உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய அரசியலமைப்பின் சக்தி: நமீபிய பார்லியில் பிரதமர் மோடி பெருமிதம்

இந்திய அரசியலமைப்பின் சக்தி: நமீபிய பார்லியில் பிரதமர் மோடி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விந்தோக் : ''ஏழை பழங்குடியினத்தை சேர்ந்த மகள், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவராக இருப்பது இந்திய அரசியலமைப்பின் சக்தி. ஏழை குடும்பத்தில் பிறந்த என்னை போன்ற ஒருவருக்கு மூன்று முறை பிரதமராக வாய்ப்பு கிடைத்தது அரசியலமைப்பின் சக்தி,'' என நமீபியா பார்லிமென்டில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.வரவேற்பு5 நாடுகள் பயணத்தில் கடைசியாக பிரதமர் மோடி நமீபியா சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நமீபியா பார்லிமென்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். பார்லிமென்ட்டுக்கு வந்த பிரதமர் மோடியை அந்நாட்டு எம்.பி.,க்கள் எழுந்து நின்று வரவேற்றனர்.இந்திய மக்களின் ஆசிதொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: ஜனநாயகத்தின் கோவிலான இந்த அவையில் பேசுவது எனக்கு பெருமை அளிக்கிறது. இந்த பெருமையை அளிப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் தாயாக விளங்கும் நாட்டின் பிரதிநிதியாக, 140 கோடி இந்திய மக்களின் ஆசிகளை உங்கள் முன் கொண்டு வந்துள்ளேன்.பகிர்கிறோம்நமீபியாவில் முதல் பெண் அதிபரை தேர்வு செய்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரலாற்று சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலும் பெண் ஜனாதிபதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். உங்களின் மகிழ்ச்சியையும் பெருமையையும் பகிர்ந்து கொள்கிறோம். ஏழை பழங்குடியினத்தை சேர்ந்த மகள், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவராக இருப்பது இந்திய அரசியலமைப்பின் சக்தி. ஏழை குடும்பத்தில் பிறந்த என்னை போன்ற ஒருவருக்கு மூன்று முறை பிரதமராக வாய்ப்பு கிடைத்ததும் அரசியலமைப்பின் சக்தி. காலத்தை கடந்துஇரு நாட்டு மக்களின் நட்புகளை பிரதிபலிக்கும் வகையில் விளங்கும் நமீபியாவின் உயரிய விருதை பெற்றுக் கொள்வதில் மகிழ்ச்சி. நமீபியாவின் கடினமான மற்றும் நேர்த்தியான தாவரங்களை போல், நமது நட்பும் காலத்தை கடந்து நிற்கிறது. மேலும். உங்களின் தேசிய தாவரத்தைபோல், காலத்திற்கு ஏற்ப வலுவடைகிறது.இந்தியாவின் யுபிஐ தொழில்நுட்பத்தை ஏற்ற முதல் நாடாக நமீபியா இருப்பது மிகழ்ச்சி. நமது இரு தரப்பு வர்த்தகம் 800 மில்லியன் டாலரை கடந்துள்ளது. கிரிக்கெட் மைதானத்தை போல் நாம் தற்போது பயற்சி மேற்கொள்கிறோம். இது விரைவில் அதிகரிக்கும்.மருந்துகள்கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஆப்ரிக்காவுக்கு மருந்துகளை வழங்கி ஆதரவாக இருந்தோம். இந்தியாவின் ஆரோக்கிய மந்திரி புதுமை ஆதரவு திட்டத்தின் கீழ் ஆப்ரிக்காவுக்கு மருத்துவமனைகள், கருவிகள், மருந்துகள் , பயிற்சிகள் ஆகியவற்றை வழங்கி உதவினோம். புற்றுநோய் சிகிச்சைக்கு தேவையான உதவிகளை நமீபியாவுக்கு வழங்க இந்தியா தயாராக இருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் 15 நாடுகளில் பயன்படுகிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.அதிகாரத்தால் அல்ல. ஒத்துழைப்பால் வரையறுக்கப்பட்ட எதிர்காலத்தை உருவாக்குவோம். ஆதிக்கத்தால் அல்ல, சமத்துவத்தினால் எதிர்காலத்தை உருவாக்குவோம். இதுவே நமது தொலைநோக்குப் பார்வையின் உணர்வாக இருக்கும். நாம் போராடிய சுதந்திரத்தை மட்டுமல்ல, நாம் ஒன்றாகக் கட்டியெழுப்பும் எதிர்காலத்தையும் நமது மக்கள் பெறட்டும். இவ்வாறு மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Durai Kuppusami
ஜூலை 10, 2025 08:46

மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் ஒரு மாற்று குறையாத மன்னவன் நீ என்று போற்றிபுகழவேண்டும்... இப்பாடல் பாடிய நம் தலைவனுக்கு பொருந்தும்... உலகின் பல நாடுகளில் சென்று நம் பாரத பூமியின் ஏற்றத்தை உலக நாடுகள் அறிந்து கொள்ள அயராது பாடுபடும் நம் பாரத பூமியின் மாபெறும் தலைவர் நம் பிரதமருக்கும் இப்பாடல் சாலவே பொருந்தும்.....


அப்பாவி
ஜூலை 10, 2025 08:06

ஏதோ நம்ம ஊர்லதான் பார்லிமெண்ட் ஜனநாயகம்லாம் இருக்குறமாதிரி பேச்சு.


Kasimani Baskaran
ஜூலை 10, 2025 04:01

மற்ற நாடுகளுக்கு இந்தியாவின் நல்லெண்ணம், நட்புறவெல்லாம் தெரிகிறது. உள்நாட்டில் உள்ள ஒரு கோஷ்டிக்கு மட்டும் தெரியவில்லை என்பது மகா துரதிஷ்டவசமானது.


தாமரை மலர்கிறது
ஜூலை 09, 2025 22:41

உலகின் ஜனநாயக தலைமகனாக இந்தியா திகழ்கிறது. தேர்தல் கமிஷனுக்கு பாராட்டுக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை