உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுடன் அமைதி பேச்சுக்கு தயார்: பாக்., பிரதமர் அறிவிப்பு

இந்தியாவுடன் அமைதி பேச்சுக்கு தயார்: பாக்., பிரதமர் அறிவிப்பு

டெஹ்ரான்: ஈரான் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அந்நாட்டு அதிபருடனான சந்திப்புக்கு பின், இந்தியாவிடம் அமைதி பேச்சு நடத்த தயார் என அறிவித்து உள்ளார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின், ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதில், பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. இந்நிலையில், பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மேற்காசிய நாடான ஈரானுக்கு நேற்று சென்றார். அவருடன் ராணுவ தளபதி சையத் அசீம் முனிரும் சென்றார். முதலில், அந்நாட்டு தலைவர் அயதுல்லா சையத் அலிகமேனியை சந்தித்து ஷெரீப் பேச்சு நடத்தினார். பின்னர், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் ஆலோசனை நடத்தினார். இரு தலைவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “காஷ்மீர் பிரச்னை, நதிநீர் பகிர்வு, வர்த்தகம் என நீண்டகாலமாக நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், இந்தியாவுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளோம். நாங்கள் அமைதியை விரும்பினோம். ''இப்போதும் அமைதியையே விரும்புகிறோம். எங்கள் அமைதி வாய்ப்பை அவர்கள் ஏற்றுக் கொண்டால், நாங்கள் உண்மையிலேயே அமைதியை விரும்புகிறோம் என்பதை நேர்மையாகவும், தீவிரமாகவும் எடுத்துக் காட்டுவோம்,” என்றார்.இதைத் தொடர்ந்து, அயதுல்லா சையத் அலிகமேனி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், 'பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதல்கள் முடிவுக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னைகள் பேச்சு வாயிலாக தீர்க்கப்படும் என நம்புகிறோம்' என, தெரிவித்துள்ளார். ஈரானை தொடர்ந்து தஜிகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு ஷெரீப் செல்லவுள்ளார். இந்தியாவுடனான மோதல் விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி ஈரான் அதிபரிடம், பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தியபோது, அதற்கு, ஈரான் அதிபர் நேரடியாக பதில் அளிக்காமல், பேச்சுவார்த்தை வாயிலாக பிரச்னையை பேசி தீர்க்கும்படி கூறினார். இதனால், ஷெபாஸ் ஷெரீப் ஏமாற்றம் அடைந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

c.mohanraj raj
மே 28, 2025 21:18

இவர்கள் என்ன பேசப் போகிறார்கள் இந்தியாவிடம் நடந்தது நடந்தது தான் விட்டுவிடலாம் தண்ணீர் எக்காரணத்தை கொண்டும் விடக்கூடாது


Venkatesan
மே 28, 2025 14:38

உலகில் கச்சா எண்ணை இருப்பு பெரும்பாலும் மத்திய வளைகுடா நாடுகளில் தான் உள்ளது. அதனால் தான் இந்த ஆட்டம். அதெப்படி பணக்கார இஸ்லாமிய நாடுகள் எல்லாம் டிக்கியையும் பானெட்டையும் மூடிக்கிட்டு அமெரிக்கா கிட்ட முட்டி போட்டு இருக்கான் ஆனா இந்த பிச்சைக்கார பயலுவ அடிச்சிக்கிட்டு சாவுறானுங்க?


