உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எந்த சட்ட மீறலும் இல்லை; அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

எந்த சட்ட மீறலும் இல்லை; அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'தனது நாட்டை காப்பாற்றுவதற்கு எந்த சட்ட மீறலிலும் ஈடுபடவில்லை' என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற முதல்நாளில் இருந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களை கண்டறிந்து நாடு கடத்த உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முனைப்பு காட்டி வருகிறார். ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்றுவதைத் தடை செய்யும் முயற்சிகள் மற்றும் பரஸ்பர வரி உள்ளிட்டவற்றை டிரம்ப் செயல்படுத்தி வருகிறார்.இந்த அதிரடி உத்தரவுகள் விவாதத்தை கிளப்பி உள்ளது. இதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் சமூகவலைதளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 'தனது நாட்டை காப்பாற்றுவதற்கு எந்த சட்ட மீறலிலும் ஈடுபடவில்லை' என டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Appan
பிப் 16, 2025 19:16

ஆனால் டிரம்ப் சொன்னது ,நெப்போலியன் போல் நாட்டின் நல்லதுக்கு சட்டங்களை மீறலாம் என்று பேசி உள்ளார் ..அமெரிக்காவில் அரசு வேலையும் நிரந்தரம் இல்லை ..இந்தியாவும் டிரம்ப் போல் DODGE அமைப்பை உருவாக்கி அரசின் வீணான செலவை தடுக்கலாம் ..


Venkataraman
பிப் 16, 2025 17:05

டிரம்ப் கூறியது போல ஒவ்வொரு நாடும் நடந்து கொண்டால் உலகம் அழிந்து போகும். சண்டையும் சச்சரவும்தான் மிஞ்சும். உலகத்தில் பரப்பளவில், மக்கள் தொகையில், கனிம வளங்களில், இயற்கை வளங்களில் வெவ்வேறு அளவில் ஏற்ற தாழ்வுகள் இருக்கின்றன. ஆப்பிரிக்காவில் கனிம வளங்களும் இயற்கை வளங்களும் ஏராளமாக இருந்தாலும் அந்த நாடுகள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளன. அங்கு ஏழ்மைக்கான காரணம் மக்களின் அறியாமையும், தொடர்ந்து நடைபெறும் உள்நாட்டு போர்களும், நிலையற்ற அரசியலும், அமைதியின்மையும்தான். ஆனால் ஐரோப்பிய வட அமெரிக்க நாடுகள் நல்ல, வளமான முன்னேற்றத்தை கண்டுள்ளன. ஆகவே உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒத்துழைத்தால்தான் உலகம் அமைதியாகவும் வளர்ச்சி பெற்றதாகவும் மாறும்


K B Janarthanan
பிப் 16, 2025 13:30

இந்திய மக்களை அவமானப்படுத்திய அமெரிக்காவிற்கு எந்த துறையிலும் முக்கியத்துவம் அளிக்கக்கூடாது . எற்றுமதியிலும் சரி, இறக்குமதியில் சரி அமெரிக்காவை நம்பி இந்தியா இருக்கக்கூடாது. அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கம் அளிக்கலாம். மேல்படிப்பிற்கு அமெரிக்காவிற்கு செல்ல இந்திய மாணவர்களை அனுமதி வழங்கக்கூடாது .


r ravichandran
பிப் 16, 2025 13:58

திருட்டுத்தனமாக , எந்த வித அனுமதியும் இன்றி ஒரு நாட்டுக்குள் நுழைந்தால் என்ன மரியாதை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அங்கு சிறை தண்டனை கொடுக்காமல் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியது பெரிய விஷயம்.


Kasimani Baskaran
பிப் 16, 2025 14:00

கள்ளதனாக வேறு நாட்டுக்குள் சென்று அங்கு விசா இல்லாமல் ஜாலியாக இருக்கலாம் என்பது இந்தியாவில் சாத்தியம். உலகில் எந்த நாட்டிலும் சாத்தியம் இல்லை. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சிறை மற்றும் பிரம்படி உண்டு.


Oru Indiyan
பிப் 16, 2025 12:22

உங்கள் தாத்தாக்களும் பாட்டிகளும் பாட்டன்களும் முப்பாட்டன்களும் , எத்தனை சிவப்பிந்தியர்களை கொன்று இந்த நாட்டை உங்கள் நாடாக்கி உலகை ஏமாற்றி வாழ்கிறீர்கள்?


Ramesh Sargam
பிப் 16, 2025 11:42

இருந்தாலும், சட்டத்துக்கு விரோதமாக உங்கள் நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களை நீங்கள் அவர்கள் நாட்டுக்கு திரும்ப அனுப்பும் போது, கொஞ்சம்கூட மனிதாபிமானமில்லாமல், அவர்களை சங்கிலியில் கட்டி அனுப்பியது சரியில்லை. அதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும். மற்றபடி கொஞ்சமும் யோசிக்காமல் ஒருசில முடிவுகளை தடாலென்று எடுக்கிறீர்கள். அப்படி செய்யாமல், யோசித்து, சட்டத்திற்கு உட்பட்டு முடிவுகளை எடுப்பது உங்களுக்கு நல்லது.


பேசும் தமிழன்
பிப் 16, 2025 12:14

அந்த நாட்டுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த ஆட்களை தூக்கி உள்ளே போடாமல் திருப்பி அனுப்புவதே பெரிய விஷயம்.... உன் வீட்டில் அந்நியன் யாராவது வந்து இருந்து கொண்டால் நடக்குமா.... அவனை ஒன்றும் செய்யாமல்.... மாலை மரியாதை செய்து அனுப்பி வைப்பாயா ??


Narayanan Muthu
பிப் 16, 2025 12:40

நீங்கள் நல்லா இருக்க மாட்டீர்கள்


subramanian
பிப் 16, 2025 11:33

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருப்பவர்கள் இப்பொழுது அங்கு நான்தான் அமெரிக்கா குடிமகன் என்று சொல்லி கொள்பவன்தான் . பூர்வ குடிகளை கொன்ற பாவிகள்.


V.Mohan
பிப் 16, 2025 20:35

இன்னொரு நாட்டு விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். அது சரி அல்லது தப்புன்னு சொல்ல இந்திய குடிமகன்களுக்கு எந்த -ரைட்டும் இல்ல.. சும்மா செல்போன்ல மோடியை கமெண்ட் அடிக்கிற மாதிரி முடியாது. இத்தாலி மாமியா கும்பல் சோரோஸ் கும்பல் செஞ்ச தப்பை எல்லாம் ஜனநாயக சேவைன்னு உங்க விடியல் சம்பளத்துக்காக கூவுறதை நிறுத்துங்க. எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி பேசாதீங்க .


subramanian
பிப் 16, 2025 11:23

உலக மக்களை ஏமாற்றும் அமெரிக்கா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை