பூமி என்பது இதன் மூலம் ஊர்ஜிதமாகிறது.


பாலா
செப் 15, 2025 07:52

பஞ்சாப் ஹரியானாவில் பெண்கள் பெயர் மீனாட்சி என வைப்பது சாதாரணம்.


ராஜாராம்,நத்தம்
செப் 15, 2025 08:11

ஏலே அது சாதாரணமாகவே இருந்தாலும் மீனாட்சி என்ற பெயரை கேட்டவுடன் ஞாபகத்துக்கு வருவது எந்த ஊர் அந்தப் பெயர் எப்படி அங்கே சூட்டப் படுகிறது என்பதை உன்னைப் போன்ற ஞான சூனியங்களால் புரிந்து கொள்ள முடியாது.


Haja Kuthubdeen
செப் 15, 2025 09:30

ஒவ்வொரு விசயத்திலும் ஜாதி மதம் குலம் கோத்திரம் எல்லாம் பார்த்தே கருத்தா??? பதக்கங்கள் வென்ற வீர மங்கையர்களுக்கு வாழ்த்துக்கள் இல்லையா!!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை