உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நேபாள அதிபர் ராமசந்திர பவுடால் மருத்துவமனையில் அனுமதி

நேபாள அதிபர் ராமசந்திர பவுடால் மருத்துவமனையில் அனுமதி

காத்மாண்டு: நேபாள அதிபர் ராமசந்திர பவுடால், திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ராமசந்திர பவுடால் 80, இவருக்கு இன்று திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, காத்மாண்டுவில் உள்ள மன்மோகன் இருதய ஆராய்ச்சி மற்றும் வாஸ்குலர் மாற்று மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.இது குறித்து அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:ராமசந்திர பவுடாலுக்கு கடுமையான தலைவலி மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டார், அதை தொடர்ந்து அவர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இதுவரை அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது.பவுடால், இன்ற காலை ஜெனரல் இசட் குழுவின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை நடத்தவிருந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, பேச்சுவார்த்தை வரும் திங்கட்கிழமை(அக்டோபர் 13 ல்)அன்று ஒத்திவைக்கப்பட்டது.கடந்த 2023 ஆம் ஆண்டில், மூச்சுத் திணறல் காரணமாக,மார்பு தொடர்பான நோய்க்கு சிகிச்சைக்காக, பவுடால் இந்தியாவிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார், புது டில்லியில் உள்ள எய்ம்ஸில் அவர் சிகிச்சை பெற்றார்.இவ்வாறு அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை