உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது மலேசியா!

பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது மலேசியா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மலேசியா: இந்தியாவுக்கு எதிராக மலேசியா அரசாங்கத்துக்கு பாகிஸ்தான் நயவஞ்சகமாக கடிதம் எழுதி இருக்கிறது. அதை மலேசிய அரசு ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் வெடித்தது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை இந்தியா குண்டு வீசி தகர்த்தது. சண்டைக்கு வந்த பாகிஸ்தானின் ராணுவ தளங்களையும் ஏவுகணைகளை வீசி சிதைத்தது. 4 நாட்கள் நடந்த போரில் இந்தியாவின் பதிலடியை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் சரண் அடைந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rsgwi2zy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பயங்கரவாதிகளை வளர்த்தெடுக்கும் பாகிஸ்தானின் முகத்தை தோலுரித்து காட்டவும், இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை புரிய வைக்கவும் 33 நாடுகளுக்கு அனைத்து கட்சி எம்பிக்கள் குழுக்களை இந்தியா அனுப்பி வைத்தது. ஜேடியு எம்பி சஞ்சய் ஜா தலைமையிலான 9 எம்பிக்கள் குழு, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், இந்தோனேசியா நாடுகளை தொடர்ந்து கடைசி நாடாக சனிக்கிழமை மலேசியா வந்திறங்கியது.மலேசியாவின் மக்கள் நீதி கட்சி தலைவர்கள், அரசாங்க தலைவர்கள், சபாநாயகர் ஜோகாரி அப்துல் உட்பட பல தலைவர்களை சந்தித்து பேசினர். ஆபரேஷன் சிந்தூரில் என்ன நடந்தது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் செய்த கொடூர சம்பவங்கள் என்னென்ன, இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை நம் குழுவினர் விளக்கினர்.அதே போல் இந்திய வம்சாவளியினர் மத்தியிலும் பேசினர். அப்போது, ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் இந்தியாவுடன் பாகிஸ்தான் ஒப்படைக்க முன்வந்தால் மட்டுமே அதனுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றனர். மலேசியா சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு, நம் குழுவினர் நாடு திரும்பி விட்டனர்.

கடிதம்

இந்நிலையில் தான் பாகிஸ்தான் பார்த்த ஒரு சதி வேலை இப்போது வெளியாகி அதிர வைத்துள்ளது. அதாவது, நம் குழுவினர் போகும் முன்பு மலேசியா அரசாங்கத்துக்கு பாகிஸ்தான் நயவஞ்சகமாக கடிதம் எழுதி இருக்கிறது.அதில், ‛ஐ.நா.,வில் காஷ்மீர் விஷயம் இருக்கிறது. எனவே இந்திய தூதுக்குழுவினரின் 10 நிகழ்ச்சிகளையும் மலேசியா அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும். நாங்கள் ஒரு முஸ்லிம் நாடு. நீங்களும் முஸ்லிம் நாடு தான். எனவே இந்திய குழுவினரின் பேச்சை கேட்காதீர்கள். அவர்களது நிகழ்ச்சிகளை ரத்து செய்யுங்கள்' என்று பாகிஸ்தான் சொல்லி இருக்கிறது.பாகிஸ்தான் சொல்வது போல் மலேசியாவில் முஸ்லிம்கள் தான் மெஜாரிட்டி. கிட்டத்தட்ட 65 சதவீதம் பேர் முஸ்லிம்கள். அனைவருமே சன்னி முஸ்லிம் தான். பாகிஸ்தானில் மெஜாரிட்டியாக இருப்பவர்களும் சன்னி முஸ்லிம்கள் தான். எனவே தான், தங்கள் பயங்கரவாத முகத்தை மறைக்க பாகிஸ்தான் மதத்தை ஆயுதமாக கையில் எடுத்தது.

ஏற்க மறுப்பு

ஆனால் அது எடுபடவில்லை. பாகிஸ்தானின் நயவஞ்சக செயலை மலேசியா அரசாங்கம் ஏற்காமல் இந்தியா பக்கம் நின்றது. பாகிஸ்தான் கடிதத்தை முற்றிலும் நிராகரித்தது. இந்தியாவின் தூது குழுவினருக்கு பச்சைக்கொடி காட்டியது. 'நாங்களும் முஸ்லிம் நாடு நீங்களும் முஸ்லிம் நாடு' என்ற பாகிஸ்தானின் நயவஞ்சகம் நொறுங்கிப்போனது. மூக்குடைந்து நிற்கும் நிலைமையை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

K r Madheshwaran
ஜூன் 05, 2025 08:22

நடுத்தர நிலையில் உள்ள சமூக நோக்கில் செயல்படும் பாகிஸ்தான் நாடு அங்கு வரும் ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டு மக்களை நினைத்து அவர்களுக்காக ஆட்சியை அமைக்காமல் ஜாதி இனம் மொழி தீவிரவாதம் குறுகிய மனப்பான்மை என்று செயல்படுவது உயிர்களை நினைக்காமல் மதிக்காமல் கேவலமான செயல்களாலும் அவர்கள் நாட்டு ராணுவ நடவடிக்கைகளாலும் நாடு சுடுகாடாகிகொண்டு இருக்கிறது அவர்களுக்கு எப்போது புத்தி வருமோ?


ஆரூர் ரங்
ஜூன் 04, 2025 18:22

ஏர்செல் மேக்சிஸ் குற்றவாளிகளை காப்பாற்றியது மலேசிய அரசு அரசியல்வாதிகளகளே. இவர்கள் எதையும் காரணமின்றி ஆதரிக்க/ எதிர்க்க வாய்ப்பில்லை.


