உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுக்கு கூடுதல் எஸ் 400 வான் பாதுகாப்பு கவசம்: பேச்சு நடப்பதாக ரஷ்யா அறிவிப்பு

இந்தியாவுக்கு கூடுதல் எஸ் 400 வான் பாதுகாப்பு கவசம்: பேச்சு நடப்பதாக ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ: இந்தியாவுக்கு கூடுதலாக எஸ் 400 வான் பாதுகாப்பு கவச அமைப்புகளை வழங்க பேச்சு நடத்தி வருவதாக ரஷ்யா கூறி இருக்கிறது. எஸ் 400 என்பது ரஷ்யா உருவாக்கிய வான் பாதுகாப்பு கவச அமைப்பு ஆகும். அதிநவீன தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட இந்த கவச அமைப்பு, உலகின் முதன்மையான வான் பாதுகாப்பு ஆயுதமாக பார்க்கப்படுகிறது.இந்த கவச அமைப்புக்கு இந்தியா சுதர்சன சக்கரம் என்று பெயர் சூட்டியுள்ளது.அண்மையில், பஹல்காம் சம்பவத்தைத் தொடர்ந்து, பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது.இதை எதிர்த்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை தாக்குதல், ட்ரோன் தாக்குதல்களை எஸ் 400 வான் பாதுகாப்பு கவச அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது.வான்வெளியில் 600 கிமீ தொலைவில் இருந்து வரும் எதிரி ஏவுகணையை 400 கிமீ தூரம் வரை வானில் இடைமறித்து தாக்கும் திறன் கொண்டது இந்த கவச அமைப்பு.இந்தியா ஏற்கனவே 5 எண்ணிக்கையிலான எஸ் 400 கவச அமைப்புகளை வாங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி 3 எண்ணிக்கை எஸ் 400 கவச அமைப்புகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு விட்டன.உக்ரைன் போர் காரணமாக மீதமுள்ள இரண்டு எஸ் 400 கவச அமைப்புகளை இந்தியாவுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து கூடுதலான எஸ் 400 கவச அமைப்புகளை வாங்க இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது.இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரஷ்யா ராணுவ பாதுகாப்பு தொழில்நுட்ப தலைவர் டிமிட்ரி ஷூகாயேவ் கூறி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஏற்கனவே எஸ் 400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இந்தியா வாங்கி இருக்கிறது. தற்போது புதிய வினியோகங்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்றார்.முன்னதாக, இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் ரஷ்யா முன்னணியில் உள்ளது, 2020 -2024ம் ஆண்டுகளில் இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 36 சதவீதம் என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் குறிப்பிட்டு இருந்தது, கவனிக்கத்தக்கது.

கூடுதல் சலுகை

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்திய நிறுவனங்கள் நிறுத்தவில்லை. சமீபத்தில் சீனா சென்றிருந்த பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசியிருந்தார். இந்நிலையில், இந்தியாவுக்கு இன்னும் சலுகை காட்ட அளிக்க ரஷ்யா முன்வந்துள்ளது. இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு கூடுதலாக 3 முதல் 4 அமெரிக்க டாலர் விலையை குறைக்க அந்நாடு முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ManiMurugan Murugan
செப் 03, 2025 22:21

அருமை


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 03, 2025 10:55

ரொம்ப சிம்பிள். கச்சா எண்ணெய் குறைந்த விலையில் வாங்கும்போது கிடைக்கும் டிஸ்கவுண்ட் பணத்தை ஓரளவு ரஷ்யாவிற்கு திரும்ப கொடுக்க ஒரு வாய்ப்பு. எஸ் 400 விலையை ஏற்றிவிட்டால் போதும். இந்தியா வாங்கும் விலையை உதாரணமாக காட்டி மற்ற நாடுகளுக்கு அதே விலைக்கு அல்லது அதிக விலைக்கு ரஷ்யாவால் எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பை விற்க முடியும். நண்பனுக்கு நண்பன் உதவுவது என்பது இதுதான். நண்பேன்டா.


அப்பாவி
செப் 03, 2025 10:31

நமக்கு வான் கவசம் வித்தாதான் அங்கே ரஷிய பொருளாதாரம் ஓடும். இந்தியாவுக்கு ஆயில் விற்பதால் நஷ்டம்தான்.


Anand
செப் 03, 2025 10:49

கூறுகெட்டவன் ஒருவனால் தான் இப்படிப்பட்ட கருத்தை பதிவு செய்ய முடியும்.


Shivakumar
செப் 03, 2025 11:09

நீ ஒரு தற்குறி என்று தெரியுது.


vivek
செப் 03, 2025 11:40

அப்பாவி அறிவாளி என்று யாருக்கும் தெரிவதில்லை


Artist
செப் 03, 2025 11:56

வான் கவசத்துக்கு பதில் அந்த கவசம் கொடுத்திருக்கலாம்


Yaro Oruvan
செப் 03, 2025 16:07

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்கும் கும்பல் இப்படித்தான் பேசும்.. அப்பாவி இல்லடா அடப்பாவி ...


Ramesh Sargam
செப் 03, 2025 09:40

இந்தியாவும், ரஷ்யாவும் போட்டிபோட்டுக்கொண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வெறுப்பேற்றிக்கொண்டிருக்கிறார்கள். டிரம்ப் அடுத்து என்ன செய்யபோகிறாரோ...?


Shivakumar
செப் 03, 2025 11:10

டிரம்ப் கடுப்பாகி பாக்கிஸ்தான் மேலே போர் தொடுக்க போகிறான்.


முக்கிய வீடியோ