Naga Subramanian
மே 28, 2025 13:39

சபாஷ் மாமாக்கு ரொம்பவே குசும்பு அதிகம். அமைதி பேச்சு வார்த்தை பேசணுமாம் ஒருவேளை, காஷ்மீர் முழுவதையும் கொடுத்துட்டா அமைதியாயிடுவாங்களோ என்னமோ செருப்பால அடிக்கணும்


Narayanan
மே 28, 2025 11:25

பாகிஸ்தான் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் வரை இரண்டு நாடுக்குக்கும் நிம்மதி இல்லை . பாகிஸ்தான் இந்தியநாட்டின் பிடித்துவைத்திருக்கும் பாகங்களைபகுதியை கொடுத்துவிட்டு பிறகு பேச்சுவார்த்தை நடத்தலாமே . அதே சமயம் பாகிஸ்தானில் வாழும் இந்தியர்களுக்கு அமைதியான வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளியுங்கள். போர் நிறுத்தம் அறிவித்தபிறகு இந்திய ராணுவம் அமைதியாக இருக்கும் போது உங்களின் தொடர் போர் என்ன செய்தியை அளிக்கிறது? சிந்தனை செய்யுங்கள் . அத்துடன் உங்களின் அரசு எப்படி தீவிரவாதிகளுக்கு துணைநிற்கிறது ?


Nathan
மே 28, 2025 11:06

எப்ப ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியே போறியோ அப்போது தான் அமைதி பேச்சு வார்த்தை துவங்கும் அதனால நீ முதலில் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு வெளியே போ அப்புறம் மத்த விஷயங்கள் பத்தி பேசி தீர்த்துக் கொள்ளலாம்


மே 28, 2025 10:42

தமிழக முதல்வர் ஸ்டாலின் நடத்திய பேரணியைக்கண்டு உலகமே அதிர்ந்தது .. உலக தலைவர்கள் பலர் ஸ்டாலினுடன் தொடர்பில் இருந்தபடியே இருந்தனர் ..ஏற்கனவே உக்ரேனிலிருந்து தமிழக மாணவர்களை மீட்ட ஸ்டாலினின் வீரத்தை கண்டு .அதன் விளைவாக பயந்துபோன பாக்கிஸ்தான் பிரதமர் இந்தியாவுடன் அமைதி பேச்சுக்கு தயார் என அறிவித்தார் ... இதை ஏன் ஊடகங்கள் மறைகின்றது என்று தெரியவில்லை ...


rasaa
மே 28, 2025 10:11

இவர்களை நம்பவேகூடாது. இஸ்லாமியர்களின் நன்றியுணர்வு தொண்டைக்குழிவரைதான். நன்றிகெட்ட மதவெறிபிடித்தவர்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 28, 2025 09:57

கின்சிர்ஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீரையும், அங்குள்ள தீவிரவாதிகளையும் ஒப்படைத்தால் பேச்சு வார்த்தை நடத்தலாம் ..... அப்போதும் தீவிரவாதத்தை கின்சிர்ஸ்தான் வளர்ப்பது குறித்தே டாபிக் இருக்கும் .....


sankaranarayanan
மே 28, 2025 09:54

அமைதி பேச்சு வார்த்தைக்கு இவர் மட்டும் ஈரானுக்கு சென்றால் போதாதா எதற்காக பாகிஸ்தான் ராணுவ அராஜக தளபதியும் அவர்கூட செல்ல வேண்டும் அப்படி என்றால் எல்லா தீர்வுகளும் பாகிஸ்தானில் ராணுவ தளபதிக்கு தெரிந்துதான் அவர் சம்மதம் பெற்றுதான் நடக்கிறது என்பது தெள்ள தெளிவாகின்றது இது என்ன நாடா அல்ல நரகமா மக்களே சொல்லுங்கள்


V Venkatachalam
மே 28, 2025 09:31

ஈரான் நேரடியாக பதில் சொல்ல வில்லை. அதுவே பாக்கிக்கு கரியை பூசியது போல்தான். அப்புறமா தான் பாக்கிஸ் பேச்சு வார்த்தை ன்னு வாயை திறந்திருக்கு. தலைக்கு மேல் தண்ணீர் பிரச்சினை இருக்கு. இருக்கற பாதி பேருக்காவது தண்ணீர் வேணுமே.. அதுக்குதான் அமைதிய வேணுங்கிறான். அவன் வாலை ஓட்ட நறுக்கிய பின்னர் தான் பேச வேண்டும்.


சமீபத்திய செய்தி