S.L.Narasimman
ஜூன் 04, 2025 17:11

இவிங்க மத வெறிக்கு அளவே இல்லை. அதனால் என்னவோ ஒரு கூட்டத்துக்கு பாக்கிசுதான் ரொம்பவே பிடிக்கிறது.


Easwar Kamal
ஜூன் 04, 2025 16:42

பாகிஸ்தன உங்கள் கண்ணில் பாடுகின்றதா நம்ம sideleyae இருக்கானே கர்நாடககாரன் அவனை அடக்கி வைக்க முடிகிறதா? ஒரு சின்ன சொல்லுக்கு அந்த மொத மாநிலமே பொங்கி எழுகிறது அந்தகுல நீதி மன்றம் வரைக்கும் அரிசியியல்vadigal என்ன சொல்லுறானுவளோ அதையே நீதி மன்றம் சொல்லுகிறது. முதலில் இவனுங்களை இந்திய ஒற்றுமை என்றல் என்ன பாடம் எடுக்கணும் அ


தத்வமசி
ஜூன் 04, 2025 15:32

ஏற்கனவே இந்தியாவிடம் மூக்குடை பட்டது தான் மலேஷியா. அதற்காக ஒரு தலைவரையே தியாகம் செய்ய வேண்டியதாகி விட்டது. இன்றைய காலகட்டத்தில் வியாபாரம் தான் முக்கியமான தலைப்பு. அதனால் இந்தியாவை மீண்டும் பகைத்து கொள்ள மலேஷியா விரும்பவில்லை.


Raja k
ஜூன் 04, 2025 15:03

அடடா,,, சின்ன குழந்தைகூட சிரிக்கும் இதுமாறி செய்திகளை படித்து,, இதுபோன்ற கதைகதையாம் காரணமாம் கற்பனைகளையெல்லாம் செய்தியாக போட்டு, யாருக்கு பெருமை பீற்றிக் கொள்கிறது,,, நாடுநாடா,, ஒரு நாடு விடாமல் சுத்தி வந்தவராயிற்றே , இப்போது எம்பி குழுவை ஊர்ஊரா அனுப்புகிறது,, எந்த நாடு சப்போர்ட்டுக்கு வந்துச்சு,


Anand
ஜூன் 04, 2025 15:52

நம் நாடு பாகிஸ்தானை தாக்கியது ஏன், எப்படி மண்டியிட வைத்தது அதனால் என்ன என்ன சாதித்தது என்பதை தோலுரித்து காட்டவே சென்றது, மதத்தின் அடிப்படையில் நாட்டை தேர்வு செய்து போகவில்லை. உன்னோட கழிசடை மூர்க்கம் தான் நாடு நாடா திருவோட்டை ஏந்தி செல்கிறது, அதுவும் மதத்தை முன்னிறுத்தி, சீந்துவார் எவருமில்லை, இதெல்லாம் பொழப்பு, அவனுக்கு முட்டுக்கொடுக்கும் நீயெல்லாம்.....என்ன ஜென்மங்களோ.


Suppan
ஜூன் 04, 2025 16:37

. துருக்கி, அஜர்பேஜான் தவிர அநேகமாக வேறு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் அமேரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா உட்பட பல நாடுகள் நேரடியாகவே இந்தியாவை இந்த விஷயத்தில் ஆதரிக்கின்றன .


Suppan
ஜூன் 04, 2025 16:39

ஒரு தேசத்துரோகியிடமிருந்துதான் இந்த மாதிரி கருத்து பிறக்கும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 04, 2025 15:03

மதத்தைக் கையிலெடுப்பது அருவருப்பானது .....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 04, 2025 14:57

மூர்க்க கின்சிர்களுக்கு ஏமாற்றமளிக்கும் செய்தி .........


பெரிய குத்தூசி
ஜூன் 04, 2025 14:41

மலேஷியா அவொளவு நல்ல நாடு கிடையாது. மலேஷியா , துருக்கி , பாகிஸ்தான் மூன்றுநாடுகளும் மாமன் மச்சான் போல. பிரதமர் மோடிக்காக, பாமாயில் பிசினஸ் க்கு அடி வந்துடுமோனு மோடிக்கு பயந்து நமது விளக்கத்தை பெற சம்மதித்திருப்பார்கள். மற்றபடி அது ஒரு கடுமையான இஸ்லாமி ஆதரவு நாடு. மலேஷியாவில் இந்திய காரன் சட்டவிரோதமான குடியேறி பிடிபட்டா ஜெயில், பாகிஸ்தான் காரன் விசா இல்லாமல் சுமார் 8 லட்சம் பேர் மலேசியாவில் உலவுறான், அவனை பிடிச்சா ஓ பாகிஸ்தானி பையா. சுக்ரியானு மலேஷிய போலீஸ் கைது பண்ணாம விட்ருவான். மலேஷிய போலீஸ் க்கு காபிக்கு 5 வெள்ளி குடுத்த போதும் நம்ம போலீசை விட மோசமான லஞ்ச பேய்.


Anand
ஜூன் 04, 2025 17:11

//பாகிஸ்தான் காரன் விசா இல்லாமல் சுமார் 8 லட்சம் பேர் மலேசியாவில் உலவுறான், அவனை பிடிச்சா ஓ பாகிஸ்தானி பையா. சுக்ரியானு மலேஷிய போலீஸ் கைது பண்ணாம விட்ருவான்// நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் மலேசியா வெகு விரைவில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஏமன், பாலஸ்தீனம் போன்ற நாடுகள் போல அசுர வளர்ச்சி பெற்றுவிடும் போல் தெரிகிறது .... வாழ்த்துக்கள்.


N.Purushothaman
ஜூன் 04, 2025 14:37

பாகிஸ்தான் ஒரு மானங்கெட்ட நாடு ....