உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டது; 15 பேர் பலி; 18 பேர் காயம்

போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டது; 15 பேர் பலி; 18 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லிஸ்பன்: போர்ச்சுகல் நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க கேபிள் கார் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில், 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயம் அடைந்தனர்.ஐரோப்பிய நாடான போர்ச்சுகல்லின் தலைநகர் லிஸ்பனில் குளோரியா புனிகுலர் ரயில் பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. குளோரியா புனிகுலர் ரயில், நகரத்தின் வரலாற்று சின்னமாகும். சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இவர்களை அடையாளம் காணும் நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 18 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 5 பேர் நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து போர்ச்சுகல் அரசு தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

சோகமான நாள்

லிஸ்பன் மேயர் கார்லோஸ் மொய்டாஸ் கூறியதாவது: எங்கள் நகரத்திற்கு இது சோகமான நாள். லிஸ்பன் துக்கத்தில் மூழ்கி உள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Azar Mufeen
செப் 04, 2025 17:07

திருட்டு திமுககாரன், திருட்டு பிஜேபி காரன் சேர்ந்து காண்ட்ராக்ட் பன்னி பணம் பாத்துருப்பானுங்க


தியாகு
செப் 04, 2025 07:06

நல்லா விசாரிங்க, போர்ச்சுக்கலில் குடியேறிய கட்டுமர திருட்டு திமுககாரன் எவனாவது காண்ட்ராக்ட் எடுத்து எதையாவது தரம் இல்லாமல் கட்டி கொடுத்திருப்பான். ஏன்னா, அவனுங்க டிசைன் அப்படி.


சமீபத்திய செய்தி